விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, July 26, 2011

    2ஜி: பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை-நீதிமன்றத்தில் ராசா திடீர் 'பல்டி'!

     டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூறிய முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா இன்று திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

    நான் பிரதமரையோ ப.சிதம்பரத்தையோ குற்றம் சாட்டவில்லை, பிரதமரை விசாரிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. நான் கூறாத விஷயங்களை நான் கூறியதாக மீடியாக்கள் தான் தவறான செய்திகள் வெளியிட்டுவிட்டன என்று ராசா இன்று பல்டி வாதம் செய்தார்.

    அதே நேரத்தில் டிபி ரியாலிட்டி நிறுவன பங்குகள் விற்பனைக்கு ஒப்புதல் அளித்தவர் என்ற முறையில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும். அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியளிக்க வேண்டும் என்றும் ராசா கூறியுள்ளார்.

    நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ராசாவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சுஷில்குமார், பிரதமர், ப.சிதம்பரம் ஆகியோருக்குத் தெரிந்தே டிபி ரியாலிட்டி பங்குகள் விற்கப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தைப் பொறுத்தவரை முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைகளையே பின்பற்றியதாகவும் கூறியிருந்தார்.

    ராசா தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றார்.

    இந் நிலையில் இன்று பிரதமர் விஷயத்தில் தனது நிலையை ராசா மாற்றிக் கொண்டுள்ளார்.

    ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது-கபில் சிபல்:
    இதற்கிடையே பிரதமர், ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டி சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

    நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது சில தகவல்களை ராசா தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார்.

    நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் அடிப்படையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என ஒரு தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

    இதுபற்றி கட்காரி, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் சிறந்த வழக்கறிஞருமான அருண் ஜேட்லியிடமோ, அல்லது வேறு வழக்கறிஞரிடமோ ஆலோசனை நடத்தலாம். அதன் பிறகு இதில் அவர் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

    2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தும் நிதின் கட்காரி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?.

    மக்களவைக் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் பாஜகவுக்கு ஏதாவது பிரச்சனை வேண்டும். முக்கியமான பிரசச்னைகள் ஏதுமில்லாததால் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றார் கபில் சிபல்.

    சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றது-மணீஷ் திவாரி:
    இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, அப்பழுக்கற்ற நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பிரதமர் மன்மோகன் சிங். அவரது கண்ணியத்தைக் குறைக்க முயல்வது சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றதாகும்.

    நீதிமன்றத்தில் ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளவர் ஒரு அமைச்சரல்ல. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் பாஜக அதீத முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல.

    அதே நேரத்தில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை ராசா மூலமாக திமுக காட்டுகிறது என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்றார்.




