விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, August 10, 2011

    சமச்சீர் கல்வித்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!

    கடந்த 60 நாட்களாக விடை தெரியாமல் நீண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் இனிமேல்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரச்சினையே ஆரம்பமாகப் போகிறது.

    அரசு - உனக்கு இலவச லேப்டாப் வேணுமா?
    மாணவன் - வேண்டாம்
    அரசு - இலவச சைக்கிள் வேண்டுமா?
    மாணவன் - வேண்டாம்
    அரசு - வேற என்ன வேணும்?
    மாணவன் - படிக்க ஏதாவது ஒரு புக் கொடுங்க போதும்

    இதுதான் கடந்த 60 நாட்களில் தமிழகத்தை அதிகமாக வலம் வந்த எஸ்.எம்.எஸ்-ஸாக இருக்க முடியும். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், விரக்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

    மிக மிக எளிதாக அணுகப்பட்டிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிகப் பெரிய சட்டச் சிக்கலாக்கி கடைசியில் தனக்குப் பாதகமாக அதை முடித்துள்ளது தமிழக அரசு. மக்களின் மிகப் பெரிய வரவேற்புடன், அமோக ஆதரவுடன், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுக்கு இது நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவுதான், சறுக்கல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு திணிக்கப்படும் படிப்புச் சுமை, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பாடம் என்று பல்வேறு குறைபாடுகள் இருந்ததால் அனைத்தையும் களையும் வகையில், அனைத்துத் தரப்பு மாணவர்களும், ஒரே மாதிரியான பாடத்தை, தரமான பாடத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியின்போது சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒரு வல்லுனர் குழுவையும் அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின்படி சமச்சீர் கல்வித் திட்ட சட்டம் கொண்டு வரப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி சட்டசபையில் இயற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 1 மற்றும் 6 ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் முதல் கட்டமாக 2010ம் ஆண்டு கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டு முதல் மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் 1 முதல் 10ம் வகுப்பு வரை அமலாகவிருந்த நிலையில் திடீரென ஆட்சி மாற்றம் ஏற்படவே திட்டமும் அனாதையானது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்தத் திட்டம் தரமற்றத்தாக உள்ளது, எனவே இதுகுறித்து ஆராய்ந்த பின்னர் அடுத்த ஆண்டு இதை அமல்படுத்துவோம். இந்த ஆண்டு பழைய பாட முறையில்தான் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    திமுகவுக்கு சாதகமான விஷயங்கள் புத்தகங்களில் இருப்பதாகவும், உதயசூரியன் படம் இடம் பெற்றுள்ளது, கருணாநிதியைப் புகழும் வககையில் வரிகள் உள்ளன, கனிமொழியின் கவிதை இடம்பெற்றுள்ளது என்று இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன.

    இதை எதிர்த்து 2011, மே 24ம் தேதி சமச்சீர் கல்வித் திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் திட்டமிடபடி அனைத்து வகுப்புகளுக்கும் இதை அமல்படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில்அப்பீல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். பிறவகுப்புகள் குறித்து கமிட்டி அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி அமைக்கப்பட்ட கமிட்டி தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்தது. அதில் தரமற்ற பாடத் திட்டமாக இருப்பதால் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருந்தது.

    இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2011, ஜூலை 18ம் தேதி பிறப்பித்த உத்தரவில், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்திவைக்க தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்றும், சமச்சீர் கல்வி புத்தகங்களை 22ம் தேதிக்குள் வழங்கவும் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பத்து நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.

    சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பம் தொடர்பாக ஜூன் 1ம் தேதி திறந்திருக்கப்படவேண்டிய பள்ளிகள் அனைத்தும் அரசின் உத்தரவை ஏற்று ஜூன் 15ம் தேதிதான் திறக்கப்பட்டன. சமச்சீர் கல்வி தொடர்பான குழப்பம் அப்போதைக்கு முடிவுக்கு வராத நிலையில், புத்தகம் இல்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குள் கால் எடுத்து வைத்தனர். நேற்று வரை கிட்டத்தட்ட 60 நாட்களாக முறையான புத்தகங்கள் இல்லாமல் பொதுவாக படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான தமிழக அரசின் நிலையால் ஏகப்பட்ட குழப்பங்கள் இப்போது அணிவகுத்து நிற்கின்றன.

    1. இதுவரை படித்தெல்லாம் இனி கணக்கில் வரப் போவதில்லை. இனிமேல் அரசு தரப்போகும் சமச்சீர் கல்விப் புத்தகத்தைத்தான் படிக்க வேண்டும். அதாவது இனிமேல்தான் முதலிலிருந்து படிக்கப் போகிறார்கள் பிள்ளைகள். இதனால் கடந்த 60 நாள் படிப்பும் அவர்களுக்கு கிட்டத்தட்ட வீண்தான்.

    2. 60 நாள் இழப்பால் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு ஆகிய தேர்வுகளை உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் எதுவுமே படிக்காத நிலையில் எதை வைத்து காலாண்டுத் தேர்வை நடத்துவது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளன பள்ளிகள்.

