விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, April 27, 2012

    தனி ஈழம் வேண்டும் என்று எந்தத் தமிழரும் கூறவில்லை: சிபிஎம்


    தனி ஈழம் வேண்டும் என்று இலங்கையில் எந்தத் தமிழரும் கூறவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும அதைக் கூறவில்லை. பிற தமிழ்க் கட்சிகளும் அதை வலியுறுத்தவில்லை. மார்கிச்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமுதாயத்தினரும் சம அதிகாரத்துடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்பதே கொள்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

    இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இடம் பெற்றிருந்தார். இலங்கை சென்ற இந்தக் குழு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளை மட்டுமின்றி பல்வேறு தமிழக அமைப்புகள் குழுக்களின் பிரதிநிதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளது.

    இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால், குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு, முழுநிவாரணம், முகாம்களில் தங்கியுள்ளவர்களை மீள்குடியமர்த்துதல், தமிழர்கள் பகுதியிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கி கொள்வது ஆகியவை தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் உடனடி கோரிக்கையாக உள்ளது.

    மேலும், இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

    சுற்றுப் பயணம் முடித்து, சென்னையில் பேட்டியளித்த டி.கே.ரங்கராஜன் இலங்கைத் தமிழர் அமைப்புகளும், பொதுமக்களும் தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவல் அடிப்படையில் அரசியல் தீர்வையே வலியுறுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.

    திமுக தலைவர் கருணாநிதி முரசொலி ஏட்டில் எழுதியுள்ள கடிதத்தில் தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் வலியுறுத்தவில்லை என்று கூறியுள்ளதற்காக டி.கே.ரங்கராஜனை விமர்சித்துள்ளார். இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தைத்தான் டி.கே.ரங்கராஜன் எடுத்துரைத்துள்ளார்.

    தனி ஈழத்திற்குக் குறைவான எதற்கும் இலங்கைத் தமிழர்கள் எதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருணாநிதியின் கருத்து குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவிடமும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றுகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதையே வலியுறுத்தினார். இப்போதும் கூட அவர் தனி ஈழத்திற்குக் குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று கூறவில்லை. மாறாக, தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழர் தேசிய கூட்டமைப்புதான் அதிகாரப்பரவல் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நீண்டகாலம் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட வேண்டும். அவர்கள் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன், இலங்கையில் வாழ வேண்டும். நிலம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழர் பகுதியிலிருந்து ராணுவம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதும் அதற்காக இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதும் இந்திய அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவதும் தான் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதாக அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

    எந்த ஒரு பிரச்சனையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி, அர்த்தபூர்வமான அதிகாரப்பரவல் என்பதையே முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது.

    தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி 1991-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைப் பிரச்னையில் முரணற்ற வகையில் நிலையெடுத்து வந்துள்ளதை சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகளின் தனிஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை ஒப்புக்கொண்டு உரையாற்றினார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    இலங்கை தமிழர்கள் முன் இப்போதுள்ள முக்கிய பிரச்னை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நிவாரணம், மறுவாழ்வு, அதிகாரப்பரவல் என்பதை ஒன்றுபட்ட முறையில் அழுத்தமாக முன்வைப்பதே இலங்கைத்தமிழ் மக்களுக்கு உதவுவதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று கூறியுள்ளார்.



    Posted by விழியே பேசு... at 8:48 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. AnonymousApril 27, 2012 at 4:51 PM

