விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, November 25, 2011

    'புரட்சித் தலைவி' ஆட்சியா, இல்லை ஹிட்லர் ஆட்சியா?: பிரேமலதா கேள்வி!


    அதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று ஒவ்வொரு நிமிடமும் வருத்தப்படுகிறோம். தமிழகத்தில், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சி நடக்கிறதா? அல்லது ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா.

    சென்னையில் நேற்று நடந்த தேமுதிக உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்பது மக்களுக்காக கட்சி எடுத்த முடிவு. ஆனால் இன்றைக்கு அந்த கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று ஒவ்வொரு நிமிடமும் வருத்தப்பட வேண்டியிருக்கிறது. அதிமுக செயல்கள் அப்படி இருக்கிறது.

    யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுடன் தான் கூட்டணி என்று கேப்டன் உறுதியாக இருந்தார். இந்த உறுதியை முதல் முறையாக மக்களுக்காக விட்டுக்கொடுத்தார். 6 மாத காலம் பொறுத்திருங்கள் என்று கேப்டன் சொன்னார். ஏன் சொன்னார். யாரையும் எடுத்த எடுப்பிலேயே குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு 6 மாதம் டைம் கொடுக்கலாம். அதற்குள் அவர்கள் ஏதாவது நல்லது செய்வார்கள் என்று கேப்டன் சொன்னார். ஆனால் இங்கு நடப்பது கொண்டிருப்பது என்ன.

    6 மாத காலத்தில் தமிழகம் சந்தித்தது என்ன. சமச்சீர் கல்வித் திட்டம் மூலமாக முதல் அடி. அதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த மாணவர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள். என்ன படிக்க வேண்டும் என்று தெரியாமல் இன்றைக்கு மாணவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அச்சடிக்கப்பட்ட புத்தங்கள் மூளையில் முடங்கிக்கிடக்கின்றன. இதனால் தமிழக அரசுக்கு 200 கோடி ரூபாய் விரயம்.

    அடுத்தததாக புதிய தலைமைச் செயலகத்தை உலகத் தரத்தில் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று சொன்னார்கள். சரி நல்லத் திட்டம் என்று நினைச்சோம். ஆனால் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய அந்தக் கட்டிடம் இன்றைக்கும் அதற்கான வேலை எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. அந்த ஆயிரம் கோடி ரூபாய் என்பது திமுக அறக்கட்டளையில் இருந்து வந்ததல்ல. அதிமுக அறக்கட்டளையில் இருந்து வந்ததல்ல. மக்களுடைய வரிப்பணத்தில் செலவு செய்து, தமிழ்நாட்டிற்கும் ஒரு சிறந்த அடையாளமாக நல்ல தரமான தலைமைச் செயலகம் வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டது. அந்த கட்டிடம் முடக்கப்பட்டு யாருக்கும் பயன்படாதபடி முடக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதிமுக.

    அதற்கடுத்ததாக அண்ணா நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறோம் என்று அறிவித்தார்கள். ஒன்று மட்டும் நாங்கள் கேட்கிறோம். சென்னை நகரில் புறம்போக்கு இடங்களே இல்லையா. குப்பை கூளங்கள் இல்லாத இடங்களே இல்லையா.

    இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் மேல் கவனம் செலுத்தும் ஜெயலலிதா அவர்கள், நல்ல திட்டங்களை கொண்டு வாருங்கள். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். ஆனால் ஏன் இந்த பழிவாங்கும் எண்ணத்தோடு, ஏற்கனவே நல்லப்படியாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற அந்த கட்டிடங்கள் மீது உங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றீர்கள் என்பதை உண்ணாவிரத்தின் மூலம் கண்டிக்கிறோம்.

    இலவச திட்டங்களை மக்களாகிய யாரும் கேட்கவில்லை. இவர்களாகவே அறிவித்தார்கள். கிரைண்டர், மிக்ஸி கொடுக்கிறோம் என்று. அது யாருக்கு தேவை. அந்த ரூபாய் மூலம் மக்களுக்கு அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யலாம். மக்களுக்கு தேவையான நல்லது செய்ய வேண்டும்.

    இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனை பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு. இந்த இரண்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு மாபெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இன்று காலை முதல் பஸ் போய்க்கொண்டிருக்கிறது. இதில் அம்பானி போகவில்லை. விஜய் மல்லையா போகவில்லை. போகிறவர்கள் அனைவருமே ஏழை எளிய மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிற மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தினக்கூலிக்கு போகிறர்வர்களை இவர்கள் நேரடியாக தாக்கியிருக்கிறார்கள்.

