விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, September 3, 2011

    முக்கியத்துவம் பெற்ற மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டம்! பலத்த கைதட்டல் வாங்கிய செல்வகணபதி!


    சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (02.09.2011) சேலத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டம் பலவகையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

    ஆரம்பம் முதலே, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களை சேலம் மாவட்ட அரசியலில் கட்சியில் ஓரம் கட்டியே வந்தார்.


    மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கு வந்தார். அவரை வரவேற்க செல்லாமல் கடைசி நேரத்தில், உடல்நிலை சரியில்லை என்று கோகுலம் மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டர் வீரபாண்டி ஆறுமுகம்.


    இதனால், மு.க.ஸ்டாலின்தான் மருத்துவ மனைக்கு போனாரே தவிர, வீரபாண்டி ஆறுமுகம் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு போகவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, சேலம் தெற்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரான கிச்சிப்பாளையம் குணசேகரனுக்கு தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.


    குணசேகரனுக்கு சீட்டு கொடுத்தால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கலைஞரிடம் அடம் பிடித்து, ஸ்டாலின் ஆதரவாளருக்கு சீட்டு கிடைக்காமல் செய்தார் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானார் வீரபாண்டி ஆறுமுகம்.

    அதற்கு மாற்றாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பணம் கூட கட்டாத மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை இந்த தொகுதியில் போட்டியிட வைத்து, மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவை தோல்வியடைய வைத்தார்.


    நில மோசடி வழக்குகளில் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி, கோவை சிறையில் இருக்கும் இந்த நிலையில் கூட்டம் நடத்தக்கூடாது என்று சிலர் அடம பிடித்தபோதும், முடியாது என்று கூட்டத்தை நடத்தியுள்ளார்கள் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள்.







    வீரபாண்டி ஆறுமுகத்தின் மிக நெருக்கமான சகாவாக இருந்து, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஊடல் கொண்டு அவரிடமிருந்து, விலகிய பனமரத்துப்பட்டி ராஜேந்திரந்திரன் தான் இப்போது மு.க.ஸ்டாலின் அணியில் முன்னாள் நிற்பவர். அவருக்கு பின்னால், டி.எம்.செல்வகணபதி எம்.பி, முன்னாள் மேயர் சூடாமணி, முன்னாள் துணை மேயர் சுபாஷ் போன்றவர்கள் இருக்கிறார்கள்.


    நீன்ட நாள்களாக வீரபாண்டி ஆறுமுகத்தின் விசுவாசிகளாக இருந்த பலர், வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய அல்லக்கைகளாக இருந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சிக்கரகளை நெருங்கவிடாமல், தாங்கள் விருப்பம் போல விளையாடிய பூலாவாரி சேகர், பாரப்பட்டி சுரேஸ்குமார், கவுசிகபூபதி, மற்றும் போலிஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் போன்றோரின் நடவடிக்கையால் வெறுப்புற்ற மாவட்டத்தின் பெரும்பாலான பொறுப்பாளர்கள், மற்றும் கட்சிக்காரர்கள் தற்போது சத்தமில்லாமல் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பி விட்டனர்.




    அதனால், (02.09.2011) சேலம் கோட்டை மைதானம் எதிர்பார்த்ததை காட்டிலும் பலமடங்கு கூட்டம் கூடிவிட்டது. மாலை நான்கு மணி முதல் மழை விட்டு விட்டு வந்து பயம் காட்டியபோதும் ஆறு மணிக்கு கட்டுக்கடங்காது கூட்டம் கூடிவிட்டது.

    வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசு ராஜேந்திரன் பேசும்போது, எங்களின் உயிருள்ளவரையில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் எங்களின் “உயிர், ஸ்டாலின் அவர்கள் தான் “உயிர்மூச்சு இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.


    தற்போததைய சட்டமன்றம் சட்டமன்றம் போல நடக்கவில்லை சிங்கு ஜா போடும் மன்றமாகத்தான் உள்ளது. அம்மா அம்மா என்பதைத் தவிர அங்கு வேறு எந்த வார்த்தையும் கேட்டக முடிவதில்லை. என் நண்பர் ஒருவர் வேடிக்கையாக சொன்னார், ஜெயலலிதா ஏன்...? ஆடு மாடுகளை மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறார் தெரியுமா...? என்று கேட்டார்.


