செக்ஸ் தொந்தரவு கொடுத்து மிரட்டியதாக தமிழ் பட தயாரிப்பாளர் மீது இந்திப்பட கவர்ச்சி நடிகை போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
இந்திப் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருபவர் நிஷா யாதவ் (வயது 22). இவர் தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழி படங்களிலும், டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார். மும்பையில் உள்ள குரார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர், சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராம்நாத் ஆனந்தன் என்பவர் மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "கடந்த ஜுன் மாதம் மும்பையில் உள்ள ஒரு பாரில் ராம்நாத் ஆனந்தன் என்னை சந்தித்தார். அவர் தன்னை சென்னையைச் சேர்ந்த தமிழ் பட தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தனது புதுப் படத்தில் கவர்ச்சி வேடம் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக அவர் கூறினார். அதன்பிறகு என்னுடன் நட்பானார்.
அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி என்னை அடிக்கடி அழைத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று ராம்நாத் ஆனந்தன் தொந்தரவு செய்தார். அவருடைய ஆசைக்கு நான் சம்மதிக்க மறுத்து விட்டேன். இதனால் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார்.
சில நாட்களுக்கு முன்னர் ஆனந்தன் எனக்கு போன் செய்து சென்னைக்கு வருமாறும் அங்கு வந்து தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனால் கோபமடைந்த நான் ஆனந்தனுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டேன். ஆனாலும் அவர் எனக்கு மீண்டும், மீண்டும் போன் செய்து மிகவும் ஆபாசமாக பேசி வந்தார். என்னுடன் வசிக்காவிட்டால் உன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். பிரபல தாதா சோட்டாராஜன் என்னுடைய நண்பர் என்று மிரட்டினார்.
எனக்கு தொந்தரவு கொடுத்து வரும் ஆனந்த் ராம்நாத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து குரார் போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.பி.மகாமுல்கர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment