திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள். இதனால் புறக்கணித்தவர்களில் முக்கியமான 17 பேருக்கும் விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கட்சியில் நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அழகிரி, சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று அவசரமாக திரும்பினார். அழகிரி இல்லத்தில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 17 பேரும் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், கட்சியின் பொதுச்செயலாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கட்சியின் அமைப்புப்புச்செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எப்படி நடவடிக்க எடுக்க முடியும்.
’’தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என்ற இடங்களுக்கு பிறகு அமைப்புச்செயலாளர்கள் என்ற இடத்தில் இரண்டு பெயர்கள் உண்டு. முதலில் என் பெயர்தான் இருக்கிறது. அதற்கு பிறகுதான் டி.கே.எஸ். பெயர் உள்ளது.
முதல் இடத்தில் இருக்கும் என்னிடம் கேட்காமல், அடுத்த இடத்தில் இருப்பவருக்கு யார் அதிகாரம் தந்தது. என்னை உதாசீனப்படுத்திவிட்டு எனக்கு கீழ் இருப்பவர்களுக்கு எப்படி முன்னுரிமை கொடுக்கலாம்’’ என்று அழகிரி கொந்தளித்துள்ளார்.
No comments:
Post a Comment