:தனித் தமிழீழத்துக்காக ஐ.நா.வில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர், தனித் தமிழ்நாடு மற்றும் காஷ்மீருக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆவேசமாக கூறியுள்ளார்.
தனித் தமிழீழம் அமைய ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த திமுக தலைவர் கருணாநிதி,தமிழர்கள் சிந்திய ரத்தமும்,கொடுத்த உயிர்ப் பலிகளும் வீண் போகாது என்றும்,இன்றில்லாவிட்டால் நாளை தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும் என்றும் கூறி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க,”தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக ஐ.நா. வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக காஷ்மீர் மற்றும தமிழ்நாடு ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தலாம்.
தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசிடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும்.
காஷ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக 1948 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே முதலில் காஷ்மீர் தொடர்பான தீர்மானத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும்”எனக் கூறியுள்ளார்.
தனித் தமிழீழம் அமைய ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த திமுக தலைவர் கருணாநிதி,தமிழர்கள் சிந்திய ரத்தமும்,கொடுத்த உயிர்ப் பலிகளும் வீண் போகாது என்றும்,இன்றில்லாவிட்டால் நாளை தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும் என்றும் கூறி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க,”தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக ஐ.நா. வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக காஷ்மீர் மற்றும தமிழ்நாடு ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தலாம்.
தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசிடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும்.
காஷ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக 1948 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே முதலில் காஷ்மீர் தொடர்பான தீர்மானத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும்”எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment