விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, September 24, 2011

    2ஜி ஸ்பெக்ட்ரம்: தயாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம் அம்பலத்திற்கு வந்தது


    தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் சுதந்திரமாக செயல்பட்டு தனது துறையே முடிவு செய்வதற்கு அனுமதிக்குமாறும், அமைச்சரவை குழுவின் அறிவுரை ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார். இதற்கு பிரதமர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துக்கொண்டதால் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு பிரதமரும் காரணமாக அமைந்து விட்டதாகவும், இவரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் அரசியல் மேலும் சூடு பிடிக்கும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

    2 ஜி ஸ்பெகட்ரம் முறைகேடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி விழுங்கி நிற்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து மத்திய அமைச்சர் ராஜா முதல் கனிமொழி மற்றும் மெகா கம்பெனிகளின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிற வேளையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊழலுக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் சிதம்பரம் பதவி விலக வேண்டும்; இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வருகின்றன.

    இந்நிலையில் தொலை தொடர்பு துறையில் ( 2004 முதல் 2007 வரை ) மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி ( ஊழல் காரணமாக அமைச்சர் பதவியை இழந்தவர்) ஸ்பெக்ட்ரம் விதி நிர்ணயம் மற்றும் எந்த அளவுக்கு விற்கலாம் என்ற விஷயத்தில் அமைச்சரவை குழு எடுத்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியிருக்கிறது. இந்த கடிதம் மூலம் தானே விலை நிர்ணயத்தில் ராஜாங்கம் நடத்தி ஆதாயம் தேட தயாநிதி முயற்சித்துள்ளார் என்று தெரிய வந்திருக்கிறது.

    தகவல் அறியும் சட்டம் மூலம் விவேக்கார்க் என்பவர் இந்த கடித நகலை பெற்றுள்ளார்.

    2006 ஜனவரி மாதம் பாதுகாப்பு துறை பரிந்துரையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பது மற்றும் விலை நிர்ணயத்திற்கு அமைச்சரவை குழு பரிந்துரைக்க ஒப்புதல் வழங்கினார் பிரதமர். இதன்படி அமைச்சரவை குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால் பிரதமரும், தயாநிதியும் சந்தித்து ( பிப். 1ல் ) பேசிய பின்னர் தலைகீழாக மாறியது.

    "சீக்ரெட்" லெட்டர் ஊருக்கு தெரிந்தது:
     பரிந்துரைகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சரவை குழுவிற்கு பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்து தயாநிதி பொறுமினார். இதனையடுத்து அவர் பிரதமருக்கு 2006 பிப்., 28 ம் தேதி கடிதம் ஒன்று எழுதி அனுப்புகிறார். இந்த கடிதம் “ சீக்ரெட் “ என்று மேலிடத்தில் குறியிடப்பட்டுள்ளது. இதில், அமைச்சரவை குழுவின் பரிந்துரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அந்தக்குழுவிற்கு தாங்கள் அளித்துள்ள அறிவுரைகள் நாம்பேசிக்கொண்டதற்கு மாறாக உள்ளது. இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைதொடர்பு துறையே சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு பிரதமர் பிரதமர் மவுனம் காத்தார். இவரது அலுவலகம் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை .

    இதனையடுத்து தயாநிதி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரத்தை விற்க துவங்கினார். இதே வழியில் 2008 ல் பதவிக்கு வந்த ராஜாவும் பின்பற்றியிருக்கிறார். இதனால் ஸ்பெக்ட்ரம் பெரும் ஊழலில் சிக்கியது. இதன் மூலம் இந்த ஊழலுக்கு வித்திட்டவர் தயாநிதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. இதன் காரணமாக பிரதமரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் வலுப்படுகிறது,