    எனக்கு தெரிய வில்லை என்று சொன்னேன். அந்த விலங்குகள் எல்லாம் “அம்மா என்று மட்டும் சொல்லுவதால் தான் அதை தமிழக மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறார் என்று சொன்னார். தன் கட்சிகாரர்கள் மட்டுமல்ல தமிழகமே “அம்மா புராணம் பாடவேண்டியுள்ளது இந்த ஆட்சியில், என்ற செல்வகணபதி கூட்டத்தின் பலமான கைதட்டலை பெற்றார்.


    வழ..வழ....வென்று பலரையும் பேச விடாமல், 7.45 மணிக்கு மு.க.ஸ்டாலின் பேசவந்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வீரபாண்டியார் இல்லை, அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், இந்த நேரம், இங்கு நடத்து கொண்டிருக்கும் இந்த கூட்டம் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருப்பார். அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது நமக்கு வருத்தமானது தான். ஆனாலும் அவர் இங்குள்ள அத்துனை பேரின் உள்ளங்களிலும் நிறைந்துள்ளார்.


    சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளை கேட்கலாம், அதற்க்கு அமைச்சர் பெருமக்கள் பதில் சொல்வார்கள் இதுதான் மரபு. கேள்வி நேரத்தில் யாரும், யாரைப்பற்றியும் விமர்சிக்க கூடாது என்பது மரபு. ஆனால் இந்த சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில், ஒரு அமைச்சர் நம் கட்சி உறுப்பினர் துரைமுருகனை பார்த்து இவர் பாடி லாங்வேஜில் கிண்டல் செய்கிறார் என்கிறார்.


    அதற்கு இன்னொரு சட்டமன்ற உறுப்பினர் இவர் 1989ம் வருடம், நம் தலைவியை சட்டமன்றத்திலேயே அடித்து அவமானப்படுத்தியவர் என்று பேசுகிறார். இதையெல்லாம் சபாநாயகர் அணுமதிக்கிறார், எதிர்க்கட்சி தலைவரும் கண்டுகொள்வதில்லை.... எதிர்க்கட்சி என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை.


    சட்டமன்றத்தில் ஒரு சம்பவம் பற்றி பேசும்போது, ஒரு கட்சியின் உறுப்பினர்கள் தாங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், தலைவர்களுடன் பெசிக்கொள்ளவும் ஒரே பகுதியில் உட்கார இடம் கொடுக்கவேண்டும் அல்லது ஒருவர் பின் ஒருவராக அமர இடம் கொடுக்கவேண்டும்.


    ஆனால் இப்போது சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது. நம் கட்சி உருப்பினகளுக்கு ஆளுக்கு ஒருபக்கமாக இடம் கொடுத்துள்ளார்கள். நாங்கள் யாரு யாரோடும் பேசிக்கொள்ளமுடியாத் நிலையில் சட்டமன்றத்தில் இருக்கிறோம். சட்டமன்றத்துக்கு என்று ஒரு மரபு உள்ளது. அந்த மரபு இங்கே மீறப்படுகிறது.


    ஒருமுறை எதிர்க்கட்சி வரிசையில் உறுப்பினராக இருந்த டாக்டர் ஹண்டே அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து நீங்கள் மூன்றாம் தரமான ஆட்சி நடத்திக் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று பேசினார்.


    அதற்கு பதிலைத்த தலைவர் கலைஞர் அவர்கள், உறுப்பினர் சொல்லுவது போல நான் மூன்றாம் தரமான ஆட்சி நடத்தவில்லை.... நான்காம் தரமான ஆட்சி நடத்திக்கொண்டுள்ளேன். ஆமாம்... பிராமணன், வைசியன், சத்திரியன்,  சூத்திரன் என்கிற அடிப்படையில் நான் நான்காம் தரமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிரேன் என்றார். இப்படி நாகரீகமாக நடந்த மன்றத்தில் இப்போது என்ன நடக்கிறது.




    தாங்கள் நினைத்ததை செய்து முடிக்க துடிகிறார் ஜெயலலிதா. சமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது. சட்டமன்ற கூட்டம் கூட்டப்படுவதர்க்கு முன்பே, இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளீர்கள். நான்கு மாதம் முன்பு சமச்சீர் கல்வி தரமானது என்று சொல்லி பாடப்புத்தகங்களை அச்சடிக்கசொன்ன கல்வித்துறை செயலாளர் இப்போது சமச்சீர் கல்வி சரியில்லை என்று சொல்லியுள்ளார் இப்படி பல காரணங்களை சொல்லிய உச்சநீதிமன்றம் ஜெயலலிதா அரசை கண்டனம் செய்துள்ளது.











    அதுபோலவே ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் இன்னும் ஒரு அடி கொடுக்கப்போகிறது... அது புதிய தலைமை செயலகத்தை தரமில்லாத்து  என்று சொல்லி இழுத்து மூடிஇருப்பதற்கு.


    2002 வருடம் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக வந்ததும் இப்போது இருக்கும் இந்த ஜெயின்ஜார்ஜ் கோட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழையது, பல இடங்களில் ஒழுகுகிறது.. அந்த ஓட்டையை சரிசெய்ய மத்திய அரசிடம் அனுமதி வாங்கவேண்டியுள்ளது.


    ஏன்... இந்த தலைமைச்செயலகத்தை சுற்றிலும் முளைக்கும் புல், பூண்டுகளை புடுங்குவதற்கு கூட நாம் மத்திய அரசிடமும், பாதுகாப்பு துறையிடமும் அனுமதி வாங்கவேண்டியுள்ளது, எனவே நாமக்கு ஒரு புதிய தலைமை செயலகம் காட்டவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் அதை தி.மு.கவும் ஆதரித்தது.


    முதலில் மகாபலிபுராம் சாலையில் இடம் பார்த்தார், பின்னர் ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தான் கட்டவேண்டும் என்றார். பின்னர் கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூலக ஆய்வுமையம் உள்ள இடத்தில் கட்டவேண்டும் என்றார்.


    அவரது ஆட்சிகாலத்தில் எந்த இடத்திலும் புதிய தலைமைச்செயலகம் கட்டவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை நிறைவேற்றும் விதமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் ஒரு பகுதியை சட்ட மன்றமாகவும் ஒருபகுதியை தலைமைச் செயலகமாகவும் காட்ட முடிவு செய்யப்பட்டு அந்த பணிகள் முடிவடையும் நிலையில், இப்போது அந்த கட்டிடம் தரமானது இல்லை என்று விசாரணை கமிசன் போட்டுள்ளார்.




    ஏற்கனவே மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று என்மீது போடப்பட்ட விசாரனை கமிசன் என்ன ஆனாது என்று தெரியவில்லை. இப்போது போட்டப்பட்ட விசாரணை கமிஷனும் அப்படித்தான் இருக்கும்.

    தலைமை செயலகத்தை எப்படி மருத்துவமனையாக மாற்ற முடியும். அரசு அலுவலகம் இருக்கும் அமைப்பு வேறுமாதிரியானது, நோயாளிகள் போகவும் வரவும் வசதிகள் உள்ளபடி கட்டப்படும் மருத்துவமணை கட்டமைப்பு வேறுமாதிரியானது இதிலும் நாங்கள் நீதிமன்றத்துக்கு போயுள்ளோம். நீதிமன்றம் விசாரணை நடத்தி ஜெயலலிதாவிற்கு சரியான பாடம் புகட்டும் என்றார் ஸ்டாலின்.




