விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, September 24, 2011

    ஜன்லோக்பால் இருந்திருந்தால் சிதம்பரம் சிறையில் இருந்திருப்பார்: ஹஸாரே


    ஜன்லோக்பால் மசோதா மட்டும் தற்போது அமலில் இருந்தால் ஊழல் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார். சிதம்பரம் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை உடனே பதவி விலகுமாறு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு ஆதரவாக உள்ளார். 2ஜி ஊழலில் ப. சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது என்று பிரதமருக்கு நிதி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    சிதம்பரம் விவகாரம்: பிரதமரை சந்திக்கும் பிரணாப்

    2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது. ப. சிதம்பரத்தை 2 ஜி ஊழல் விவகாரத்தில் மாட்டிவிடத் தான் பிரணாப் இந்த கடிதத்தை அனுப்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடன் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ப. சிதம்பரத்தை உடனே பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங் நியூயார்க்கில் நடந்து வரும் சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.

    சிதம்பரம் அமெரி்க்காவில் இருக்கும் பிரதமரை தொடர்பு கொண்டு பதவி விலக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதை பிரதமர் ஏற்கவில்லை. நாடு திரும்பிய பிறகு இது குறித்து முடிவு எடுக்கலாம் என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு விழாவில் கலந்துகொள்ள வாஷிங்டன் சென்றுள்ளார். அவர் பிரதமரை சந்திக்க இன்று மதியம் நியூயார்க் செல்கிறார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    2ஜி ஊழல் கடித விவகாரம் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. நாடு திரும்பிய பிறகு தான் எனது கருத்தை தெரிவிப்பேன் என்றார்.

    பிரதமரை அவசரமாகச் சந்திக்கவிருப்பதற்கான காரணத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். அவர் நாளை பிரதமரை சந்தித்து கடிதம் அனுப்பியதற்கான விளக்கத்தை அளிப்பார் என்று தெரிகிறது.

    நேற்று பிரணாப் முகர்ஜி, சிதம்பரத்துடன் போனில் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. பிரணாப் மற்றும் பிரதமர் அடுத்த வாரம் தான் நாடு திரும்புகின்றனர். அதன் பிறகே காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து இந்த கடித விவகாரம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    2ஜி வழக்கில் யாரையாவது இழுத்துவிடும் ராசா: பாஜக

    2ஜி வழக்கில் யாரையாவது மாட்டிவிடுவதே முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசாவுக்கு வழக்கமாகிவிட்டது என்று முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும், பத்திரிக்கையாளருமான அருண் ஷோரி குற்றம்சாட்டியுள்ளார்.

    கோவையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி நிருபர்களிடம் கூறியதாவது,

    கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கம் நடக்கவில்லை. ஒரே சூன்யமாகத் தான் உள்ளது. என்ன முன்பு யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசில் போர் சூழல் நிலவுகிறது.

    மினிட்ஸ் புக்கில் உள்ள தகவல்களை அரசு மறைக்கிறது. பிரதமரின் பார்வைக்கு இவற்றை ஏன் கொண்டு செல்லவில்லை என்று தெரியவில்லை. கபில் சிபலும் உண்மையை மறைக்கிறார். இந்த விவரம் எல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகத் தான் வெளிவந்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறி்த்து ப. சிதம்பரமும், ஆ. ராசாவும் சேர்ந்து முடிவு எடுத்துள்ளார்கள் என்பதை நிதியமைச்சரின் அறிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்கள் இருவரும் சேர்ந்து தான் விலையை நிர்ணயித்துள்ளனர்.

    2ஜி வழக்கில் யாரையாவது மாட்டிவிடுவதை ராசா வழக்கமாகக் கொண்டுள்ளார். முதலில் பிரதமரை மாட்டிவிட்டார், தற்போது சிதம்பரத்தை மாட்டிவிட்டுள்ளார். அடுத்து ஒட்டுமொத்த அமைச்சரவைக்கே இந்த விவகாரம் தெரியும் என்று கூறுவார். இந்த குற்றச்சாட்டுகள் ராசா விடுதலையாக வழிவகுத்துவிடும். எனவே, இது குறித்து உச்ச நீதிமன்றம் தான் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

    2ஜி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் வேடிக்கை பார்க்கிறார். இந்த 2ஜி அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்ததில் பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றால் தொலைத்தொடர்புத் துறைக்கு எந்த ஆதாயமும் கிடைப்பதாக இல்லை.

    கடந்த ஜனவரி, பிப்ரவரி, ஜூன் மாதங்களில் 2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ என்னிடம் 15 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டது. நானும் பேக்ஸ் மூலம் பதில் அனுப்பினேன். ஆனாலும் இந்த விவகாரம் இழுத்துக் கொண்டே போகிறது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காண யாரும் விரும்பவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.

    லோக்பால் விவகாரம் நாடு முழுவதும் பூதாகாரமானதற்கு 2ஜி தான் காரணம் என்றார்.

    ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் ப. சிதம்பரம் உடனே பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.