    கூட்டணி தர்மம் காக்க வேண்டியுள்ளது:
     கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இந்த அரசாங்கம் பல்வேறு முடிவுகளை எடுக்கும் போது கூட்டணி தர்மத்தையும் காக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    சி.பி.ஐ.,விசாரிக்குமா தயாநிதியை ? :
    ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் ஸ்பெகட்ரம் கேட்டு விண்ணப்பித்தபோது இவருக்கு தயாநிதி உரிமம் வழங்காமல் காலம் தாமதித்து வந்தார். இதனால் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்க வேண்டியதாயிற்று. இதனை வாங்கிய மலேசிய மாக்ஸிஸ் துணை நிறுவனம் சன்குழுமத்தில் பல கோடிகளை பங்குகளை வாங்கியது. இதன் முன் நடவடிக்கையாக மிரட்டியதாகவும் இவர் அளித்த புகாரின்படி தயாநிதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின இதன் அடிப்படையில் தயாநிதியிடம் சி.பி.ஐ., விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இதில் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் தொடர்ந்து விசாரிக்க முடியாமல் இருக்கிறோம் என சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் முழுமையாக கைவிட்டு விட்டோம் என்று சொல்ல முடியாது என்று சி.பி.ஐ., தெரிவித்தது. மேலும் வரும் 30 ம் தேதிக்குள் 3 வது குற்றச்சாட்டுக்கள் பதியவிருப்பதா இருந்தது இன்னும் தள்ளிப்போகும் என தெரிகிறது . இதில் சி.பி.ஐ., தயாநிதி குறித்து நிலை தெரிய வரும் என சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகியிருப்பதால் இது ஸ்பெக்ட்ரம் ஊழலின் சங்கிலி தொடர் விசாரணைக்கு துணையாக இருக்கும் என தெரிகிறது.

    நான் செய்தது தவறு என்றால் எனக்கு முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அனைவரும் சிறையில் தள்ளப்பட வேண்டும் என கோர்ட்டில் ராஜா அளித்த வாதத்தின்படி தயாநிதியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்துமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும். இதற்கிடையில் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வத்ந்சிங்கிடம் இன்று ( 24 ம் தேதி) சி.பி.ஐ., விசாரணை நடத்தி அவர் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறது.

    பிரதமர் டில்லிக்கு எப்போது வருவார் ?
    பிரதமர் மன்மோகன்சிங் தற்போது ஐ.நா., குழு கூட்டத்தில் பங்கேற்க சென்றிருப்பதால் அவர் டில்லிக்கு எப்போது திரும்புவார் ( வரும் செவ்வாய்க்கிழமை) என அரசியல் கட்சிகள் காத்து நிற்கின்றன. இவர் வந்ததும் சிதம்பரம் குறித்த நிதி அமைச்சக கடிதம் மற்றும் தயாநிதி பிரதமருக்கு அனுப்பிய கடிதம் குறித்து கேள்விகள் எழுப்பப்படும். இதற்கு என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்து அரசியலின் அடுத்த நகர்வுகள் இருக்கும்.




    Posted by விழியே பேசு... at 5:08 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ▼  September (419)
      • பாலா இயக்கத்தில் அதர்வா!
      • அஜித்தை இயக்குகிறார் லாரன்ஸ்
      • ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்த...
      • மதுரை மேயர் தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போ...
      • என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ர...
      • காங்கிரஸ் அரசியல் ரொம்பப் புதுசா இருக்கே!
      • அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட...
      • 2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சம...
      • சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!
      • போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்...
      • வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய வன...
      • டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள்...
      • உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வ...
      • 2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்ல...
      • ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான...
      • சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா
      • அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்ல...
      • தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேல...
      • ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000...
      • நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-'பேய்' என மக்கள் ப...
      • சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!
      • பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்டை' வைத்து அனைவரைய...
      • ப.சிதம்பரம், பிரணாப் இடையிலான மோதல்: பிரதமரை சந்தி...
      • முத்துலட்சுமி தடுப்பதாக புகார்: வீரப்பன் மகள் கணவர...
      • விஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவல...
      • ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; ராசா Vs எல்...
      • சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்-...
      • மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதுதான் கடைசி தேர்...
      • எங்களால் இப்போது என்ன செய்ய முடியும்?- விஜயகாந்த் ...
      • 'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமர...
      • சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் காதல் திருமணம்
      • இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?
      • ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட...
      • ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது-ராசா திடீர்...
      • அதிமுக- இந்திய கம்யூ கூட்டணி 'டமார்': உள்ளாட்சித் ...
      • பக்கா அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் வ...
      • இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நடிகை ரம்யா திடீர...
      • மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேய...
      • தேமுதிக-மார்க்சிஸ்ட் புதிய கூட்டணியிலும் குழப்பம்!
      • நித்தியானந்தா - சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
      • அதிமுக கூட்டணி..சற்றும் மனம் தளராத 'கஜினி' தா.பாண்...
      • திருச்சி இடைத் தேர்தல்: விஜயகாந்த் திண்டாட்டம் ; த...
      • கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்- கருணாநிதி தகவல்
      • உள்ளே தூக்கி போட்ருவோம்! - சோனாவை எச்சரித்த போலீஸ்
      • அதிமுகவுக்குப் போட்டியாக மதுரை திமுக வேட்பாளர்களும...
      • சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த ...
      • ராஜினாமா செய்கிறேன்-சோனியாவிடம் ப.சிதம்பரம் விருப்பம்
      • தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ் கம்யூ. அறிவிப்பு
      • யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா... தீக்ஷாவா? - விக்ரம...
      • 'ரா ஒன்னை விட ராணாதான் இப்போ முக்கியம்!'
      • ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!
      • கே பாலச்சந்தர், விக்ரம், இயக்குநர் விஜய்க்கு ரிட்ஸ...
      • சிறையில் திமுகவினருக்கு மனித உரிமை மீறல்- ஜனாதிபதி...
      • லிபிய சிறையில் 1,270 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
      • மீண்டும் ரூ 20000க்கு கீழே சரிந்த தங்கம் விலை... ஒ...
      • போர்க்குற்றம்: ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ...
      • போப் ராஜினாமா செய்திக்கு வாடிகன் கடும் கண்டனம்
      • காங்கிரஸில் இருப்பதால் மன்மோகன் சிங் கெட்டுவிட்டார...
      • ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்...
      • ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகம...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மோதும் 'சைதை சிங்...
      • நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியு...
      • சோனா - எஸ்.பி.பி.சரண்! சமாதானம் பேச மறுத்த இசைஞானி!!
      • எங்கேயும் எப்போதும் இயக்குனருடன் இணையும் ஆர்யா
      • 3-ம் பரிசு பெற்றவருக்கு '3' படத்தில் சான்ஸ் !
      • விஜயகாந்த்துடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு- இன்று...
      • ‘ஏழாம் அறிவு’ படத்தில் உலகத்தமிழர்களுக்கு ஒரு பாடல...
      • தூத்துக்குடியில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை ; த...
      • எஸ்.பி.பி. சரண் வீடு முன்பு முற்றுகை போராட்டம்: பெ...
      • என் 'ஏரியாவில்' திமுக அமோக வெற்றி பெறும்-மு.க.அழகிரி
      • அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!
      • சோனியாவை பாலு சந்தித்தது ஏன்?-கருணாநிதி விளக்கம்
      • 10 ஆண்டில் 15 பேரை மணந்த 'மன்மதன்' கைது!
      • திருச்சி மேற்கில் தேமுதிக நிலை என்ன??
      • ரஜினி வழியில் இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித்
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ப.சிதம்பரம் பதவி விலக தே...
      • சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்பு...
      • டெண்டுல்கரை விமர்சித்த விவகாரம் : அந்த பல்டி அடித்...
      • சந்திக்க 'டைம்' கேட்ட ராஜபக்சே-நிராகரித்த ஒபாமா! ;...
      • இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா
      • 2ஜி ஸ்பெக்ட்ரம்: தயாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம்...
      • நிர்வாணமாக நடிக்க தயார் என்கிறார் பத்மப்ரியா!
      • தனுஷின் 'மயக்கம் என்ன' ட்ரைலர்
      • ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: ...
      • திருப்பூரில் மினி முத்தூட் நிறுவனத்தில் 3,489 பவுன...
      • ஜன்லோக்பால் இருந்திருந்தால் சிதம்பரம் சிறையில் இரு...
      • ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தை?
      • 'தனியே தனந்தனியே'... தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 7...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக சார்பில் ஏ.க...
      • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்...
      • ஆஸ்கர் விருதுப் -எந்திரன் நிராகரிப்பு- மலையாளப் பட...
      • சூடுபிடிக்கும் பிடிக்கும் தினகரன் அலுவலக எரிப்பு வ...
      • 7ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழா போட்டோக்கள் மற்று...
      • இருந்த ஒரு கண்ணையும் தானம் செய்த பட்டோடி!
      • அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளும் வெளியே...
      • ஏழாம் அறிவு இசை வெளியீடு... விழாக்களின் சிகரம்!
      • 7ஆம் அறிவு ட்ரைலர்
      • ''பயந்தாங்கொள்ளி சச்சின்'': சுயசரிதையில் சோயப் அக்...
      • சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
      • ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறி...
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.