விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, July 31, 2011

    'ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர், சோனியா, சிதம்பரத்தின் பதில் என்ன?'

     2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் குற்றச்சாட்டுக்கள் மிகக் கடுமையானவை. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பதிலளித்தாக வேண்டும் என்று அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

    முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக நடந்த செயற்குழுக் கூட்டம் என்பதால் அதிமுகவினர் பெரும் உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தி்ல பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்த விவரம்:
    ஜெயலலிதாவுக்குப் பாராட்டு-வாக்காளர்களுக்கு நன்றி
    - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் அராஜகங்களையும், அத்துமீறல்களையும் தவிடு பொடியாக்கி, அ.தி.மு.க. ஆட்சியை மலரச் செய்து, மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

    - அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மற்றும் புதுச்சேரி வாக்காளப் பெருமக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த கழக தொண்டர்களுக்கும், தோழமை கட்சியினருக்கும், நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

    தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள்
    - சட்டமன்றத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    - தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதல் கட்டமாக, குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி; முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகையை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு; மணப் பெண்ணுக்கு திருமாங்கல்யம் செய்ய உதவித் தொகையுடன் 4 கிராம் இலவச தங்கம்; மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், உதவித் தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிப்பு; பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுமுறை என தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

    ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு பாராட்டு
    - சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றப் பேரவையில் வரலாற்றில் இடம்பெறும் வகையில் மிகத் துணிச்சலாக தீர்மானத்தை நிறைவேற்றி சரித்திர சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதாவை செயற்குழு மனதார பாராட்டுகிறது.

    - இதுமட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது, பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறி இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும்; அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும்; உணர்வுபூர்வமாக தனது கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார்.

    முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தினை கூர்ந்து கேட்ட ஹில்லாரி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அரசு சிந்தித்து வருவதாகத் தெரிவித்தார்.

    இந்தச் சந்திப்பிற்கு பின்னர், இலங்கை போரின் போது ஏற்பட்ட போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்று விளக்கம் அளிக்கத் தவறினால், அந்நாட்டுக்கு வழங்கப்படும் அனைத்து நிதி உதவிகளையும் அமெரிக்க அரசு நிறுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளி விவகாரக் குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை சாதுர்யத்துடனும், விவேகத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் வண்ணம் நடவடிக்கை எடுத்து, வரலாற்றுச் சாதனைப் படைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.

    மேல்சபை ரத்துக்குப் பாராட்டு
    மேல்-சபை தேவையில்லை என்று சட்டசபையில் தீர்மானம், 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த ஆணை, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டி மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ வழி செய்தது, நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்திட தனி நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தது ஆகியவற்றுக்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறது.

    - முதல்வர் கோரிக்கையினை ஏற்று, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிடவும், இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில், கண்காணிப்பு குழுக்களை அமைத்திடவும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

    - மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்திற்கு முன்பே பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.

    - இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, கடலோரப் பாதுகாப்பினை பலப்படுத்துதல், மீனவளத் துறையை நவீனப்படுத்த சிறப்பு தொகுப்பு நிதி, மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிதியுதவி, மோனோ ரெயில் திட்டத்திற்கு நிதி உதவி, மாணவ-மாணவியருக்கான இலவச மடிக் கணினி திட்டத்திற்கு நிதி உதவி, தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு நிதி உதவி, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், திட்டக் குழு பொறுப்புரிமை ஒப்படைப்பின் கீழ் வழக்கமான மத்திய அரசின் நிதி உதவியை அதிகரித்தல், பொது விநியோகத் திட்டத்திற்கு கூடுதல் மானியம், சூரிய எரிசக்தியுடன் கூடிய பசுமை வீட்டு வசதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர், பிரதமரிடம் நேரில் அளித்தார். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    - தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்க
    - காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அண்மையில் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்திவிட்டது. இதன் காரணமாக, அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உயர்த்தப்பட்ட டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    பிரதமர், சோனியா பதில் சொல்ல வேண்டும்
    - இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கு விசாரணையில், பிரதமர் மீதும், மத்திய உள்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல நாட்களாகியும், இதுகுறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக இருப்பவரும் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை. இந்த இமாலய ஊழலில் உள்ள உண்மையை தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து முறையான பதிலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மீதும், உள்துறை அமைச்சர் மீதும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என பிரதமரையும், மத்திய உள் துறை அமைச்சரையும், காங்கிரஸ் கட்சியின் தலைவரையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    கேரளாவின் திட்டத்தை தடுத்து நிறுத்துக
    - முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

    - வேளாண் உற்பத்தியில் உயரிய இலக்கை எய்தும் வகையில், தமிழ்நாட்டிற்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் இதர உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசை செயற்குழு வலியுறுத்துகிறது.

    - இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள சூழ்நிலையில், 1983-ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை தற்போது மீண்டும் துவக்கி இருப்பது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்துள்ளது. தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    - தி.மு.க. ஆட்சியில் நிலவிய வரலாறு காணாத நூல் விலை உயர்வு காரணமாகவும், தொடர் மின் வெட்டு காரணமாகவும் ஜவுளித்தொழில் முடங்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு அனுமதித்தது தான் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    மண்ணெண்ணெய் வழங்குக
    - தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக போதுமான அளவு மண்ணெண்ணெயை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    - மாநில சுயாட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான 2011-ம் ஆண்டு வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவை உடனடியாக கைவிட மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    சாயப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த ஜெ.வுக்கு நன்றி
    - தி.மு.க. அரசால் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த திருப்பூர் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ய நிலையை எட்டும் வகையில் உள்ள இரண்டு தொழில்நுட்பங்களில் எந்த தொழில்நுட்பத்தை கடைபிடிக்கலாம் என்பது குறித்து இரண்டு மாதங்களில் ஆராய்ந்து முடிவு எடுப்பது என்றும்; அதற்குரிய செலவான 200 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தமிழக அரசே வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

    பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையான 18 கோடியே 38 லட்சம் ரூபாயை உடனடியாக தமிழக அரசே வழங்க ஆணையிட்டுள்ளார். திருப்பூர் பகுதியில் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி, பல ஆண்டு கால பிரச்சினையை விரைந்து தீர்த்து வைத்த முதல்வருக்கு இச்செயற்குழு தனது பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.

    - தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மாணவ-மாணவியருக்கு இலவச மடிக் கணினி வழங்கும் திட்டத்தையும், தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தையும் மற்றும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்க ஆணையிட்டுள்ள பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை இச்செயற்குழு பாராட்டுவதுடன், தனது நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




