விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, December 4, 2011

    ஜெயலலிதா மீது அவதூறு புகார்: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை- அமைச்சர்


    இந்து சமய அறநிலைய, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நில அபகரிப்பு தொடர்பாக தி.மு.க. பொருளாளர்  மு.க. ஸ்டாலின் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், "வாரண்ட்'' வேண்டா குற்றங்கள் புரிந்தவர்களுக்கு எதிராக  காவல் துறையினரால் கடை பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறை தான் இது.

    இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ என்று அஞ்சிய மு.க.ஸ்டாலின்,  தான் நேர்மையானவர் என்பதை காட்டிக் கொள்ளும் வகையில், பகட்டு தைரியத்துடன் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று, கைதாகத் தயார் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

    தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு  இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்ற நினைப்புடனோ, அல்லது ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள கனிமொழியை தியாகி போல் சித்தரித்து தி.மு.க. வரவேற்பு  அளிப்பதன் மூலம் தனக்கிருப்பதாக கருதிக் கொண்டிருக்கும் அரசியல் முக்கியத்துவம் கனிமொழியின் பக்கம் திரும்பிவிடும்  என்ற நினைப்பிலோ இது போன்ற நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கலாம்.

    குடும்பச் சண்டையில், தான் ஒதுக்கப்பட்டு விடக்கூடாது என்று  நினைக்கிறார் ஸ்டாலின். தன்னை முன்னிலைப் படுத்துவதற்காக நடத்துகின்ற இந்த நாடகத்தில், தேவையில்லாமல் தமிழக முதல்-அமைச்சர் புரட்சித் தலைவி அம்மா  மீது அவதூறு பரப்பும் வகையில், கோடநாடு மற்றும் சிறுதாவூரில் நில அபகரிப்புகள் நடைபெற்று இருப்பதாக அற்பத்தனமான, பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு மனுவை காவல் துறை கூடுதல் தலைமை  இயக்குநரிடம் அளித்து  இருக்கிறார் ஸ்டாலின்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும்  பொய்யானவை, வஞ்சகத் தன்மை வாய்ந்தவை.  சிறுதாவூரில்  உள்ள நிலங்களுக்கும் தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தும், 2006 ஆம் ஆண்டு, சிறுதாவூர் கிராமத்தில் ஆதி திராவிடர் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 27.7.2006 அன்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார் கருணாநிதி.

    இது  புரட்சித் தலைவி அம்மாவுக்கு  எதிராக பொய்யாக புனையப்பட்ட, அடிப்படை ஆதாரமற்ற வழக்கு  என்பதால், தி.மு.க.வினரைப் போல் ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டப்பட்ட கட்டத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை எதிர்த்து தங்கம் தென்னரசு மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது போல் அல்லாமல், துணிச்சலுடன் புரட்சித் தலைவி அம்மா  அதை எதிர் கொண்டார்கள்.

    சிறுதாவூர்  கிராம நில அபகரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட  நீதியரசர் கே.பி.சிவசுப்ரமண்யம் விசாரணை ஆணையம்,  புரட்சித் தலைவி அம்மாவுக்கு எதிராக எந்தவித குறிப்பிட்ட புகாரும் பெறப்படாததால்,  அம்மாவை விசாரிக்க நோட்டீஸ் கூட அனுப்பப்பட வில்லை என்று தெளிவாக, வெளிப்படையாக தெரிவித்து  இருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

    முன்னாள் முதல்- அமைச்சரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையமே  முதல்-அமைச்சர் அம்மாவுக்கு  எதிராக எந்தவித புகாரும் இல்லை என்று தெரிவித்த பிறகு, ஸ்டாலின் இது போன்ற நில அபகரிப்பு பிரச்சனையை மீண்டும்  எழுப்புவது மக்களை ஏமாற்றும் செயல் என்பதோடு மட்டுமல்லாமல், தன் மீதுள்ள நில அபகரிப்பு புகாரிலிருந்து மக்களை திசை திருப்பும் செயல் என்பது தெளிவாகிறது.

    நீதியரசர்  சிவசுப்ரமண்யம் விசாரணை ஆணையம் எவர் மீதாவது  குற்றம் சாட்டப்பட்டிருந்தால், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓர் ஆண்டிற்கும் மேலாக ஆட்சிப்  பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? சிவசுப்ரமண்யம் விசாரணை ஆணையத்தை நியமித்ததன் மூலம், மு.க. ஸ்டாலினும், அவருடைய தந்தை கருணாநிதியும் முகத்தில் கரியை பூசிக் கொண்டது தான் மிச்சம்.

    கோடநாடு எஸ்டேட்டில் பொது மக்கள் பயன் படுத்துகின்ற  பொது வழி உட்பட நிலங்களை புரட்சித் தலைவி அம்மா  அபகரித்துக் கொண்டதாக வாய்க்கு வந்தபடி புழுதி வாரி தூற்றி உள்ளார் மு.க.ஸ்டாலின்.

    மு.க.ஸ்டாலினின் மனு முற்றிலும் தவறான தகவல்களை கொண்டதாக உள்ளது.    முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, கோடநாடு எஸ்டேட்டில்  புரட்சித் தலைவி அம்மா பங்குதாரர் என்பதால்,  அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், உள் நோக்கத்துடன், அதிகார துஷ்பிரயோகம் மூலம் கோடநாடு எஸ்டேட்டில் உள்ள சாலை பொது சாலை என்ற ஒரு பொய்யான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன் மூலம் கோடநாடு எஸ்டேட்டுக்கு சொந்தமான சாலையை அபகரிக்க திட்டமிட்டது. இது  தொடர்பாக எஸ்டேட்  நிர்வாகம் தொடுத்த  குற்றவியல் வழக்கு எண். ஆர்.சி. 1486 மற்றும் 1508 / 2007-ல் சென்னை உயர் நீதிமன்றம் கீழ்க் கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.

    "இந்த வழக்கில், இரு சாராரும் ஒத்துக்கொண்ட வகையில், இந்த சாலை தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம்; இதில் சில காலமாக பொதுமக்கள் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்; இதை வைத்து ஒரே நாளில் பொதுமக்கள்  உரிமை கொண்டாட  முடியாது. அவ்வாறான உரிமை அவர்களுக்கு உள்ளது என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அவ்வழியே செல்வதற்கான உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றத்தைத் தான் அணுகியிருக்க வேண்டுமே தவிர, குற்றவியல் நடை முறைச்சட்டம் 133-ன் படி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கக் கூடாது.

    மேலும், புகார்தாரர்களே தங்களது சாட்சியங்களில் நில எடுப்பு நடவடிக்கையின் மூலம் பொதுச் சாலையை ஏற்படுத்தித்தர வேண்டு மென  கோரியுள்ளதாக கூறி உள்ளபோது, அதிலிருந்து மாறுபட்டு தனியாருக்குச் சொந்தமான சாலையை இலவசமாக பயன்படுத்தும் அதிகாரம் உள்ளதாகக் கூறி, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 133-ன் கீழ் நடவடிக்கை எடுக்க இயலாது.

    குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன் கீழ் அவசர அதிகாரத்தினை பயன்படுத்துகிறோம் என்ற போர்வையில், புகார் தாரர்கள் என சொல்லப்படுவர்களுக்கு புதிய அதிகாரங்களை அதிகாரிகள் ஏற்படுத்தித் தர இயலாது. இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின், எதிர் மனுதாரர் சார் கோட்ட நடுவரின் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என நீதிமன்றம் கருதுகிறது. அந்தப்பகுதி மக்கள் ஒரு நிரந்தரமான, சட்டப்படியான தீர்வு காணப்பட வேண்டும் என்கிற போது, எதிர்மனுதாரர் உள்ளிட்ட அதிகாரிகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133-ன் கீழ் குறுக்கு வழியை மேற்கொண்டு இருக்கக் கூடாது.  எனவே, குற்றவியல் மனுக்கள் இரண்டும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன..

    1.8.2007 மற்றும் 20.9.2007 நாளிட்ட சார் கோட்ட நடுவரின் ஆணைகள் ரத்து செய்யப்படுகின்றன....'' அப்போதைய தி.மு.க. அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த சாலையை பொதுச் சாலை என்று அங்கீகரிக்காததோடு மட்டு மல்லாமல், கோடநாடு எஸ்டேட் தனது காவலாளியை அங்கு போடலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

    இந்த தீர்ப்புகளிலிருந்து, கருணாநிதி தலைமையிலான அப்போதைய தி.மு.க. அரசு, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் எஸ்டேட் நிலத்தை வெளிப்படையாக அபகரிக்க நினைத்தது தெளிவாகத் தெரிகிறது.  இந்த சாலை பொதுச்சாலை அல்ல, தனியார் சாலை என்பதால்தான், அப்போதைய அரசு நில எடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்தது.  அதுவும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இவற்றிலிருந்து, அப்போதைய தி.மு.க. அரசு தான் கோடநாடு எஸ்டேட்டிற்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதே தவிர, கோடநாடு எஸ்டேட் எந்தத் தருணத்திலும் பொது மக்களுக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

