விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, April 30, 2012

    கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ அமைப்பு

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைப்பு ஒன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. முன்பு போலவே இந்த அமைப்புக்கு, ‘தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு’ என்று தமிழிலும் Tamil Eelam Supporters Organaisation (TESO) என்று ஆங்கித்திலும் பெயர் சூட்டப்பட்டது. 

    கருணாநிதி தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

    இந்த அமைப்பின் குறிக்கோள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கை:- 
    பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம், மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு ‘தனித் தமிழ் ஈழம்’ அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

    இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. 

    வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது. 

    இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25-ந்தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு, போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

    இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும். என்றும் 

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. 

    தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழ் ஊர்ப்பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. 

    இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. 

    ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன. 

    அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், 

    இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது. 

    நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு, ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தரவேண்டும்.

    தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது. 

    இதன்மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப்போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது. தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும், அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.



    Posted by விழியே பேசு... at 4:49 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ▼  April (425)
      • விரைவில் உருவாகிறது நவீன டைட்டானிக் கப்பல்
      • விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' 1st look போட்டோ
      • நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
      • எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!
      • மே 1 - துப்பாக்கி
      • அலெக்ஸ் பால் மேனனை மீட்பதில் புது சிக்கல்: மே 2-ந்...
      • ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாட...
      • நீதிமன்றத்தால் என்னை பதவியில் இருந்து நீக்க முடியா...
      • இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப்...
      • நித்தியானந்தாவை மதுரையை விட்டு வெளியேற்றுக... மதுர...
      • பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கருணாநி...
      • கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ அமைப்பு
      • லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்த ஈழத்தமிழ் மாணவர் தேர்வு
      • விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பேன்...
      • காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு: கிராமங்களில்...
      • குடியரசுத் தலைவர் வேட்பாளர் நானில்லீங்க...: எஸ்கேப...
      • ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மேலும் நெருக...
      • "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி....
      • பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கருணாநிதி ஆதரவு!
      • நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட கிறிஸ் கெய்ல் !!
      • காதல் என்பது மென்னையானது ;அதை கஷ்டப்படுத்துறாங்க :...
      • நண்பன் 100-வது நாள் விழாவில் உறவுகளை கொச்சைப்படுத்...
      • ‘யோஹன்’ தலைப்புக்கு கவுதம் விளக்கம்
      • சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.ம...
      • சச்சினுக்கு எம்.பி. பதவி: காங்கிரஸ் மீது பால் தாக்...
      • மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள்...
      • உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 20 பே...
      • எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?
      • நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!
      • மே தினத்தில் 'பில்லா-2' பாடல், விஸ்வரூபம் 'டிரைலர்...
      • மதுரை ஆதீனம் என்ற ஆலமரத்திற்குக் கீழே முளைத்த காளா...
      • '3'பட ஆடியோ உரிமை விவகாரம்: தனுஷ், ஐஸ்வர்யா மீது ஐ...
      • நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து ...
      • ஊழல், கருப்புப் பணம் குறித்து பேசுவாரா சச்சின்?......
      • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நித்தியானந்தா!
      • மதுரை இளைய ஆதீனமாக ரஞ்சிதாவின் நித்யானந்தா பதவியேற...
      • பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..?
      • நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் வி...
      • ‘பொறுத்திருந்து பாருங்கள்.,பின்னர் கேளுங்கள்’- ஜனா...
      • போபோர்ஸ் ஊழலில் சோனியா பெயர் இடம் பெறாதது வியப்பளி...
      • கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்ன...
      • கார்த்திக்கு பிரியாணி கொடுத்து சூர்யாவை ஏமாற்றிய வ...
      • விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!
      • முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஜாமீனில் ...
      • அபிஷேக்சிங்வி ஆபாச வீடியோ(இணைப்பு): தடை செய்ய காங்...
      • எம்.பி. பதவியை ஏற்க சச்சின் தெண்டுல்கர் கட்டாயப் ப...
      • பிரபு தேவாவின் புது காதலி !
      • சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
      • சிம் கார்டு வழங்க புதிய நடைமுறை: நிபுணர் குழுவை அம...
      • பில்லா-2 பட பாடல்கள்! (promo videos)
      • மே1ம் தேதி 'விஸ்வரூபம்'!
      • சச்சின் தெண்டுல்கரின் எம்பி பதவி குறித்து கருணாநித...
      • திமுகவில் அழகிரி ஆள், ஸ்டாலின் ஆள் என்று யாரும் இல...
      • பில்லா-2 பட பாடல்கள்!
      • ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்...
      • மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!
      • என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை ...
      • அன்புமணி ராமதாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
      • ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு
      • சச்சின் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை......
      • விஜய் கேட்டும் கொடுக்காத படத்தை விஜய்காந்த் மகனுக்...
      • அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயி...
      • ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்...
      • தெண்டுல்கர் அரசியலில் குதிப்பாரா?
      • சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துர...
      • தனி ஈழம் வேண்டும் என்று எந்தத் தமிழரும் கூறவில்லை:...
      • அஜீத் நாயகிக்கு கல்யாணம்!
      • அன்னா ஹசாரே வை சந்திக்க பால் தாக்கரே மறுப்பு
      • மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒடிசா எம்.எல்.ஏ. விடுதலை
      • சிம்பு போஸ்டர் பின்னணி என்ன?
      • அணையை தகர்க்க வெடிமருந்தை ரெடியாக வைத்திருக்கும் க...
      • தமிழர்களை கொல்ல இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்து...
      • புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் ஆண்ட்ரியா கோ...
      • சசிகலா கணவர் நடராஜன் மீது தொடர்ந்த வழக்கு வாபஸ்
      • "என் தோற்றத்தை கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''...
      • புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட...
      • சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களை எம்.பி. பதவி?
      • அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாரா...
      • கேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்!
      • செக்ஸ் மன்னன் அபிஷேக் சிங்வி தொடர்பான பொதுநல மனு த...
      • பெனாசிர் கொலை வழக்கு:முஷாரப்பை ஒப்படைக்க முடியாது ...
      • 'சில்வர் ஜூப்ளி' காணும் இசைஞானியின் 'ஹவ் டூ நேம் இ...
      • 19-வது ஓவரில் சரவெடி நிகழ்த்தி மும்பை இந்தியன்ஸ் ...
      • பிரச்சினைகளை சந்தித்தேன்....கஷ்டங்களை அனுபவித்தேன்...
      • அடுத்த பட ஹீரோ விக்ரம்தான் - முடிவுக்கு வந்தார் ஷங...
      • போபர்ஸ் ஊழலில் ராஜீவ்காந்தி- அமிதாப்பச்சனுக்கு தொட...
      • சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா ஜோடி!
      • மதிய உணவுத் திட்டம்: 'வரலாற்றையே மாற்ற அதிமுக முயற...
      • 'தண்ணி' யடிக்காத இளைஞர்களுக்கு பரிசு: சைதை துரைசாமி
      • தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்: யுவராஜ்சிங்
      • ராஜபக்சேவுக்காக பொய் சொல்கிறாரா சுஷ்மா??
      • கைவிடப்பட்ட அருள்நிதியின் படம்
      • விஜய்காந்த்திடம் சிக்கிய ரேசன் கடை 'பிராடுகள்': அட...
      • விஜய் ரெடின்னா நானும் ரெடி - உதயநிதி ஸ்டாலின்!
      • தமிழ் ஈழம்: டி.கே.ரங்கராஜனுக்கு கருணாநிதி 'குட்டு'!
      • குடியரசுத்தலைவர் தேர்தல் : கருணாநிதியை சந்திக்க சி...
      • அலெக்ஸ் பால் மேனனை மீட்க களமிறங்குகிறார் விஜயக்கும...
      • திக்விஜய் சிங் ஒரு தீவிரவாதி: மத்திய பிரதேச சபாநாயகர்
      • இதுக்கு தான் இவ்ளோ நாடகமா! தேர்தலில் அன்னா ஹசாரே க...
      • 40 வயதை நெருங்குகிறார் சச்சின்-இன்று 39வது பிறந்த ...
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.