    Posted by விழியே பேசு... at 3:40 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ▼  September (419)
      • பாலா இயக்கத்தில் அதர்வா!
      • அஜித்தை இயக்குகிறார் லாரன்ஸ்
      • ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்த...
      • மதுரை மேயர் தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போ...
      • என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ர...
      • காங்கிரஸ் அரசியல் ரொம்பப் புதுசா இருக்கே!
      • அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட...
      • 2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சம...
      • சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!
      • போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்...
      • வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய வன...
      • டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள்...
      • உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வ...
      • 2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்ல...
      • ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான...
      • சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா
      • அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்ல...
      • தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேல...
      • ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000...
      • நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-'பேய்' என மக்கள் ப...
      • சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!
      • பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்டை' வைத்து அனைவரைய...
      • ப.சிதம்பரம், பிரணாப் இடையிலான மோதல்: பிரதமரை சந்தி...
      • முத்துலட்சுமி தடுப்பதாக புகார்: வீரப்பன் மகள் கணவர...
      • விஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவல...
      • ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; ராசா Vs எல்...
      • சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்-...
      • மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதுதான் கடைசி தேர்...
      • எங்களால் இப்போது என்ன செய்ய முடியும்?- விஜயகாந்த் ...
      • 'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமர...
      • சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் காதல் திருமணம்
      • இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?
      • ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட...
      • ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது-ராசா திடீர்...
      • அதிமுக- இந்திய கம்யூ கூட்டணி 'டமார்': உள்ளாட்சித் ...
      • பக்கா அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் வ...
      • இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நடிகை ரம்யா திடீர...
      • மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேய...
      • தேமுதிக-மார்க்சிஸ்ட் புதிய கூட்டணியிலும் குழப்பம்!
      • நித்தியானந்தா - சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
      • அதிமுக கூட்டணி..சற்றும் மனம் தளராத 'கஜினி' தா.பாண்...
      • திருச்சி இடைத் தேர்தல்: விஜயகாந்த் திண்டாட்டம் ; த...
      • கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்- கருணாநிதி தகவல்
      • உள்ளே தூக்கி போட்ருவோம்! - சோனாவை எச்சரித்த போலீஸ்
      • அதிமுகவுக்குப் போட்டியாக மதுரை திமுக வேட்பாளர்களும...
      • சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த ...
      • ராஜினாமா செய்கிறேன்-சோனியாவிடம் ப.சிதம்பரம் விருப்பம்
      • தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ் கம்யூ. அறிவிப்பு
      • யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா... தீக்ஷாவா? - விக்ரம...
      • 'ரா ஒன்னை விட ராணாதான் இப்போ முக்கியம்!'
      • ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!
      • கே பாலச்சந்தர், விக்ரம், இயக்குநர் விஜய்க்கு ரிட்ஸ...
      • சிறையில் திமுகவினருக்கு மனித உரிமை மீறல்- ஜனாதிபதி...
      • லிபிய சிறையில் 1,270 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
      • மீண்டும் ரூ 20000க்கு கீழே சரிந்த தங்கம் விலை... ஒ...
      • போர்க்குற்றம்: ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ...
      • போப் ராஜினாமா செய்திக்கு வாடிகன் கடும் கண்டனம்
      • காங்கிரஸில் இருப்பதால் மன்மோகன் சிங் கெட்டுவிட்டார...
      • ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்...
      • ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகம...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மோதும் 'சைதை சிங்...
      • நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியு...
      • சோனா - எஸ்.பி.பி.சரண்! சமாதானம் பேச மறுத்த இசைஞானி!!
      • எங்கேயும் எப்போதும் இயக்குனருடன் இணையும் ஆர்யா
      • 3-ம் பரிசு பெற்றவருக்கு '3' படத்தில் சான்ஸ் !
      • விஜயகாந்த்துடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு- இன்று...
      • ‘ஏழாம் அறிவு’ படத்தில் உலகத்தமிழர்களுக்கு ஒரு பாடல...
      • தூத்துக்குடியில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை ; த...
      • எஸ்.பி.பி. சரண் வீடு முன்பு முற்றுகை போராட்டம்: பெ...
      • என் 'ஏரியாவில்' திமுக அமோக வெற்றி பெறும்-மு.க.அழகிரி
      • அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!
      • சோனியாவை பாலு சந்தித்தது ஏன்?-கருணாநிதி விளக்கம்
      • 10 ஆண்டில் 15 பேரை மணந்த 'மன்மதன்' கைது!
      • திருச்சி மேற்கில் தேமுதிக நிலை என்ன??
      • ரஜினி வழியில் இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித்
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ப.சிதம்பரம் பதவி விலக தே...
      • சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்பு...
      • டெண்டுல்கரை விமர்சித்த விவகாரம் : அந்த பல்டி அடித்...
      • சந்திக்க 'டைம்' கேட்ட ராஜபக்சே-நிராகரித்த ஒபாமா! ;...
      • இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா
      • 2ஜி ஸ்பெக்ட்ரம்: தயாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம்...
      • நிர்வாணமாக நடிக்க தயார் என்கிறார் பத்மப்ரியா!
      • தனுஷின் 'மயக்கம் என்ன' ட்ரைலர்
      • ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: ...
      • திருப்பூரில் மினி முத்தூட் நிறுவனத்தில் 3,489 பவுன...
      • ஜன்லோக்பால் இருந்திருந்தால் சிதம்பரம் சிறையில் இரு...
      • ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தை?
      • 'தனியே தனந்தனியே'... தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 7...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக சார்பில் ஏ.க...
      • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்...
      • ஆஸ்கர் விருதுப் -எந்திரன் நிராகரிப்பு- மலையாளப் பட...
      • சூடுபிடிக்கும் பிடிக்கும் தினகரன் அலுவலக எரிப்பு வ...
      • 7ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழா போட்டோக்கள் மற்று...
      • இருந்த ஒரு கண்ணையும் தானம் செய்த பட்டோடி!
      • அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளும் வெளியே...
      • ஏழாம் அறிவு இசை வெளியீடு... விழாக்களின் சிகரம்!
      • 7ஆம் அறிவு ட்ரைலர்
      • ''பயந்தாங்கொள்ளி சச்சின்'': சுயசரிதையில் சோயப் அக்...
      • சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
      • ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறி...
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.