    3. கடந்த 60 நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 9 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தவுடனேயே, ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் 10, 12 வகுப்புகளுக்குரிய பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த அடிப்படையில் இந்த முறையும் அதுபோலவே சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் பல பள்ளிகளில் பாடங்களை நடத்தி வந்தனர். ஆனால் பழைய பாடத் திட்டமே தொடரும் என்று அரசு திடீரென அறிவித்ததால், அவர்கள் பழைய பாடங்களை நடத்த ஆரம்பித்தார்கள். இப்போது மீண்டும் சமச்சீர் கல்விக்கு மாற வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாறி மாறிப் பாடங்களைப் படித்து தேவையில்லாத டென்ஷனையும், குழப்பத்தையும் சந்தித்ததே மிச்சமாகியுள்ளது.

    4. புதிய பாடத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால், போர்ஷன்களை விரைவாக எப்படி முடிப்பது என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், பள்ளிகளும் உள்ளன. மேலும், 2, 3, 4, 5 ஆகிய வகுப்புக் குழந்தைகளுக்கு அவசரம் அவசரமாக பாடத்தை நடத்த முடியாத நிலையும் இருப்பதால் இவர்களுக்கு பாடத்தை நடத்தும் முறை குறித்தும் ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

    இபப்படிப் பல குழப்பங்கள். மொத்தத்தில் தமிழக அரசு தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ளாத காரணத்தால், தேவையில்லாத சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்களை கடத்தியதால் மாணவ மாணவியர்களுக்கு மனக் குழப்பம், பதட்டம், மன அழுத்தம், விரக்தி ஆகியவை ஏற்பட்டதே மிச்சமாகியுள்ளது.

    இனி பாடத்தை வேகம் வேகமாக நடத்த வேண்டிய நிலைக்கு ஆசிரியர்களும், அதை அவசரம் அவசரமாக படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாணாக்கர்களும் தள்ளப்படுவர். சனிக்கிழமைகளில் இனி முழு நேரம் வகுப்புகள் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து அவர்களது மனச்சுமை மேலும் கூடுதலாகும். பள்ளிகளின் விடுமுறை நாட்கள் குறையும், படி படி என்று படித்துத்தள்ள வேண்டிய நிலைக்கு அனைவரும் தள்ளப்படுவர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருமே பாதிக்கப்படப் போகிறார்கள்.

    வேஸ்ட் ஆகிப் போனது 60 நாள்தானே என்று சாதாரணமாக நினைக்க முடியாது. காரணம், 2, 3, 4, 5 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அதி வேகமாக பாடத்தை நடத்தினால் நிச்சயம் அவர்களால் கிரகிக்க முடியாது. மேலும் சமச்சீர் கல்வித் திட்டம் புதிய பாடத் திட்டம் என்பதால் ஆசிரியர்களும் முதலில் தங்களைத் தெளிவபுடுத்திக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.

    காலாண்டுத்தேர்வை முடிக்க வேண்டிய நேரத்தில் முதலிலிருந்து படிக்கப் போகும் தமிழக மாணவ, மாணவியர்கள் நிம்மதியாகப் படிக்கும் மன நிலையில் இல்லாத நிலையை அரசு ஏற்படுத்தி விட்டது. சர்ச்சைக்குரிய பகுதிகளை புத்தகத்திலிருந்து கிழித்தோ அல்லது அவற்றை பாடத் திட்டத்திலிருந்து நீக்கியோ அல்லது இதுபோல ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து அதை சரி செய்தோ புத்தகங்களைக் கொடுத்து பிள்ளைகளை படிக்க வைத்திருக்கலாம். அடுத்த ஆண்டு கூட திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் உடும்புப் பிடிவாதமாக அரசு நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி மாணவ மாணவிகளும் அவர்களைப் பெற்ற பெற்றோர்களும், பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும்தான்.

    எந்த மக்கள் அதிமுகவை மலை போல நம்பி வாக்களித்து ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வந்தார்களோ, அந்த மக்களை அதிமுக அரசு எடுத்த எடுப்பிலேயே புலம்ப வைத்து விட்டது நிச்சயம் வேதனையான விஷயம்தான்.