    பால் விலை உயர்வால் குழந்தைக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பெரும் கஷ்டம் உருவாகியிருக்கிறது. அடுத்து மின்சார கட்டணத்தையும் உயர்த்தப்போகிறோம் என்று தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கிறது.

    அதேபோல் கூடங்குளம் பிரச்சனை ஆரம்பித்து 100வது நாளை எட்டியுள்ளது. 100 நாள் எங்களுடைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கம், 100வது நாட்களாக உண்ணாவிரம் இருந்து போராட்டம் நடத்தி வரும் கூடங்களும் மக்களுக்கு இன்றைக்கு வரைக்கும் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி கொடுத்ததா இந்த அரசு.

    மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள். ஏன் இதுமாதிரி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள். ஒரே கையெழுத்து மூலம் 13 ஆயிரம் குடும்பத்தினரை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது இந்த அதிமுக. இது மிகவும் வன்மையாக கண்டிக்கக் கூடிய செயல். நீங்கள் திட்டம்போட்டு செய்து கொண்டிருந்தாலும், அதை தடுக்க சட்டம் இருந்துகொண்டுதான் இருக்கு.

    சமச்சீர் கல்வியை நீங்கள் திட்டம்போட்டு உங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுனீர்கள். ஆனால் சட்டம் அதை தடுத்து சமச்சீர் கல்வியை உடனடியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேபோல் தான் இன்றைக்கு மக்கள் நலப்பணியாளர்களுக்கு சட்டம் ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்து,. 13 ஆயிரம் குடும்ங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    ஒரே நாளில் அறிவிக்கிறார்கள். இரவோடு இரவாக அறிவிக்கிறார்கள். எதற்காக இந்த பயம். ஒரு டைம் கொடுத்து அறிவித்தால், மக்கள் போராட்டம் நடத்தி அந்த விலை உயர்வை செயல்படுத்தாமல் போய்விடுமே என்று பயம். இரவு அறிவிக்கிறார்கள் காலையில் பஸ் கட்டண உயர்வு. பஸ் கட்டணம் 20 ரூபாய் என்று எடுத்து வந்தவர்களுக்கு 40 ரூபாய் என்று சொன்னால், போய் எடுத்து வர வேண்டும். இல்லையென்றால் யாரிடம் கடன் வாங்குவார்கள் என்று நினைக்காமல் ஒரு சின்ன மனிதாபிமானம் இல்லாமல் எப்படி இவர்களால் அறிவிக்க முடிகிறது.

    புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சி நடக்கிறதா? ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா இந்த தமிழ்நாட்டில் என்று தெரியாத வண்ணம் மாபெரும் ஒரு கண்டனத்துக்குரிய ஒரு திட்டத்தை இரவோடு இரவாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

    புரட்சித் தலைவி என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உண்மையில் அந்த புரட்சிக்கு உரியவராக நீங்கள் இருந்தால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை அறிவித்திருக்க வேண்டியதுதானே. உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தல் வர நேரம் இருக்கிறது என்ற ஒரு தைரியத்தில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளீர்கள்.

    மம்தா பானர்ஜி ஒரு தைரியமான பெண். அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்திய அரசாங்கத்தின் எந்த உதவியும் எங்களுக்கு தேவையில்லை என்று தைரியமாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

    உங்களை நீங்களே தைரியமானவர் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா அவர்களே அறிவியுங்கள் நாங்கள் ஒன்றும் மத்திய அரசாங்கத்தை நம்பி இல்லை. ஒரு பைசா கூட நீங்கள் கொடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை எல்லா வகையிலும் எங்களால் காப்பாற்றிக் கொண்டு வர முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள். ஏன் இதையெல்லாம் செய்யாமல் மக்கள் மீது உங்கள் பிரச்சனையை சுமத்துகின்றீர்கள்.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறந்து ஒட்டு மொத்த தமிழக இளைஞர்கள் அதள பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் தற்போது உயர்தர மதுபானங்களை விற்கப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

    இதெல்லாம் எதற்காக? மிடாஸ் என்கிற அவர்களுடைய கம்பெனி 100 சதவீதம் லாபகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர, உண்மையிலுமே அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அக்கறை கிடையாது.