    Posted by விழியே பேசு... at 2:26 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ▼  July (498)
      • ராசாத்தி அம்மாளின் கணக்குப் பிள்ளை கைது
      • நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டு வெளியேற்ற கோரி...
      • 2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாத...
      • கருணாநிதியின் இலங்கை 'ஆதரவு'ப் பேச்சு!
      • 'ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர், சோனியா, ...
      • வீரபாண்டியாருக்கு 'ராயல் சல்யூட்'-போலீசார் அதிரடி ...
      • 'நல்ல நேரம்' பார்த்து ராஜினாமா கடிதத்தை கத்காரிக்க...
      • தமிழ் இனத்தை அழித்த பழியை சுமக்கும் இந்தியா-இலங்கை...
      • கேரள மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மேலும் 7 பேர் கைது
      • ஒரு திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்ட...
      • சென்னை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்பட 12 பேர் ம...
      • கேரளாவுக்கு சாதகமான அணை பாதுகாப்பு மசோதா-ஜெ. கடும்...
      • கணவருடன் செல்ல மறுத்த நடிகை: குழந்தைகளை கண்டதும் ம...
      • ஜெயலலிதாவின் குரலுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்ட...
      • அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!
      • நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!
      • உள்ளாட்சித் தேர்தலில் பாமக- விடுதலைச் சிறுத்தைகள் ...
      • மதுரை இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பெண் புரோக்கர் ...
      • அத்துமீறிப் போகிறது அதிமுக அடக்குமுறை: கருணாநிதி
      • ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...
      • என் ரசிகர்களை தாக்கவேண்டாம், என்னை தாக்குங்கள்...!...
      • மு.க. ஸ்டாலின் கைது
      • திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது
      • 'சதமடித்தார்' சச்சின் டெண்டுல்கர்!
      • தான் ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி: பேஷன் ந...
      • நிலத்தை கேட்டு அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த ம...
      • கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
      • 'பிட்' படம் வாங்கல்லியோ பிட் படம் : வாங்க ஆளில்லை...!
      • விஜய்-கவுதம் இணையும் புதிய படம்
      • காலாவதியாகும் பழைய ரேஷன் கார்டுகள்- புது அட்டை தரப...
      • அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!
      • சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!
      • சினிமாவில் அரசியலை கலக்க கூடாது: அஜீத் பேட்டி
      • அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!
      • இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...
      • தமிழர்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்து எரிந...
      • வேலாயுதம் இசை வெளியீட்டு தேதி!
      • செய்திச் சுருக்கம்: ஜூலை 28, 2011
      • சென்னை மேயரை கண்டதும் தமிழக அமைச்சர் ஓட்டம்
      • தளபதியின் தம்பி திடீர் மரணம் : அஞ்சலி செலுத்த அனு...
      • கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக...
      • கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்
      • லோக்பால் மசோதா: பிரதமர், நீதித்துறைக்கு விலக்கு!
      • ஆக 5-க்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க வேண்டும்- உ...
      • கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட...
      • எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...
      • மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...
      • தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார்-எஸ்.ஏ.சந்திரசேகர்...
      • நான் 'கஜினி' இல்லை- கல்மாடி 'அலேக்' பல்டி!
      • வீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...
      • தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்!
      • வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு
      • அழகிரியின் கூட்டாளி தளபதி மீதும் பாயுமா குண்டர் சட...
      • மாணவச் செல்வங்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிக்க வே...
      • தமிழக அரசு தவறு செய்து விட்டது- அரசு வக்கீலின் 'சே...
      • 2 வருடமாக அறையில் அடைத்து கற்பழிப்பு: முக்கிய புள்...
      • திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க.
      • இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்
      • ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து... 'பசு' நடிகராலும் ...
      • ஆசிரியர் அடித்து மாணவர் மரணம்: சகமாணவர்கள் சாலை மற...
      • சேற்றில் மூழ்கிய தீபிகாபடுகோன் - கே.எஸ்.ரவிகுமார்
      • கொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்!
      • திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்- பாமக பொது...
      • சுக்கல் சுக்கலாக சிதறப் போகிறது அல் கொய்தா!
      • மலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...
      • 2ஜி ஊழலுக்கு அமைச்சரவைதான் பொறுப்பேற்க வேண்டும்: ச...
      • பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த்...
      • விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து...
      • டீன் ஏஜ் பெண்களை கவனமா பார்த்துக்கங்க
      • மங்காத்தா - 19; வேலாயுதம் - 31 ?
      • தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் உருவபொம்மை எர...
      • கட்சி நிர்வாகிகள் பரிசளித்த துணியால் ஷூவை துடைத்த ...
      • ஆபாசம் - வன்முறை படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது:...
      • இலங்கை தமிழர்களுக்காக துப்பாக்கியை தூக்க வேண்டாம்;...
      • முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!
      • சரிந்த செல்வாக்கு, தகர்ந்த கனவுகள்... தவிப்பில் மம...
      • மோட்டார்சைக்கிள் ஓட்டி அசத்திய நடிகை கேத்ரீனா கைப்
      • ஆபாச பாட்டு... அமீர் கானுக்கு நோட்டீஸ்!
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு விஜயலட்சுமி விவகாரம...
      • இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது!: கி.வீரமணி
      • சமச்சீர் கல்வி கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட...
      • இந்தியா வந்தார் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா
      • தலித்களின் வீடுகளை இடித்து, நிலத்தை ஆக்கிரமித்த ரா...
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு
      • ஈவ் டீசிங்: பிளஸ்-2 மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் தலை...
      • போலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்!
      • கருணாநிதியின் முன்னாள் உதவியாளர், ஜாபர்சேட் வீடுகள...
      • முதலில் பிரதமரும், சிதம்பரமும் பதவி விலகட்டும்: எத...
      • கும்பலாக விபச்சாரத்தில் ஈடுபடும் இலங்கை டிவி நடிகை...
      • முதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...
      • 2ஜி: பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை-நீதிமன்றத்தி...
      • கலாநிதி மாறன் இன்று காவல் நிலையத்தில் ஆஜராவாரா?
      • ரவிச்சந்திரன் நடித்த முதல் படத்தில் நான்தான் அவருக...
      • பதவிக்காக மட்டும் வாழக்கூடாது: டி. ராஜேந்தர்
      • குற்றவாளி, தன்னை காத்துக்கொள்ள கூறும் புகார்;ஆ.ராச...
      • நான் இயக்கும் படத்தில் குறளரசன் கதாநாயகனாக நடிக்கி...
      • ராஜபக்சேக்கு எதிராக விஜய் ஏன் கையெழுத்து போட மறுக்...
      • திருச்சி: 50 குழந்தைகள் சிசு கொட்டி கிடக்கும் காட்...
      • வீட்டை ஆக்கிரமித்ததாக புகார்: நடிகர் கைது
      • கலைந்தது விஜயின் வேஷம் : ராஜபக்சேவை தண்டிக்க கோரி ...
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.