விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, October 24, 2011

    கனிமொழிக்கு தீபாவளி சென்னையிலா, திஹாரிலா?


    2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி எம்.பி. கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    கனிமொழி அடுத்தக் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்த கோர்ட்டிலேயே ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் கனிமொழி மீது சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு தொடுத்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 409-வது பிரிவின் கீழ் நம்பிக்கைத் துரோக வழக்கு அவர் மீது தொடரப்பட்டது. நேற்று முன்தினம் இந்த புதிய பிரிவு வழக்கை சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேர் மீது நம்பிக்கைத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது.

    குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதால் இன்று (திங்கட்கிழமை) கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆசிப்பல்வா, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி, குசேகான் ரியா லிட்டி நிறுவனத்தை சேர்ந்த ராஜீவ் அகர்வால், ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரது ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    சி.பி.¢ஐ. கோர்ட்டுக்கு நாளை (செவ்வாய்) முதல் வெள்ளிக்கிழமை வரை தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்றே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கனிமொழி எம்.பி.யின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது சி.பி.ஐ. வக்கீல்கள் தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே கனிமொழி எம்.பி. விடுதலை ஆவதில் எந்த சிக்கலும் இருக்காது. 43 வயதாகும் கனிமொழி எம்.பி. கடந்த 156 நாட்களாக திகார் ஜெயிலில் உள்ளார். ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு அவரை ஜாமீனில் விடு விக்கலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 437 செக்சன் 6ல் கூறப்பட்டுள்ளது. இதன்படி கனிமொழி விடுதலை ஆகிறார். 

    2ஜி வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரி மனு செய்த கனிமொழி தனது மனுவில், நான் ஒரு பெண், எனக்கு பள்ளிக்கூடம் செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஜாமீனில் விடுதலை செய்தால், எந்த சாட்சிகளையும் கலைக்க மாட்டேன் என்று ஏற்கனவே அவர் உறுதிமொழி அளித்துள்ளார்.

    எனவே இவற்றின் அடிப்படையிலும் கனிமொழி விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அவரது விடுதலையை எதிர்நோக்கி தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லியில் தங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சென்ற அவருடன் அவரது துணைவியார் ராசாத்தி அம்மாள், கனிமொழியின் மகன் ஆதித்யா ஆகியோரும் சென்றுள்ளனர்.

    கனிமொழி விடுதலை ஆனதும், அவரை தங்களுடன் சென்னை அழைத்து வர கருணாநிதி திட்டமிட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதி தொடங்குகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் விசாரணை நடக்கும் என்பதால் இந்த வழக்கு விசாரணை பல மாதங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.


    Posted by விழியே பேசு... at 11:25 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    2 comments:

    1. thiyagarajan.sOctober 25, 2011 at 9:28 AM

      அதான் திஹார்லதான்னு முடிவாகிப்போச்சே...பெத்தவங்க செஞ்சது பிள்ளைங்க தலையில என்று சொல்லுவார்கள்...நாத்திக கருணாநிதிக்கு இப்போது புரிந்திருக்கும்..சிதம்பரம் அன்னாமலைப் பல்கலைகழக மாணவனைப் பெற்றவங்க இதவிட அதிகமா வேதனை பட்டிருப்பாங்கல்ல...????

      ReplyDelete
      Replies
        Reply
    2. T G RamamurthyOctober 27, 2011 at 10:18 AM

      அன்னாமலைப் பல்கலைகழக மாணவனைப் பெற்றவங்க பட்ட வேதனை செய்யாத தப்பிற்காக.பையன் செத்த பின்னும் மகா வேதனை.இவர் படுவதோ ஊழல செய்ததற்காக
      .இ தையும் அதையும் ஒப்பிட வேண்டாம்.இது திமிர் பட்டதற்காக பெறும் தண்டனை.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ▼  October (453)
      • ராஜபக்சே பேச்சு: கனடா பிரதமர் புறக்கணிப்பு
      • கனிமொழியின் ஜாமீனை ஏன் எதிர்க்கவில்லை : சி.பி.ஐ.க்...
      • தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்
      • சிறையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு அடி உதை
      • நடிகை வைஷ்ணவி தற்கொலை- டிவி நடிகருக்கு 5 ஆண்டு சிறை
      • திமுகவை மக்கள் தோற்கடித்தது ஏன்?: ஸ்டாலின் 'கண்டுப...
      • அடுத்த படத்திலும் அஞ்சலிதான்... முருகதாஸ்
      • ஒஸ்தியின் விலை... ஓங்கி ஒலிக்கும் சிம்பு
      • அதிக முத்தம் வாங்கியவர்கள் பட்டியலில் ரித்திக்?
      • அணு உலை வெடித்தால் மத்திய அரசு என்ன செய்யும்?- சீம...
      • மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கேட்ட பி...
      • 2ஜி இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி அல்ல, ரூ.2,645 கோடியே
      • ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி...
      • சென்னை வங்கிகளை சூறையாடி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்...
      • சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆசைகள் என்ன? ருசிகர த...
      • ''துரோகச் சிந்தனையினர்''- பரிதி மீது கருணாநிதி மறை...
      • ரேப் சீனுக்கு மட்டும் தான் கூப்பிடுறாங்க: வருத்தப்...
      • மருத்துவமனையில் மனோரமா- கமல்ஹாசன் நேரில் நலம் விசா...
      • நம்புங்கள்... அடுத்த வாரம் அரசுத் துறைகளில் லஞ்சம்...
      • த்ரிஷா கார்த்திகா - 'தாமு'
      • 'மயக்கம் என்ன' அடுத்த வாரம்
      • 90 கசையடியில் இருந்து தப்பிய நடிகை
      • கமலின் 'ஷூ லேஸ்' டெக்னிக்!
      • அஜித்துடன் ஜோடி சேர மறுத்த நடிகை!
      • ஆக்ஷ்ன் கிங்குடன் ஜோடிசேர மறுத்த நடிகை!
      • 3 பேரை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசி...
      • வைகோ இன்னமும் திருந்தவில்லை: கலைஞர்
      • நடிகைகளின் 'தொடைகளுக்கு' நடிகர் சங்கம் தடை?
      • மதுரையில் 7-ஆம் அறிவு படத்தை பார்த்த மு.க.ஸ்டாலின்
      • `சீன் போடாதே'
      • அத்வானி பாதையில் குண்டுவைத்தது குமரி மாவட்டத்தினர்
      • விஜய்யின் 3 படங்கள்
      • அனுஷ்கா - தமன்னா மீது இலியானா பரபரப்பு புகார்!
      • தோற்றவர்கள் வென்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் - ம...
      • கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் ஏமாற்றிவிட்டார் -...
      • சிவாஜி, கமலஹாசனை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது...
      • என் இமேஜ் போயிருச்சே...! ஆண்ட்ரியா கவலை!!
      • கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்
      • அமைச்சர் உறவினர் கொலை :சிபிஐ பிடியில் டாக்டர் ராம...
      • அடையாறில் மசாஜ் சென்டரில் விபசாரம்; 2 பேர் கைது பெ...
      • கேரளாவில் வசூலை குவிக்கும் தீபாவளி தமிழ் படங்கள்
      • செல்வராகவன்- தனுஷை பழிவாங்க சிம்புவுடன் கூட்டணி அம...
      • நடிகை ஓட்டம்? படப்பிடிப்பில் சிக்கல்
      • அது சிக்ஸ் பேக் இல்ல, சிங்கிள் பேக் - விஜய் கலகலப்பு
      • 'இந்த போர்க்குற்றவாளியை கூண்டிலேற்றுங்கள்!'
      • 3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண...
      • நடிகை அஞ்சலிக்கு மிரட்டல்: நடிகர் கரண் கண்டனம்