    Posted by விழியே பேசு... at 10:57 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ▼  July (498)
      • ராசாத்தி அம்மாளின் கணக்குப் பிள்ளை கைது
      • நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டு வெளியேற்ற கோரி...
      • 2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாத...
      • கருணாநிதியின் இலங்கை 'ஆதரவு'ப் பேச்சு!
      • 'ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர், சோனியா, ...
      • வீரபாண்டியாருக்கு 'ராயல் சல்யூட்'-போலீசார் அதிரடி ...
      • 'நல்ல நேரம்' பார்த்து ராஜினாமா கடிதத்தை கத்காரிக்க...
      • தமிழ் இனத்தை அழித்த பழியை சுமக்கும் இந்தியா-இலங்கை...
      • கேரள மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மேலும் 7 பேர் கைது
      • ஒரு திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்ட...
      • சென்னை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்பட 12 பேர் ம...
      • கேரளாவுக்கு சாதகமான அணை பாதுகாப்பு மசோதா-ஜெ. கடும்...
      • கணவருடன் செல்ல மறுத்த நடிகை: குழந்தைகளை கண்டதும் ம...
      • ஜெயலலிதாவின் குரலுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்ட...
      • அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!
      • நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!
      • உள்ளாட்சித் தேர்தலில் பாமக- விடுதலைச் சிறுத்தைகள் ...
      • மதுரை இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பெண் புரோக்கர் ...
      • அத்துமீறிப் போகிறது அதிமுக அடக்குமுறை: கருணாநிதி
      • ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...
      • என் ரசிகர்களை தாக்கவேண்டாம், என்னை தாக்குங்கள்...!...
      • மு.க. ஸ்டாலின் கைது
      • திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது
      • 'சதமடித்தார்' சச்சின் டெண்டுல்கர்!
      • தான் ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி: பேஷன் ந...
      • நிலத்தை கேட்டு அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த ம...
      • கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
      • 'பிட்' படம் வாங்கல்லியோ பிட் படம் : வாங்க ஆளில்லை...!
      • விஜய்-கவுதம் இணையும் புதிய படம்
      • காலாவதியாகும் பழைய ரேஷன் கார்டுகள்- புது அட்டை தரப...
      • அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!
      • சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!
      • சினிமாவில் அரசியலை கலக்க கூடாது: அஜீத் பேட்டி
      • அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!
      • இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...
      • தமிழர்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்து எரிந...
      • வேலாயுதம் இசை வெளியீட்டு தேதி!
      • செய்திச் சுருக்கம்: ஜூலை 28, 2011
      • சென்னை மேயரை கண்டதும் தமிழக அமைச்சர் ஓட்டம்
      • தளபதியின் தம்பி திடீர் மரணம் : அஞ்சலி செலுத்த அனு...
      • கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக...
      • கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்
      • லோக்பால் மசோதா: பிரதமர், நீதித்துறைக்கு விலக்கு!
      • ஆக 5-க்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க வேண்டும்- உ...
      • கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட...
      • எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...
      • மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...
      • தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார்-எஸ்.ஏ.சந்திரசேகர்...
      • நான் 'கஜினி' இல்லை- கல்மாடி 'அலேக்' பல்டி!
      • வீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...
      • தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்!
      • வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு
      • அழகிரியின் கூட்டாளி தளபதி மீதும் பாயுமா குண்டர் சட...
      • மாணவச் செல்வங்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிக்க வே...
      • தமிழக அரசு தவறு செய்து விட்டது- அரசு வக்கீலின் 'சே...
      • 2 வருடமாக அறையில் அடைத்து கற்பழிப்பு: முக்கிய புள்...
      • திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க.
      • இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்
      • ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து... 'பசு' நடிகராலும் ...
      • ஆசிரியர் அடித்து மாணவர் மரணம்: சகமாணவர்கள் சாலை மற...
      • சேற்றில் மூழ்கிய தீபிகாபடுகோன் - கே.எஸ்.ரவிகுமார்
      • கொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்!
      • திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்- பாமக பொது...
      • சுக்கல் சுக்கலாக சிதறப் போகிறது அல் கொய்தா!
      • மலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...
      • 2ஜி ஊழலுக்கு அமைச்சரவைதான் பொறுப்பேற்க வேண்டும்: ச...
      • பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த்...
      • விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து...
      • டீன் ஏஜ் பெண்களை கவனமா பார்த்துக்கங்க
      • மங்காத்தா - 19; வேலாயுதம் - 31 ?
      • தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் உருவபொம்மை எர...
      • கட்சி நிர்வாகிகள் பரிசளித்த துணியால் ஷூவை துடைத்த ...
      • ஆபாசம் - வன்முறை படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது:...
      • இலங்கை தமிழர்களுக்காக துப்பாக்கியை தூக்க வேண்டாம்;...
      • முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!
      • சரிந்த செல்வாக்கு, தகர்ந்த கனவுகள்... தவிப்பில் மம...
      • மோட்டார்சைக்கிள் ஓட்டி அசத்திய நடிகை கேத்ரீனா கைப்
      • ஆபாச பாட்டு... அமீர் கானுக்கு நோட்டீஸ்!
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு விஜயலட்சுமி விவகாரம...
      • இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது!: கி.வீரமணி
      • சமச்சீர் கல்வி கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட...
      • இந்தியா வந்தார் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா
      • தலித்களின் வீடுகளை இடித்து, நிலத்தை ஆக்கிரமித்த ரா...
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு
      • ஈவ் டீசிங்: பிளஸ்-2 மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் தலை...
      • போலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்!
      • கருணாநிதியின் முன்னாள் உதவியாளர், ஜாபர்சேட் வீடுகள...
      • முதலில் பிரதமரும், சிதம்பரமும் பதவி விலகட்டும்: எத...
      • கும்பலாக விபச்சாரத்தில் ஈடுபடும் இலங்கை டிவி நடிகை...
      • முதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...
      • 2ஜி: பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை-நீதிமன்றத்தி...
      • கலாநிதி மாறன் இன்று காவல் நிலையத்தில் ஆஜராவாரா?
      • ரவிச்சந்திரன் நடித்த முதல் படத்தில் நான்தான் அவருக...
      • பதவிக்காக மட்டும் வாழக்கூடாது: டி. ராஜேந்தர்
      • குற்றவாளி, தன்னை காத்துக்கொள்ள கூறும் புகார்;ஆ.ராச...
      • நான் இயக்கும் படத்தில் குறளரசன் கதாநாயகனாக நடிக்கி...
      • ராஜபக்சேக்கு எதிராக விஜய் ஏன் கையெழுத்து போட மறுக்...
      • திருச்சி: 50 குழந்தைகள் சிசு கொட்டி கிடக்கும் காட்...
      • வீட்டை ஆக்கிரமித்ததாக புகார்: நடிகர் கைது
      • கலைந்தது விஜயின் வேஷம் : ராஜபக்சேவை தண்டிக்க கோரி ...
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.