    நன்றி -தட்ஸ்தமிழ் 







    Posted by விழியே பேசு... at 8:24 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ▼  August (478)
      • நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்ச...
      • மங்காத்தா தியேட்டர்களில் சோதனை?
      • விழுப்புரத்தில் மாஜி அமைச்சர் பொன்முடி கைது- ஆயிரக...
      • கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்த வழக்கு- 5 நிறு...
      • ரூ. 6 லட்சம் கொடுத்தால் ஆடலாம், குடிக்கலாம்-செக்ஸு...
      • தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் ...
      • விஸ்வரூபத்தில் அனுஷ்கா இல்லை தடைவிதித்த நாயகன் யார்?
      • மணிரத்னம்-அஜீத் சந்திப்பு புதுப்பட பேச்சு வார்த்தையா?
      • விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்க...
      • பாம்பும் கீரியுமாக இருந்த எடியூரப்பா-குமாரசாமி இடை...
      • ஐகோர்ட்டில் பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு விடை...
      • மங்காத்தா ரிலீஸ்.. அதிரடி வெற்றி!
      • தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்தூக்குத்தண்டனைக்கு எதிர்...
      • ஜெயராமுடன் கமல் இணையும் அன்புள்ள கமல்
      • கிரேசி- கமல் கூட்டணியில் புதிய படம்
      • உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கண...
      • இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதே...
      • வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ பு...
      • கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்
      • குடிபோதையில் கார் ஓட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின்...
      • பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து...
      • விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்...
      • மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் த...
      • ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்ததற்கான ஆதாரம் இல்லை...
      • செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ...
      • ஸ்ருதியின் எக்ஸ்ட்ரா செலவு ஆடிப்போகும் தயாரிப்பாளர...
      • ஒன்று வாங்கினால் ஒன்று வசந்தபாலன் வளைத்த அஞ்சலி
      • கார்த்திக் மகனோடு கமலின் கமலின் 2-வது வாரிசு அக்ஷர...
      • ராஜிவ் உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை குறைக்கலாம்...
      • ஆசிரியர் செக்ஸ் சில்மிஷம்: 5-ம் வகுப்பு மாணவி தீக்...
      • 9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியதாக 7ல் ஒரு அ...
      • இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன்...
      • பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட தடை விதித்த...
      • தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்...
      • பெண் மெய்க்காப்பாளர்களை பலாத்காரம் செய்த கடாபி, மக...
      • 'விஸ்வரூப'த்தில் ஏமி ஜாக்சன் !
      • தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
      • இன்று விசாரணை- தூக்கிலிட தடை விதிக்கப்படுமா?
      • வேலாயுதம் பாடல்கள் டவுன்லோட்
      • மணி இயக்கத்தில் அஜீத் ?!
      • லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ராவின் கண...
      • ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு ...
      • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: வேளாங்கண்ணி ஆர...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆப...
      • திருமண நிச்சயதார்த்தம்... வருவாரா ரஜினி?
      • ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
      • ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் மூவரையும் காப்பாற்...
      • சோனியாவுக்கு முருகன் மகள் கண்ணீர்க் கடிதம்
      • உடல், உயிர் மட்டுமே நினைவுக்கு வந்தது: பணம் புகழ் ...
      • திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான்...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்...
      • மதுரையில் விஜய்: வரவேற்க அனுமதி மறுப்பு: இவ்வளவு ப...
      • விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்...
      • விஜயின் வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா போட்டோ, வீ...
      • நான் எடுத்த முடிவு முடிவுதான்: மதுரையில் நடிகர் வி...
      • எந்த தெய்வமும் கண்ணை குத்தாது: விஜயகாந்த்
      • நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயி...
      • நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வை...
      • தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! ப...
      • கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கி...
      • என் தந்தையைக் காக்க தமிழகம் வந்து போராட விரும்புகி...
      • இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!
      • அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்திருப்பது தோல்விதான்?
      • ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்...
      • மாறிவிட்டது தமிழ் புத்தாண்டு : மாறுமா தமிழ் ஆண்டுகள்?
      • அடுக்கடுக்கான வழக்குகள்: தனிமையில் தி.மு.க.
      • முதலில் யாருக்கு தூக்கு?
      • அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றி :...
      • உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்காதீங்க! : ஹசா...
      • மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன் : நடிகை வனிதா
      • இலவச லேப்டாப்புகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்...
      • சிறை to கோர்ட் செல்லும் வழியில் பொட்டுசுரேஷ் வைத்...
      • வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!
      • ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வ...
      • ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை
      • பேரறிவாளன்- சாந்தன்- முருகனின் கருணை மனு மீது 11 ஆ...
      • ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
      • சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்...
      • இந்தியா முழுவதும் தூக்கு மேடை வரை சென்று 72 பேர் உ...
      • வெளிஉலகை பார்க்க ஆசையாக உள்ளது: முதல்-அமைச்சரின் க...
      • நாளை மதுரையில் விழா: ஏழை பெண்களுக்கு விஜய் பசு தானம்
      • ஹோமோ செக்ஸுக்காக சிறுவன் கொலை: கல்லூரி மாணவர் கைது
      • உடைகிறது 'டீம் அன்னா'... சந்தோஷ் ஹெக்டே, அக்னிவேஷ்...
      • 100 நாட்களில் கொலைகள் 86, கொள்ளைகள் 110, வழிப்பறி ...
      • புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimeste...
      • தூக்குக்கு நாள் குறிப்பு- முருகனை சந்திக்க அனுமதிக...
      • எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை ச...
      • அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு ...
      • மீண்டும் பழைய கணவருடன்... வனிதா விஜயகுமாரின் மாற்றம்
      • சென்னை மேயராகிறாரா நடிகை குஷ்பு?
      • நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற...
      • அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை
      • கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!
      • மங்காத்தா பிரச்சினை: 'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு ...
      • அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு...: நடிகர் விவேக்
      • "வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்': அழகிரி விரக்தி
      • டி.ஆர்.பாலு ஆவேச பேச்சு: அ.தி.மு.க. ஆதரவு
      • விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.