      • ஜீவாவுடன் ஜோடி சேரக்கூடாது: ரிச்சாவுக்கு சிம்பு தடை
      • எம்ஜிஆர் - ரஜினி பாணியில் ....விஜய் பேச்சு!
      • சீரியலில் நடிக்கும் இளம் ஹீரோவின் மனைவி!
      • நடிகையின் 5 தங்கைகளுக்கு வலைவீசும் டைரக்டர்கள்!
      • இருந்தா இப்படி இருக்கணும் ; மாறுபட்ட தீர்ப்பை வழங்...
      • கலைந்தது ஜெயலலிதா வேஷம் :மூவருக்கும் தண்டனை ரத்து ...
      • கருணாநிதியின் முழு கட்டுப்பாட்டில் தி.மு.க. இல்லை;...
      • கமலை இயக்க போவது உண்மையா : வெங்கட்பிரபு பேட்டி
      • சின்னத்திரையில் விஜய்
      • 7ஆம் அறிவு ,வேலாயுதத்தோடு மோத வரும் படங்கள்
      • காட்டு காட்டு காட்டுனு காட்றார். " : உதயநிதி
      • பாதை விலகிய ஹஸாரே!- டீம் அன்னாவிலிருந்து விலகியவர்...
      • ஆச்சிக்கு ஒன்றும் இல்லை ஆறுதல் தரும் தகவல்கள்
      • கமல் இயக்கத்தில் இயக்குனர் !
      • விஜயின் 'யோஹன் - அத்தியாயம் 1' பற்றி கௌதம் மேனன் ...
      • செயற்கை ரத்தம் தயாரித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் ...
      • வைரமுத்துவுக்கு உரிமை கொடுத்த கமல்
      • “7 ஆம் அறிவு” படத்தில் சிறப்பான நடிப்பு: ஸ்ருதிக்க...
      • 2ம் நாளில் ரூ.25 கோடியை அள்ளிய ரா ஒன்!
      • 3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய மு...
      • உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி...
      • அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? மதுரையில் அத்வானி பேட்டி
      • சொந்த வாழ்க்கையில் தலையிடகூடாது !
      • சச்சின் முடிவை மாற்றிய அஞ்சலி
      • மதுரையில் அத்வானியை கொல்ல சதி :ரதயாத்திரை செல்லும்...
      • ராஜீவ்காந்தி கொலை கைதிகளின் மரண தண்டனையை ரத்து செய...
      • முன்னாள் பிரதமர் தேவே கௌடா மீது ஊழல் வழக்கு பதிவு
      • வேலாயுதம் விமர்சனம் : நக்கீரன்
      • பரிதி இளம்வழுதி ராஜினாமா ஏற்பு: தி.மு.க. துணைப்பொத...
      • அதிமுகவினர் இடையே மோதல்: எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு
      • தோல்வியடைந்தும் மக்களுக்கு ஸ்வீட் கொடுத்த திமுக வே...
      • ஆட மறுத்த மனைவியின் மூக்கு, உதடுகளை அறுத்த கணவர் (...
      • 7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை?
      • 7 ஆம் அறிவை பார்த்து ரசித்தார் ரஜினி
      • பாமகவுடன் கூட்டணிக்கு தேமுதிக முயற்சி: விருத்தாசலத...
      • ரா (1) ஒன்னில் ரஜினி வீடியோ
      • மின் தடை நேரம் அதிகரிக்க திட்டம்
      • நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!
      • நிர்வானமாகவும் நடிப்பேன்"-பிரபல நடிகர் பரப்பரப்பு ...
      • பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி
      • மனமுடைந்து குமுறினார் சச்சின் : சேப்பல் பகீர்
      • ஏன் அப்படி செய்தார் சிம்பு?
      • சிறுத்தை சிவா இயக்கத்தில் அ‌ஜித்?
      • பம்பரமாக சுற்றும் விஜய்!
      • உடல் ஆரோக்கியத்துடன் 150 வயது வரை வாழஒரு மாத்திரை ...
      • இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீசுக...
      • ஈரோடு மேயருக்கு செங்கோலால் வந்த சிக்கல்!
      • கலக்க வரும் வடிவேலு
      • விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் இன்டர்நெட்டில் வெளி...
      • ஜெயலலிதா முன்னிலையில் சைதை துரைசாமி பதவி ஏற்றார்
      • வெற்றி சான்றிதழை திரும்ப பெற்றனர்: 98 வயது மூதாட்ட...
      • கடாபியின் உடல் அழுகியது-கியூவில் நின்று ரசித்த மக்...
      • வெற்றி மாறன் படத்தில் சிம்பு - அமலா - ஆன்ட்ரியா!
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.