      பெரியவரே தமிழனாக மனிதனாக நின்று பதில் சொல்லுங்கள்.உங்கள் தலை ரஸ்யாவும்,சீனாவும் சிங்களத்தின் பக்கம் நிற்பதால் நிலைமையை தெரிந்து கொள்ளாது பதில் சொல்வது நியாயமா? துப்பாக்கி முன்னால் நிற்கும் மக்கள் ஈழம் பற்றி சொன்னால் வெள்ளை வான் கடத்தி சென்று விடும் என்பது கூட உமக்கு தெரியாத நிலையில் சென்று வந்தவர் நீங்கள்.தன்னை காத்துக் கொள்ள முடியாது இராணுவத்தின் மிரட்டலால் தவித்துக் கொண்டு நிற்கிறார் சம்பந்தன். ராஜபக்சேயின் பரிசுகளில் மயங்கி பொய் சொன்ன சுஷ்மா, வாக்குறுதியையே தற்போது மறுத்து ராஜபக்சே சொல்லி விட்ட நிலையில்,தலையில் கை வைத்து உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது தவிக்கிறார் சுஷ்மா. உண்மையை தமிழனாக மனிதனாக நின்று சொல்லுங்கள்.இராணுவத்தை அகற்றி விட்டு கேட்டுப் பாருங்கள் ஈழத் தமிழர்கள் தங்கள் பதிலை உரத்து சொல்வார்கள்.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ▼  April (425)
      • விரைவில் உருவாகிறது நவீன டைட்டானிக் கப்பல்
      • விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' 1st look போட்டோ
      • நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
      • எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!
      • மே 1 - துப்பாக்கி
      • அலெக்ஸ் பால் மேனனை மீட்பதில் புது சிக்கல்: மே 2-ந்...
      • ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாட...
      • நீதிமன்றத்தால் என்னை பதவியில் இருந்து நீக்க முடியா...
      • இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப்...
      • நித்தியானந்தாவை மதுரையை விட்டு வெளியேற்றுக... மதுர...
      • பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கருணாநி...
      • கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ அமைப்பு
      • லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்த ஈழத்தமிழ் மாணவர் தேர்வு
      • விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பேன்...
      • காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு: கிராமங்களில்...
      • குடியரசுத் தலைவர் வேட்பாளர் நானில்லீங்க...: எஸ்கேப...
      • ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மேலும் நெருக...
      • "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி....
      • பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கருணாநிதி ஆதரவு!
      • நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட கிறிஸ் கெய்ல் !!
      • காதல் என்பது மென்னையானது ;அதை கஷ்டப்படுத்துறாங்க :...
      • நண்பன் 100-வது நாள் விழாவில் உறவுகளை கொச்சைப்படுத்...
      • ‘யோஹன்’ தலைப்புக்கு கவுதம் விளக்கம்
      • சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.ம...
      • சச்சினுக்கு எம்.பி. பதவி: காங்கிரஸ் மீது பால் தாக்...
      • மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள்...
      • உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 20 பே...
      • எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?
      • நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!
      • மே தினத்தில் 'பில்லா-2' பாடல், விஸ்வரூபம் 'டிரைலர்...
      • மதுரை ஆதீனம் என்ற ஆலமரத்திற்குக் கீழே முளைத்த காளா...
      • '3'பட ஆடியோ உரிமை விவகாரம்: தனுஷ், ஐஸ்வர்யா மீது ஐ...
      • நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து ...
      • ஊழல், கருப்புப் பணம் குறித்து பேசுவாரா சச்சின்?......
      • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நித்தியானந்தா!
      • மதுரை இளைய ஆதீனமாக ரஞ்சிதாவின் நித்யானந்தா பதவியேற...
      • பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..?
      • நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் வி...
      • ‘பொறுத்திருந்து பாருங்கள்.,பின்னர் கேளுங்கள்’- ஜனா...
      • போபோர்ஸ் ஊழலில் சோனியா பெயர் இடம் பெறாதது வியப்பளி...
      • கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்ன...
      • கார்த்திக்கு பிரியாணி கொடுத்து சூர்யாவை ஏமாற்றிய வ...
      • விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!
      • முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஜாமீனில் ...
      • அபிஷேக்சிங்வி ஆபாச வீடியோ(இணைப்பு): தடை செய்ய காங்...
      • எம்.பி. பதவியை ஏற்க சச்சின் தெண்டுல்கர் கட்டாயப் ப...
      • பிரபு தேவாவின் புது காதலி !
      • சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
      • சிம் கார்டு வழங்க புதிய நடைமுறை: நிபுணர் குழுவை அம...
      • பில்லா-2 பட பாடல்கள்! (promo videos)
      • மே1ம் தேதி 'விஸ்வரூபம்'!
      • சச்சின் தெண்டுல்கரின் எம்பி பதவி குறித்து கருணாநித...
      • திமுகவில் அழகிரி ஆள், ஸ்டாலின் ஆள் என்று யாரும் இல...
      • பில்லா-2 பட பாடல்கள்!
      • ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்...
      • மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!
      • என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை ...
      • அன்புமணி ராமதாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
      • ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு
      • சச்சின் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை......
      • விஜய் கேட்டும் கொடுக்காத படத்தை விஜய்காந்த் மகனுக்...
      • அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயி...
      • ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்...
      • தெண்டுல்கர் அரசியலில் குதிப்பாரா?
      • சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துர...
      • தனி ஈழம் வேண்டும் என்று எந்தத் தமிழரும் கூறவில்லை:...
      • அஜீத் நாயகிக்கு கல்யாணம்!
      • அன்னா ஹசாரே வை சந்திக்க பால் தாக்கரே மறுப்பு
      • மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒடிசா எம்.எல்.ஏ. விடுதலை
      • சிம்பு போஸ்டர் பின்னணி என்ன?
      • அணையை தகர்க்க வெடிமருந்தை ரெடியாக வைத்திருக்கும் க...
      • தமிழர்களை கொல்ல இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்து...
      • புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் ஆண்ட்ரியா கோ...
      • சசிகலா கணவர் நடராஜன் மீது தொடர்ந்த வழக்கு வாபஸ்
      • "என் தோற்றத்தை கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''...
      • புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட...
      • சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களை எம்.பி. பதவி?
      • அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாரா...
      • கேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்!
      • செக்ஸ் மன்னன் அபிஷேக் சிங்வி தொடர்பான பொதுநல மனு த...
      • பெனாசிர் கொலை வழக்கு:முஷாரப்பை ஒப்படைக்க முடியாது ...
      • 'சில்வர் ஜூப்ளி' காணும் இசைஞானியின் 'ஹவ் டூ நேம் இ...
      • 19-வது ஓவரில் சரவெடி நிகழ்த்தி மும்பை இந்தியன்ஸ் ...
      • பிரச்சினைகளை சந்தித்தேன்....கஷ்டங்களை அனுபவித்தேன்...
      • அடுத்த பட ஹீரோ விக்ரம்தான் - முடிவுக்கு வந்தார் ஷங...
      • போபர்ஸ் ஊழலில் ராஜீவ்காந்தி- அமிதாப்பச்சனுக்கு தொட...
      • சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா ஜோடி!
      • மதிய உணவுத் திட்டம்: 'வரலாற்றையே மாற்ற அதிமுக முயற...
      • 'தண்ணி' யடிக்காத இளைஞர்களுக்கு பரிசு: சைதை துரைசாமி
      • தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்: யுவராஜ்சிங்
      • ராஜபக்சேவுக்காக பொய் சொல்கிறாரா சுஷ்மா??
      • கைவிடப்பட்ட அருள்நிதியின் படம்
      • விஜய்காந்த்திடம் சிக்கிய ரேசன் கடை 'பிராடுகள்': அட...
      • விஜய் ரெடின்னா நானும் ரெடி - உதயநிதி ஸ்டாலின்!
      • தமிழ் ஈழம்: டி.கே.ரங்கராஜனுக்கு கருணாநிதி 'குட்டு'!
      • குடியரசுத்தலைவர் தேர்தல் : கருணாநிதியை சந்திக்க சி...
      • அலெக்ஸ் பால் மேனனை மீட்க களமிறங்குகிறார் விஜயக்கும...
      • திக்விஜய் சிங் ஒரு தீவிரவாதி: மத்திய பிரதேச சபாநாயகர்
      • இதுக்கு தான் இவ்ளோ நாடகமா! தேர்தலில் அன்னா ஹசாரே க...
      • 40 வயதை நெருங்குகிறார் சச்சின்-இன்று 39வது பிறந்த ...
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.