விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, December 21, 2011

    '...அப்படியென்றால் ஜெ ஒன்றும் தெரியாதவரா?'


    எந்த காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்... எந்த வினைக்கும் ஒரு எதிர்வினையுமிருக்கும்.

    அப்படி கிளம்பியிருக்கும் எதிர்வினை...

    ''சசிகலா மோசமானவர்... மோசடியானவர் என்பதாகவே இருக்கட்டும்.... 25 ஆண்டுகள் அந்த மோசடிக்காரருடன் சேர்ந்திருந்ததால், சசிகலாவின் மோசடிகள் அனைத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவும் பொறுப்பாளர்தானே?

    என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும் குடும்பத்தினரால்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவும் கூறுவது எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே தெரியாதா?...''

    -என்பதுதான் சசிகலாவுக்கு ஆதரவாகக் கிளம்பியிருக்கும் வாதம்!

    இன்னொரு பக்கம் இப்போதைய ஜெயலலிதா நடவடிக்கையை வைத்து ஜெயலலிதாவை புனிதராக்கவும் சசிகலாவை வில்லன் கேரக்டர் போலவும் மாற்றும் முயற்சியில் சசிகலா எதிர்ப்பு ஊடகங்கள் மும்முரமாக இருப்பதாகவும் ஒரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

    இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஜெயலலிதாவால் மட்டுமல்ல, அவரது மந்திராலோசனையில் பிரதானமாக இடம் பெற்றுள்ள அந்த மூத்த பத்திரிகையாளராலும் கூட பதில் சொல்ல முடியாது!.

    சசிகலா தவறானவர் என்பது 25 வருடங்கள் கழித்துதானா முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்தது?.

    அப்படியெனில் 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இருவரும் இணைந்தே செய்த தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது? சொத்துக் குவிப்பு வழக்கு என்பது சசிகலா குடும்பத்தினர் மீது மட்டுமில்லையே... அதில் பிரதான குற்றவாளியே முதல்வர் ஜெயலலிதாதானே!.

    சசிகலாவுடன் இணைந்து ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்துக்கள் எந்த கணக்கில் சேரும்? சிறுதாவூர், கொடநாடு, பையனூர்... எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரில் அல்லது அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது எதனால்? ஜெயலலிதாவின் நம்பிக்கையானவராக அவர் இருந்ததால் தானே?.

    கொடநாடு எஸ்டேட் யாருடையது என்று கேட்டால், அது சசிகலாவுக்குச் சொந்தமானது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒருவேலையும் செய்யாத, முன்னாள் வீடியோ கடை உரிமையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய எஸ்டேட், அரண்மனைக்கு நிகரான எஸ்டேட் பங்களா எப்படி சொந்தமானது? அந்த பங்களாவை தமிழக அரசின் தற்காலிக தலைமைச் செயலகமாகவே மாற்றி வைத்துள்ளது எப்படி?.

    ஜெ-சசி இருவரும் இணைந்தே அனைத்து காரியங்களையும் செய்தனர். அதற்காகவே சசிகலாவை கணவரிடமிருந்து பிரித்து தன்னுடனே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. அதிமுக செயற்குழு உறுப்பினர் பதவி தொடங்கி, யாருடன் கூட்டணி வைக்கலாம், யார் யாரை கட்சிக்குள் இழுக்கலாம் என்பதில் முதன்மை ஆலோசகர் பதவி வரை! இத்தனையும் செய்ய தேவைப்பட்ட சசி, இப்போது மட்டும் சதியாளரா?.

    'ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அனைத்துவித உபாயங்களையும் கையாண்டது சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டிதான். விஜயகாந்துடன் பேரம் பேசியதிலிருந்து அடிப்படை வேலைகளைச் செய்ததும் இவர்கள்தான். அந்த உரிமையை அவர்கள் ஆட்சியில் நிலைநாட்டப் பார்ப்பதைப் பொறுக்காத குறிப்பிட்ட சிலர் தான் இப்போதைய நிலைக்குக் காரணம்' என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் நிறையவே உண்மைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    "முதல்வர் ஜெயலலிதாவின் தவறுகளுக்கெல்லாம் மூல காரணம் சசிகலா குடும்பம்தான் என்றால், சமச்சீர் கல்வி குளறுபடிகள், தலைமைச் செயலக மாற்றம், அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கவனிப்பற்ற தமிழக சாலைகள், ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் திறமையற்ற நிர்வாகி என பெயரெடுத்தது போன்றவற்றுக்கும் சசிகலாதான் காரணம் என்று கூற முடியுமா?.

    ஜெயலலிதாவை போற்றிப் பாதுகாக்க சில ஊடகங்கள் முனைகின்றன... அது இன்னும் சில தினங்களில் பல்லிளிக்க ஆரம்பித்துவிடும்," என்கிறார்கள் சசிகலா ஆதரவு தரப்பினர்.

    ஆனால் இதெல்லாம் தற்காலிகமே என்கின்றனர் நடுநிலைப் பார்வையாளர்கள்.

