பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்னும் இடத்தில், கடந்த 81 நாட்களாக, என்சிஃபாலிட்டிஸ் எனப்படும் மூளை கட்டியினால் 83 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். நாளுக்கு ஒரு உயிரிழப்பை சந்தித்த கயா பகுதி மக்கள் மூளை கட்டியின் அபாயத்தை எண்ணி, பீதியில் இருக்கிறார்கள்.
மேலும் இதே நோயினால், 27 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கயாவில் உள்ள 'அனுகிரகா நாராயன் மகத்' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,
சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தான் மிகவும் வேதனைக்குரியது.
மேலும், 384 குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும், அதில் 244 குழந்தைகள் குணம் பெற்று திரும்பியதாகவும், 83 குழந்தைகள் உயிரிழந்ததாகவும்,
மேலும், 27 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுக் கொண்டிருப் பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
No comments:
Post a Comment