    பேருந்து வசதிகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கம். வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கம். கலர்களை மாற்றிவிட்டு, சொகுசுப் பேருந்து, தாழ்தள பேருந்து என்று மாற்றிவிட்டு பஸ் கட்டணத்தை ஏற்றியுள்ளார்கள். கட்டணத்தை உயர்த்திய நீங்கள், அந்த பேருந்தில் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்தீர்களா.

    முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஹெலிகாப்டரில் சுற்றுவதை விட்டுவிட்டு, ஒரு காரில் இங்கு உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் வரவேண்டும். அதற்காகத் தான் ஒட்டு மொத்த தமிழக மக்களும் உங்களை மெஜாரிட்டி தந்து உங்களை ஜெயிக்க வைத்துள்ளார்கள். எல்லா சாலைகளிலும் சென்று பாருங்கள். சாலைகள் சரியாக இருக்கிறதா. பேருந்தில் போகிறவர்கள் பாதுகாப்பாக போகிறார்களா என்று பாருங்கள் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

    முன்னதாக விஜயகாந்த் பேசுகையில் சினிமா டயலாக்கைக் குறிப்பிட்டு படு ஜாலியாகப் பேசினார்.

    அவர் பேசுகையில்,

    எங்கப் பார்த்தாலும் கொள்ளை. கொள்ளை. எங்க பார்த்தாலும் ஊழல், ஊழல். முடிந்த அளவுக்கு போராடுவேன். தப்பு என்றால் தப்பு. எங்களால் தான் ஜெயித்தோம் என்று சொன்னீர்கள். ஒரு வருஷத்துக்கு முன்னாடி மின்னணு ஓட்டு வேண்டாம் என்று சொன்னீர்கள். இப்ப ஒரு ஓட்டு முரசில் போட்டால், பத்து ஓட்டு இலைக்கு போகுது. அது சொன்னால் ஒத்துக்குவாங்களா. நாங்கள் வரலை. ஜெயிச்சா ஜெயிச்சுக்கோ. தோல்வின்னா தோல்வி.

    ஆவின் பாலை விட தனியார் பால் அதிகமாக விற்பனையாகிறது. ஆவினில் பாலை கொடுத்தால் லேட்டாக காசு வருகிறது. தனியாரில் பாலை கொடுத்தால் உடனே காசு வருகிறது. அதனால் தான் ஆவினில் கொள்முதல் குறையுது. தனியாரில் கொள்முதல் அதிகமாகிறது. தலைமையில் இருந்து, அதிகாரிகள் வரை எல்லாம் கை நீட்டுறாங்க.

    பால் விலையை உயர்த்திவிட்டு, அப்படியே அசோக வன சீதை மாதிரி பேசுகிறார். என்னை வாழவைக்கும் தாய்க்குலங்களே என்று சொல்லுகிறீர்களே, அந்த தாய்குலத்துக்குத்தான் பால் விலை ஏற்றமா? இல்லை பஸ் கட்டண ஏற்றமா?

    ஓபிஎஸ், செங்கோட்டையனும் அம்மா அம்மா என்று சொல்லுவாங்க. என்னால அப்படி சொல்ல முடியாது. என்னால கையை கட்டி வாயைப் பொத்தி உட்கார முடியாது. சட்டசபையில் ஒருத்தர் எழுந்து நின்று அந்த அம்மாவைப் பார்த்தவுடன் உட்கார்ந்துவிடுவார். தரையில் விழுந்து கும்பிடுகிறார்கள். எல்லாம் ஒரு ஐந்து வருஷம் தான். இதுக்கு முன்னாடி எப்படி இருந்தாங்க. எனக்கு எல்லாம் தெரியும்.

    எல்லாம் அரசியல்ல சகஜம். உண்மையில் சொல்லப்போனால் அண்ணன் கவுண்டமனி சொல்வதைப்போல அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. இவ்வளவு கேவலமாக அரசியல் நடந்துக்கொண்டிருக்கு என்றார் அவர்.


    Posted by விழியே பேசு... at 5:29 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. RMY பாட்சாNovember 25, 2011 at 7:33 PM

      "ஒரு வருஷத்துக்கு முன்னாடி மின்னணு ஓட்டு வேண்டாம் என்று சொன்னீர்கள். இப்ப ஒரு ஓட்டு முரசில் போட்டால், பத்து ஓட்டு இலைக்கு போகுது"

      எங்க 1 MLA ஜெயிசா 10 MLAகு சமம்....

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ▼  November (512)
      • எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :நாளிதழ் அலுவ...
      • நடத்தையில் சந்தேகம்: நடிகைக்கு கத்திக்குத்து
      • மதுரையில் அழகிரியின் எம்.பி. அலுவலகம் பறிப்பு!
      • இளையராஜா வீட்டு துக்கம் ரஜினி விசாரிக்காதது ஏன்? :...
      • 2ஜி வழக்கு: ராசா மனதில் என்ன இருக்கிறது?
      • ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள...
      • அஜீத் வந்தா கொண்டாட்டம் !
      • ' ACTION ' ஆரம்பம் ! : 'தாண்டவம்' விஜய்
      • கூடங்குளம்:அணு உலை ஆதரவாளர்களை கடலில் வெட்டி வீசுவ...
      • பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாத...தனுஷை கிண்டல...
      • அழகிரி வீட்டில் தங்கி வழக்கை எதிர்கொள்ளும் கனிமொழி
      • மீண்டும் வருகிறார் தமன்னா...!
      • 'ராஜபாட்டை' தியேட்டர்களில் 'நண்பன்' !
      • சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா
      • முன்னாள் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மகள் மரணம்
      • கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்தார் ஜெ.
      • ஸ்ருதி இடத்தில் இலியானா! விலகினாரா!! விலக்கப்பட்டாரா?
      • அரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி!
      • விடுதலையானார் கனிமொழி-டிச. 3ம் தேதி சென்னை வருகிறார்
      • ஏன் இந்த கொலைவெறி : கேரள படைப்பாளிகள் மீது தமிழ் ...
      • 3 - படத்தின் புகைப்படங்கள்
      • 'தட்டாம்பூச்சி' மூலம் உளவு பார்க்கப் போகும் இந்தியா!
      • கொலைவெறி பாடலுக்கு மியூசிக் கம்போசிஷன் கூட தனுஷ் த...
      • மனைவியுடன் சினேகன் தொடர்பு வழக்கு: குழந்தை, தந்தைய...
      • பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...
      • திமுகவின் கூத்து :கனிமொழிக்கு கொ.ப.செ செயலாளர் பதவி
      • வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள...
      • மீண்டும் மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!
      • சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் தல!
      • பாடலாசிரியர் சினேகனுடன் எந்த தொடர்பும் இல்லை
      • குறைந்தபட்ச மின் கட்டணம் வீடுகளுக்கு ரூ.40 லிருந்த...
      • அது போன மாசம்; இது இந்த மாசம்: சீமான் ( ஸ்பெஷல் வீ...
      • 'எக்ஸ்ட்ரா செக்ஸை' விரும்பும் இந்தியப் பெண்கள்!
      • சென்னையில் தியாகி கனிமொழிக்கு பிரமாண்ட வரவேற்பு ....
      • நான் ஏன் அப்படி சொன்னேன்... அஞ்சலி விஷயத்தில் ஜெய்
      • நயன்தாராவை ஜோடியாக்க பிரபல ஹீரோ முடிவு
      • 6 நிமிடத்தில் 'கொலை வெறி' பிறந்தது-தனுஷ்
      • ராணாவிலிருந்து விலகும் தீபிகா படுகோன்?
      • வேற்று கட்சியினரின் தாய் தந்தையரை இழிவாக பேசிய சீமான்
      • கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!
      • கனிமொழிக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா?
      • சபரிமலையில் பரபரப்பு-ஆண் வேடத்தில் 18ம் படி ஏற முய...
      • ஒய் திஸ் கொலைவெறி டி' 3 படத்தில் ரஜினி
      • பாடல்களே இல்லாத அபாயம் படம்!
      • இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண...
      • நிர்வாணமாக நடிக்க தயார்- லட்சுமி ராய்!!
      • ஒட்டுமொத்த தமிழினத்தின் தாகமும் தமிழீழம்தான்! - வி...
      • சமுத்திரகனியின் சாட்டை
      • கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! -...
      • ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல்...
      • இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந...
      • கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற...
      • சச்சின் சதம் மிஸ் குரங்கு கொரில்லாவாக மாறிவிட்டது:...
      • விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா? பிரியங்கா சோப்ரா பதில்!
      • ரஜினியை இயக்கப்போகும் செல்வராகவன் !
      • தைமாதம் திருமணத் தேதியை அறிவிப்போம்: பிரசன்னா!!
      • 'மயக்கம் என்ன' video songs
      • ஆங்கில படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்கள் கூட கிட...
      • 'இரண்டாம் உலகம்' :அனுஷ்காவுக்கு சூப்பர் ரோல் !
      • நாசமா போயிருவீங்க! ஜெயலலிதா ஆட்சி பற்றி சீமான் ஆவ...
      • டேம் 999... தெரியாம நடிச்சிட்டேன்! - பம்மும் விமலா...
      • ' WHY THIS KOLAVERI DI 'க்கு போட்டியாக 'WHY THIS K...
      • அஞ்சலி அறிக்கை பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் ?
      • விறுவிறுப்பான மும்பை டெஸ்ட் 'த்ரில்' டிரா!
      • சுல்தான் தி வாரியர், கோச்சடையானா! - கே எஸ் ரவிக்கு...
      • அஜீத் விஜய் போல சிம்பு தனுஷ்?
      • காமெடியில் இருந்து வில்லன் வேடத்துக்கு மாறிய விவேக்
      • கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடி அனுஷ்கா?
      • நான் வாயை திறந்தால் பலர் ஜெயிலுக்கு போவார்கள்; ஆ.ர...
      • ஜெயலலிதாவை விமர்சிப்பதா.. விஜயகாந்த் மீது சரத்குமா...
      • ரஜினியின் 'கோச்சடையன்' யார்?(வலைதளத்தில் முதல் முற...
      • டேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா?: நயன்தாரா மற...
      • "மங்காத்தா'னா தான் பிரச்னை "ரம்மி'னா கண்டுக்காதீங்...
      • ‘டேம் 999’ திருட்டு சிடி விபரீதம்! : திடுக்கிடும் ...
      • பவாரை தாக்கிய வாலிபர் ஆவேசம் மீண்டும் வந்து அடிப்பேன்
      • அதிமுக பிரமுகரின் காதை கடித்த தேமுதிக செயலாளர் கைது
      • தமிழ்நாடு சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?
      • சந்திரபாபு வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெற்றேன...
      • ஒரே ஒரு அரிசி 1000 ரூபாய்! : திண்டுக்கல் பரபரப்பு
      • 'கொலவெறி' பாடலுக்கு பிரபலங்களின் பாராட்டுகளில் சி...
      • நீதிபதியின் கேள்வியும் ஜெயலலிதாவின் அண்டபுழுகு பதி...
      • 'ஏழாம் அறிவு' JOHNY TRI NGUYEN வில்லனானது எப்படி ?
      • விவாகரத்து தீர்ப்பின் போது இணைந்த தம்பதிகள்: தமிழ...
      • தலை சுற்றவைக்கும் மின்வாரியத்தின் உத்தேச கட்டண விபரம்
      • 'புரட்சித் தலைவி' ஆட்சியா, இல்லை ஹிட்லர் ஆட்சியா?:...
      • சிம்புவுக்கு வந்த சிக்கல்; ஒஸ்தி படம் தலைப்பு மாற்...
      • 'கொலைவெறி..'படலை தொடர்ந்து 2வது பாடலும் வெளியானது
      • ஸ்ரீபெரும்புதூரில் சீரடி சாய்பாபா படத்தில் இருந்து...
      • வீட்டில் அடைத்து மாதக்கணக்கில் சீரழித்தனர்: எம்.எல...
      • மும்பை டெஸ்ட் - தமிழக வீரர் அஸ்வின் அபார சதம் - இந...
      • 'விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை' - டிவி இசையமை...
      • டெல்லியிலேயே சட்டம்- ஒழுங்கு குலைந்துள்ளது நல்லதல்...
      • சரத்பவாருக்கு ஒரு அடி போதாது என்று நான் கூறினேனா?;...
      • மார்ச் மாதம் முதல் 'ஷாக்' அடிக்கும்!-மின் கட்டணம்
      • கள்ள உறவு: அதிமுக ஆதரவு கவிஞர் சினேகன் கைது செய்யப...
      • 'கஜினி'யை வெல்வாரா சச்சின் டெண்டுல்கர்?
      • பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்
      • திகார் சிறையிலிருந்து வெளியே வருவாரா கனிமொழி?
      • விளம்பரமே வெற்றிக்கு காரணம் !
      • இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்: அந்த பால் விக்கிற ...
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.