    "ஜெயலலிதா - சசிகலா இருவராலுமே, இப்போது மட்டுமல்ல, இனி எப்போதுமே பிரிய முடியாது.

    ஜெயலலிதா தன்னை விரட்டிவிட்டாரே என்ற கோபத்தில் அவருக்கு எதிராக எதையும் செய்யக்கூடியவரல்ல சசிகலா. இதற்கு முன்பு ஜெயலலிதா அவரை விரட்டியபோதும் விசுவாசமாகவே நடந்து கொண்டார். சசியின் குடும்பத்தினரும் அப்படியே. அதேபோல வெளிப்படையாக அவர்களை விலக்கி வைத்தாலும், மீண்டும் எந்த நேரத்திலும் அவசியம் அல்லது நெருக்கடி கருதி ஜெயலலிதா அவர்களைச் சேர்த்துக் கொள்வது சாத்தியமே.

    அவர்கள் இருவரின் நட்பும் பிரிவும் அவர்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கிறதோ தெரியாது... ஆனால் சசிகலா நீக்கத்துக்காக நடத்தப்படும் கொண்டாட்டமும் சரி, புலம்பலும் சரி அர்த்தமற்றவை!".

    -இது பிரபல தேசிய ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு மூத்த பத்திரிகையாளர்  சொன்ன கருத்து.

    ஜெ. சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு:

    இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இந்த வழக்கில் சசிகலாவின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஜனவரி 12ம் தேதி நடைபெறுவதால் ஜெயலலிதாவின் வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    Posted by விழியே பேசு... at 2:58 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ▼  December (434)
      • 2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )
      • இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்
      • சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வ...
      • புதுச்சேரியில் கரையை கடந்த புயல் சேலம் நோக்கி நகரு...
      • இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?
      • 2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!
      • விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. ...
      • கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை
      • சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் ...
      • விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்
      • 'தானே' தானாக வந்ததல்ல...!!
      • 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்...
      • தானேயின் கோரத்தாண்டவம் ....!!!
      • தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வ...
      • மணிரத்னம் படத்தில் பசுபதி!
      • அஞ்சலியின் தாராள மனசு!
      • விஷ்ணுவர்த்தனுடன் யுவன் மோதலா?
      • தனுஷ் இல்லை.. கார்த்தி !
      • ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - த...
      • பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலருக்கு தண்டனை குறைப...
      • பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
      • பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கப...
      • 4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய...
      • ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
      • ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் ...
      • ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்
      • இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
      • ஜப்பானில் பிரபலமான கொலை வெறி பாடல் இந்தியிலும் ரீம...
      • மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!
      • தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
      • ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிக...
      • தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?
      • காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!
      • என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!
      • 96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீ...
      • "ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் கா...
      • பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!
      • ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை
      • நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!
      • 'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்ப...
      • "ஒய் திஸ் கொலவெறி"...மாஸ்டர் யாரு?!
      • மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ...
      • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்...
      • சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்கள...
      • கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்த...
      • பிரதமருடன் விருந்து; ரத்தன் டாட்டாவுடன் விருந்து ...
      • சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்
      • ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
      • ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!
      • மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 282 ரன்னில் ஆல் அவுட்:...
      • 2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!
      • ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்
      • விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
      • ஷங்கரின் அடுத்த படம் ரெடி!
      • தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : த...
      • காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!
      • இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட...
      • நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?
      • நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!
      • 'ஜனாதிபதி' மன்மோகன் சிங்- லோக்சபாவுக்கு இடைத் தேர்...
      • சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்
      • ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசி...
      • பிரதமர் விருந்தில் தனுஷ்: எல்லாம் கொலைவெறி தந்தது
      • போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட...
      • உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ...
      • ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆத...
      • பொங்கல் போட்டி வெல்ல போவது யார் ?: நண்பன் vs வேட்ட...
      • தேசிய கீதத்திற்கு இன்று வயது 100
      • நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
      • தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ்...
      • 'மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் ஏன் க...
      • மண்டபம் கொடுத்தார் ரஜினி- உண்ணாவிரதம் இருப்பாரா?
      • நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
      • சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ!
      • புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு! சிம்புவுக்கு ர...
      • இசை நிகழ்ச்சியை தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி...
      • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
      • ஐயப்பனுக்கு வந்த சோகம்
      • வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளி...
      • மம்தாவுக்கு கொடுத்த மாதிரி எங்களுக்கும் கொடுங்கள்:...
      • ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் க...
      • மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு...
      • தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ
      • இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!
      • டேம் 999 சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
      • ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்
      • விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை...
      • ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்
      • பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!
      • விஜயகாந்த் கைது!
      • பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )
      • ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
      • ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
      • சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 2...
      • டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோ...
      • பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்
      • சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி
      • இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்
      • மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்க...
      • 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட...
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.