விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, October 20, 2012

    நித்யானந்தா நீக்கப்பட்டது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

    அரசு நடவடிக்கை பாயும் முன் நித்யானந்தாவை நீக்கி மதுரை ஆதீனம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சுமார் 1500 ஆண்டுகள் பழமையனது மதுரை ஆதீனமடம். திருஞான சம்பந்தரால் ஏற்படுத்தப்பட்ட இந்த மடத்தின் 292-வது ஆதீன மாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த மடத்துக்கு சுமார் 1400 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவை திடீரென மதுரை ஆதீனம் நியமித்தார். இந்த நியமனம் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ஆதீன மீட்பு குழு உருவாக்கப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. நித்யானந்தா நியமனத்தை வேறு மடாதிபதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

    இது தொடர்பாக கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன. நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்ட நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பதவியேற்றதும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்பேன் என்று கூறியது பக்தர்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் முற்றுகை போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனாலும் நித்யானந்தா நியமனத்தை அருணகிரிநாதர் உறுதியாக ஆதரித்தார்.

    சிவ பெருமானும், பார்வதியும் எனது கனவில் வந்து சொன்னதால் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தேன். அவருக்கு மொழி புலனும், பக்தியும் ஆட்கள் பலமும் உள்ளன. அவர்தான் மதுரை ஆதீனத்தை வழிநடத்தி செல்ல தகுதியானவர் என்றும் கூறி வந்தார். நாளுக்கு நாள் ஆதீன மடத்தில் நித்யானந்தாவின் கைகள் ஓங்கின. அவரது சீடர்கள் ஆதீனம் அருணகிரிநாதரின் போட்டோக்களை அப்புறப்படுத்திவிட்டு, நித்யானந்தா புகழ்பாட ஆரம்பித்தனர். அப்போது இருதரப்பு சீடர்களுக்கிடையே மோதல்களும் ஏற்பட்டன.

    இந்த நிலையில் ஆதீன மடத்துக்குள் ஆபாச நடனம் நடைபெறுவதாகவும், புலி தோல் இருப்பதாகவும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி ஆதீன மடத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் புலி தோல் சிக்காவிட்டாலும் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் நீதிமன்றத்திற்கும் தமிழக அரசிற்கும் போலீஸ் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அருணகிரிநாதர், நித்யானந்தா ஆகிய இருவரையும் நீக்கிவிட்டு, ஆதீன சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த மதுரை ஆதீன வழக்கில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நித்யானந்தாவின் நியமனம் செல்லாது என்றும், ஆதீன சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை ஆதீனத்தை நீக்க மதுரை மாவட்ட முன்சீப் கோர்ட்டிலும், இந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது. இதனால் ஆதீன மடத்தை அரசே ஏற்கப்போவதாக தகவல்கள் பரவின. இதனால் அருணகிரிநாதருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காலை அருணகிரிநாதர் நித்யானந்தாவை தொடர்பு கொண்டு அரசின் நடவடிக்கை தீவிரம டைந்துள்ள நிலையில் மதுரை ஆதீனத்தை பாதுகாக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவே நீங்கள் இளைய ஆதீன பட்டத்தில் இருந்து விலகி விடுங்கள் இதனை நீங்களே செய்தியாளர்களிடம் அறிவித்து விடும்படியும் கூறினார். 

    திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தா இது தொடர்பாக தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக அருணகிரிநாதரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது வக்கீல்கள் கோர்ட்டில் வழக்குகள் உள்ள நிலையில் விலகுவது சரியாக இருக்காது என்று நித்யானந்தாவிடம் கூறியதை அடுத்து பதவி விலக நித்யானந்தா மறுத்துவிட்டார்.

    நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல. நீங்கள் கொடுத்தது எனவே நீங்களே விருப்பப்பட்டால் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அருணகிரிநாதரிடம் நித்யானந்தா கூறிவிட்டார். இந்த நிலையில்தான் நேற்று மாலை அருணகிரிநாதர் தனது வக்கீல்கள் மூலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனுவையும் அளித்து நித்யானந்தாவை நீக்கி விட்டதாகவும், அறிவித்தார். இதையடுத்து நித்யானந்தாவின் சீடர்களும், ஆதீன மடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் மடத்து முன்பு திரண்டனர். நித்யானந்தாவின் சீடர்கள் வெளியேறிய போது அவர்கள் உற்சாக கோஷமிட்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. நித்யானந்தா நீக்கத்தையடுத்து இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் ஆதீன மடத்தில் தேங்காய் உடைத்து விசேஷ பூஜை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் சுமார் 6 மாதமாக மதுரை ஆதீனத்தில் ஏற்பட்ட நித்யானந்தா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.




    Posted by விழியே பேசு... at 11:24 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ▼  October (78)
      • தேமுதிக(ஜெ. அணி)யில் நாளை மேலும் 3 தேமுதிக எம்.எல்...
      • துப்பாக்கி புதிய ட்ரைலர்
      • மைக்கேல் ராயப்பன் வீட்டை அடித்து நொறுக்கிய தேமுதிக...
      • பட முன்னோட்டம் : துப்பாக்கி
      • தேமுதிக கப்பலில் ஓட்டை.... எப்படி சரி செய்வார் 'நா...
      • அரசு மானியத்துடன் கடன் உதவி: வீடுகளில் ரூ.1 1/2 லட...
      • நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க..அடிச்ச...
      • நான் தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி
      • 'துப்பாக்கி'க்கு, போட்டியாக 7 படங்கள் தீபாவளிக்கு ...
      • மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை ...
      • நித்யானந்தா நீக்கப்பட்டது ஏன்?: பரபரப்பு தகவல்கள்
      • மதுரை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்யானந்தா நீக்க...
      • தமிழகத்தை சீனா கைப்பற்றும்: சிங்கள தலைவர்
      • 'துப்பாக்கி' பட போட்டோக்கள்
      • பாலாவின் 'பரதேசி' பட போட்டோக்கள்
      • விஷால் ஜோடியானார் அர்ஜுன் மகள்
      • 'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத...
      • 'துப்பாக்கி' ட்ரைலர்
      • நடிகை கெளசல்யாவுக்கு என்ன கொடுக்கப் போகிறார் நித்த...
      • பொங்கலுக்கு ரஜினியின் 'கோச்சடையான்' ரிலீஸ்
      • ''கூடங்குளம் மாதா கோவிலில் சிறுநீர் கழித்தும், வீட...
      • விஸ்வரூபம்... தமிழுக்கு யு ஏ.... இந்திக்கு ஏ!!
      • வத்ராவின் சொத்து கிடக்கட்டும்.. பிரியங்கா எப்படி இ...
      • 'நக்சலைட்' ஆக விரும்பினேன்: ஏ.ஆர்.முருகதாஸ்
      • துப்பாக்கியால் சுட்டு ஆஷாபோன்ஸ்லே மகள் தற்கொலை
      • ‘நான் ஈ’ டைரக்டர் ராஜமவுலி இயக்கும் படத்தில் ரஜினி?
      • மருமகன் வத்ரா ரொம்பவும் நல்லவர்...: சொல்லிவிட்டார்...
      • கனடா நாட்டில் இளையராஜாவை எதிர்த்து போராட்டம்
      • சோனியாவுக்காக மத்திய அரசு செலவு ரூ3 லட்சம் மட்டும்...
      • 'வழக்கு எண்' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்...
      • ரூ.300 கோடி ஊழல்: சோனியாவின் மருமகன் வதேரா மீது கெ...
      • ஓடும் காரிலிருந்து மனைவியை நடுரோட்டில் தள்ளிய கணவர...
      • 10 வருடம் காதலித்தவரை மணக்க எதிர்த்தனர்- ஸ்ரீதேவி
      • தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
      • முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முன்ஜாமீன் மனு இன்ற...
      • சூர்யாவின் 'மாற்றான்' புத்தம்புது போட்டோக்கள்
      • ஓய்வு பற்றியும், எதிர்கால திட்டம் பற்றியும் அடுத்த...
      • அஜீத் தயவால் தமிழ்நாட்டில் 170 தியேட்டர்களில் இங்க...
      • கூடங்குளம்: மம்தாவிடம் ஆதரவு கோரிய அணுஉலை எதிர்ப்ப...
      • அம்மாவின் கைப்பேசியில் எம்ஜிஆருடன் நடித்த நடிகை!
      • எனது சொந்த தயாரிப்பிலேயே நடிப்பேன்: விஜய் ஆண்டனி
      • மாற்றானுக்கு யு சான்றிதழ்!
      • கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களி...
      • ஒசாமாவின் செக்ஸ் அடிமையாக ப்ரீடா பின்டோவா?- கொதிக்...
      • ஊழல் வழக்குகளில் சிக்கிய ஆ.ராசா, கல்மாடிக்கு புதிய...
      • சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.127 உயர்வு.. ...
      • தொடர்ந்து 9-வது முறையாக நோபல் பரிசுக்கு சோனியா பெய...
      • வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஓட்டல் அறையில் இருந்த 3 ...
      • கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்' டிரெய்லர்
      • சோனியாவின் சிகிச்சை செலவு: தகவல் ஆணையம் விளக்கம்
      • முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி...
      • மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராயா?: சுஹாசினி விளக்கம்
      • சி.வி. சண்முகத்தை சும்மாதான் நீக்கினாரா ஜெ...
      • இந்தி கனவு கன்னி ஹேமமாலினிக்கு டாக்டர் பட்டம்
      • மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா?
      • ட்விட்டரில் இருந்து ஃபேக்கில் நுழையும் வசதி!
      • நடிகை டாப்சிக்காக மீண்டும் மோதல்
      • சி.வி.சண்முகத்தின் அமைச்சர் பதவி பறிப்பு; கட்சி பத...
      • அஜீத், சிம்பு இணைந்து நடிக்க முடிவு?
      • செளந்தர்யாவின் சொத்துக்காக குடுமிபிடி சண்டையில் கு...
      • மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் வேலை நிறுத்தம் க...
      • சாவில் மர்மம்: யாசர் அராபத் உடலை மீண்டும் தோண்ட மு...
      • வெற்றி பெற்றும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா.
      • சபாநாயகர் வேட்பாளர் தனபால்: ஜெயலலிதா அறிவிப்பு
      • சபாநாயகர் வேட்பாளர் தனபால்: ஜெயலலிதா அறிவிப்பு
      • 'பர்ஃபி' ஜீவாவுக்கா? அல்லது சிம்புவுக்கா?
      • ரூ1880 கோடி செலவு செய்து வைத்தியம் பார்த்த சோனியா:...
      • நீர்ப்பறவை படத்துக்கு யு - கண்ணீருடன் பாராட்டிய தண...
      • ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளமா? - சாக்ஸ் பிக்சர்ஸ் ...
      • அஜித் பட ரிலீஸ் அன்று போட்டியாக ஒரே நாளில் 10 படங்...
      • ஜெயக்குமார் ராஜினாமா செய்ததன் பின்னணி
      • நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரவு அள...
      • மத்திய அரசைக் கவிழ்க்க மமதா பானர்ஜி அதிரடி திட்டம்
      • நடிகர் திலகத்துக்கு இன்று பிறந்த நாள்: சூறாவளியாய்...
      • ஹீரோக்கள் தலையில் தட்ட வேண்டும் - கேவி ஆனந்த் திடீ...
      • 'மாற்றான்' ஆங்கில படத்தின் நகலா!!: சூர்யா பேட்டி
      • சூப்பர்-8 ஆட்டம்: 5 வருடத்திற்குப் பிறகு இந்தியாவு...
      • காதலில் ஏமாந்த நான் கடைசி பெண்ணாக இருக்கட்டும்: பழ...
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.