    Posted by விழியே பேசு... at 11:50 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ▼  September (419)
      • பாலா இயக்கத்தில் அதர்வா!
      • அஜித்தை இயக்குகிறார் லாரன்ஸ்
      • ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்த...
      • மதுரை மேயர் தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போ...
      • என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ர...
      • காங்கிரஸ் அரசியல் ரொம்பப் புதுசா இருக்கே!
      • அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட...
      • 2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சம...
      • சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!
      • போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்...
      • வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய வன...
      • டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள்...
      • உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வ...
      • 2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்ல...
      • ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான...
      • சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா
      • அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்ல...
      • தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேல...
      • ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000...
      • நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-'பேய்' என மக்கள் ப...
      • சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!
      • பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்டை' வைத்து அனைவரைய...
      • ப.சிதம்பரம், பிரணாப் இடையிலான மோதல்: பிரதமரை சந்தி...
      • முத்துலட்சுமி தடுப்பதாக புகார்: வீரப்பன் மகள் கணவர...
      • விஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவல...
      • ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; ராசா Vs எல்...
      • சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்-...
      • மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதுதான் கடைசி தேர்...
      • எங்களால் இப்போது என்ன செய்ய முடியும்?- விஜயகாந்த் ...
      • 'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமர...
      • சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் காதல் திருமணம்
      • இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?
      • ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட...
      • ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது-ராசா திடீர்...
      • அதிமுக- இந்திய கம்யூ கூட்டணி 'டமார்': உள்ளாட்சித் ...
      • பக்கா அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் வ...
      • இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நடிகை ரம்யா திடீர...
      • மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேய...
      • தேமுதிக-மார்க்சிஸ்ட் புதிய கூட்டணியிலும் குழப்பம்!
      • நித்தியானந்தா - சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
      • அதிமுக கூட்டணி..சற்றும் மனம் தளராத 'கஜினி' தா.பாண்...
      • திருச்சி இடைத் தேர்தல்: விஜயகாந்த் திண்டாட்டம் ; த...
      • கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்- கருணாநிதி தகவல்
      • உள்ளே தூக்கி போட்ருவோம்! - சோனாவை எச்சரித்த போலீஸ்
      • அதிமுகவுக்குப் போட்டியாக மதுரை திமுக வேட்பாளர்களும...
      • சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த ...
      • ராஜினாமா செய்கிறேன்-சோனியாவிடம் ப.சிதம்பரம் விருப்பம்
      • தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ் கம்யூ. அறிவிப்பு
      • யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா... தீக்ஷாவா? - விக்ரம...
      • 'ரா ஒன்னை விட ராணாதான் இப்போ முக்கியம்!'
      • ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!
      • கே பாலச்சந்தர், விக்ரம், இயக்குநர் விஜய்க்கு ரிட்ஸ...
      • சிறையில் திமுகவினருக்கு மனித உரிமை மீறல்- ஜனாதிபதி...
      • லிபிய சிறையில் 1,270 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
      • மீண்டும் ரூ 20000க்கு கீழே சரிந்த தங்கம் விலை... ஒ...
      • போர்க்குற்றம்: ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ...
      • போப் ராஜினாமா செய்திக்கு வாடிகன் கடும் கண்டனம்
      • காங்கிரஸில் இருப்பதால் மன்மோகன் சிங் கெட்டுவிட்டார...
      • ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்...
      • ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகம...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மோதும் 'சைதை சிங்...
      • நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியு...
      • சோனா - எஸ்.பி.பி.சரண்! சமாதானம் பேச மறுத்த இசைஞானி!!
      • எங்கேயும் எப்போதும் இயக்குனருடன் இணையும் ஆர்யா
      • 3-ம் பரிசு பெற்றவருக்கு '3' படத்தில் சான்ஸ் !
      • விஜயகாந்த்துடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு- இன்று...
      • ‘ஏழாம் அறிவு’ படத்தில் உலகத்தமிழர்களுக்கு ஒரு பாடல...
      • தூத்துக்குடியில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை ; த...
      • எஸ்.பி.பி. சரண் வீடு முன்பு முற்றுகை போராட்டம்: பெ...
      • என் 'ஏரியாவில்' திமுக அமோக வெற்றி பெறும்-மு.க.அழகிரி
      • அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!
      • சோனியாவை பாலு சந்தித்தது ஏன்?-கருணாநிதி விளக்கம்
      • 10 ஆண்டில் 15 பேரை மணந்த 'மன்மதன்' கைது!
      • திருச்சி மேற்கில் தேமுதிக நிலை என்ன??
      • ரஜினி வழியில் இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித்
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ப.சிதம்பரம் பதவி விலக தே...
      • சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்பு...
      • டெண்டுல்கரை விமர்சித்த விவகாரம் : அந்த பல்டி அடித்...
      • சந்திக்க 'டைம்' கேட்ட ராஜபக்சே-நிராகரித்த ஒபாமா! ;...
      • இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா
      • 2ஜி ஸ்பெக்ட்ரம்: தயாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம்...
      • நிர்வாணமாக நடிக்க தயார் என்கிறார் பத்மப்ரியா!
      • தனுஷின் 'மயக்கம் என்ன' ட்ரைலர்
      • ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: ...
      • திருப்பூரில் மினி முத்தூட் நிறுவனத்தில் 3,489 பவுன...
      • ஜன்லோக்பால் இருந்திருந்தால் சிதம்பரம் சிறையில் இரு...
      • ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தை?
      • 'தனியே தனந்தனியே'... தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 7...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக சார்பில் ஏ.க...
      • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்...
      • ஆஸ்கர் விருதுப் -எந்திரன் நிராகரிப்பு- மலையாளப் பட...
      • சூடுபிடிக்கும் பிடிக்கும் தினகரன் அலுவலக எரிப்பு வ...
      • 7ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழா போட்டோக்கள் மற்று...
      • இருந்த ஒரு கண்ணையும் தானம் செய்த பட்டோடி!
      • அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளும் வெளியே...
      • ஏழாம் அறிவு இசை வெளியீடு... விழாக்களின் சிகரம்!
      • 7ஆம் அறிவு ட்ரைலர்
      • ''பயந்தாங்கொள்ளி சச்சின்'': சுயசரிதையில் சோயப் அக்...
      • சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
      • ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறி...
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.