    தன் மீது சுமத்தப்பட்டுள்ள நில அபகரிப்பு குற்றச் சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மனம்போன போக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளை விவேக மில்லாமல்  உளறித் தள்ளியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

    ஸ்டாலின் சுமத்திய குற்றச் சாட்டுக்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்க்காமல், அவரது மாய வலையில்  சில பத்திரிகைகள் வீழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.

    மு.க.ஸ்டாலின் உண்மைக்கு முற்றிலும் புறம்பான அற்ப குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவினை அளித்து, அம்மா புகழுக்கு களங்கம் கற்பித்துள்ளதால், குற்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டவராகிறார்.  ஸ்டாலின் மீது  சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் பரஞ்ஜோதி கூறியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 4:10 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ▼  December (434)
      • 2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )
      • இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்
      • சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வ...
      • புதுச்சேரியில் கரையை கடந்த புயல் சேலம் நோக்கி நகரு...
      • இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?
      • 2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!
      • விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. ...
      • கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை
      • சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் ...
      • விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்
      • 'தானே' தானாக வந்ததல்ல...!!
      • 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்...
      • தானேயின் கோரத்தாண்டவம் ....!!!
      • தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வ...
      • மணிரத்னம் படத்தில் பசுபதி!
      • அஞ்சலியின் தாராள மனசு!
      • விஷ்ணுவர்த்தனுடன் யுவன் மோதலா?
      • தனுஷ் இல்லை.. கார்த்தி !
      • ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - த...
      • பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலருக்கு தண்டனை குறைப...
      • பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
      • பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கப...
      • 4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய...
      • ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
      • ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் ...
      • ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்
      • இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
      • ஜப்பானில் பிரபலமான கொலை வெறி பாடல் இந்தியிலும் ரீம...
      • மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!
      • தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
      • ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிக...
      • தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?
      • காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!
      • என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!
      • 96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீ...
      • "ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் கா...
      • பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!
      • ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை
      • நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!
      • 'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்ப...
      • "ஒய் திஸ் கொலவெறி"...மாஸ்டர் யாரு?!
      • மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ...
      • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்...
      • சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்கள...
      • கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்த...
      • பிரதமருடன் விருந்து; ரத்தன் டாட்டாவுடன் விருந்து ...
      • சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்
      • ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
      • ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!
      • மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 282 ரன்னில் ஆல் அவுட்:...
      • 2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!
      • ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்
      • விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
      • ஷங்கரின் அடுத்த படம் ரெடி!
      • தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : த...
      • காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!
      • இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட...
      • நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?
      • நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!
      • 'ஜனாதிபதி' மன்மோகன் சிங்- லோக்சபாவுக்கு இடைத் தேர்...
      • சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்
      • ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசி...
      • பிரதமர் விருந்தில் தனுஷ்: எல்லாம் கொலைவெறி தந்தது
      • போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட...
      • உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ...
      • ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆத...
      • பொங்கல் போட்டி வெல்ல போவது யார் ?: நண்பன் vs வேட்ட...
      • தேசிய கீதத்திற்கு இன்று வயது 100
      • நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
      • தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ்...
      • 'மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் ஏன் க...
      • மண்டபம் கொடுத்தார் ரஜினி- உண்ணாவிரதம் இருப்பாரா?
      • நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
      • சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ!
      • புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு! சிம்புவுக்கு ர...
      • இசை நிகழ்ச்சியை தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி...
      • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
      • ஐயப்பனுக்கு வந்த சோகம்
      • வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளி...
      • மம்தாவுக்கு கொடுத்த மாதிரி எங்களுக்கும் கொடுங்கள்:...
      • ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் க...
      • மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு...
      • தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ
      • இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!
      • டேம் 999 சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
      • ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்
      • விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை...
      • ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்
      • பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!
      • விஜயகாந்த் கைது!
      • பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )
      • ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
      • ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
      • சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 2...
      • டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோ...
      • பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்
      • சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி
      • இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்
      • மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்க...
      • 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட...
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.