இந்தியாவின் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் டாக்டரை மனிதாபிமான அடிப்படையில் 'பாகிஸ்தான் அரசு' விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உளறிக் கொட்டியதால் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பெரும் அமளியில் இறங்கினர். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு கிருஷ்ணாவின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க நேரிட்டது.
எஸ்.எம்.கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே எதையாவது ஒரு குழப்பம் செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். டெல்லியில் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தபடி தினசரி அலுவலகம் வந்து முதலில் சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர் ஐ.நா. சபையில் பேசும்போது மெக்ஸிகோ நாட்டு அமைச்சரின் உரையைப் படித்து சொதப்பினார். சமீபத்தில் விம்பிள்டனுக்குப் போய் டென்னிஸ் பார்த்து விட்டு வந்து சர்ச்சையில் .சிக்கினார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். ராஜ்யசபாவில் கேள்விநேரத்தின்போது ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த திவாரி பேசுகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் முகம்மது கலீல் சிஷ்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாடக் கூடிய அளவில் சிறையில் வாடி வருகிறார். அவரை விடுவிப்பது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
உறுப்பினர் குறிப்பிட்ட சிஷ்டி, இந்தியாவி்ன் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூம் சமீ்பத்தில் தெரிவித்திருந்தார். அது குறித்துத்தான் இன்று உறுப்பினர் திவாரி கேட்டார்.
அதற்குப் பதிலளிக்க எழுந்த கிருஷ்ணா, குறிப்பிட்ட அந்த நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசுதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட சலனமில்லாமல் பேசினார்.
இதைக் கேட்டதும் உறுப்பினர்கள் பெரும் குழப்பமு்ம், அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால அதைக் கூட கவனிக்காத, சுதாரிக்காத கிருஷ்ணா தொடர்ந்து பேசுகையில், 80 வயதாகி விட்ட சிஷ்டி வீல்சேரில்தான் நடமாடி வருகிறார். அவரை விடுவிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதுகுறித்து தூதரக அளவில் பாகிஸ்தானுடன் பேசுவோம் என்று பேசிக் கொண்டே போனார்.
இந்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, எந்த கைதி குறித்து கிருஷ்ணா பேசிக் கொண்டிருக்கிறார் என்று வினவினர். சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத் எழுந்து, உறுப்பினரின் கேள்வியை அமைச்சர் தவறாகப் புரிந்து கொண்டு விளக்கம் அளிக்கிறார் என்றுசுட்டிக் காட்டினார். பல்வேறு உறுப்பினர்களும் எழுந்து கிருஷ்ணா உளறிக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினர்.
இதையடுத்து எழுந்த பிரதமர் மன்மோகன் சிங், டாக்டர் சிஷ்டி, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததும் உள்துறை அமைச்சரிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றேன். அவர் ராஜஸ்தான் அரசுடன் பேசி வருகிறார். மேல் விவரங்களுக்காக காத்திருக்கிறேன் என்று விளக்கினார்.
அதன் பிறகுதான் தான் என்ன பேசினோம் என்பதை உணர்ந்தார் கிருஷ்ணா. இருப்பினும் தான் தவறாகப் பேசியது குறித்து உறுப்பினர்களிடம் அவர் விளக்கவில்லை. மாறாக வழக்கமான புன்னகையுடன் அமர்ந்து கொண்டார்.
எஸ்.எம்.கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே எதையாவது ஒரு குழப்பம் செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். டெல்லியில் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தபடி தினசரி அலுவலகம் வந்து முதலில் சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர் ஐ.நா. சபையில் பேசும்போது மெக்ஸிகோ நாட்டு அமைச்சரின் உரையைப் படித்து சொதப்பினார். சமீபத்தில் விம்பிள்டனுக்குப் போய் டென்னிஸ் பார்த்து விட்டு வந்து சர்ச்சையில் .சிக்கினார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். ராஜ்யசபாவில் கேள்விநேரத்தின்போது ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த திவாரி பேசுகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் முகம்மது கலீல் சிஷ்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாடக் கூடிய அளவில் சிறையில் வாடி வருகிறார். அவரை விடுவிப்பது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
உறுப்பினர் குறிப்பிட்ட சிஷ்டி, இந்தியாவி்ன் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூம் சமீ்பத்தில் தெரிவித்திருந்தார். அது குறித்துத்தான் இன்று உறுப்பினர் திவாரி கேட்டார்.
அதற்குப் பதிலளிக்க எழுந்த கிருஷ்ணா, குறிப்பிட்ட அந்த நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசுதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட சலனமில்லாமல் பேசினார்.
இதைக் கேட்டதும் உறுப்பினர்கள் பெரும் குழப்பமு்ம், அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால அதைக் கூட கவனிக்காத, சுதாரிக்காத கிருஷ்ணா தொடர்ந்து பேசுகையில், 80 வயதாகி விட்ட சிஷ்டி வீல்சேரில்தான் நடமாடி வருகிறார். அவரை விடுவிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதுகுறித்து தூதரக அளவில் பாகிஸ்தானுடன் பேசுவோம் என்று பேசிக் கொண்டே போனார்.
இந்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, எந்த கைதி குறித்து கிருஷ்ணா பேசிக் கொண்டிருக்கிறார் என்று வினவினர். சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத் எழுந்து, உறுப்பினரின் கேள்வியை அமைச்சர் தவறாகப் புரிந்து கொண்டு விளக்கம் அளிக்கிறார் என்றுசுட்டிக் காட்டினார். பல்வேறு உறுப்பினர்களும் எழுந்து கிருஷ்ணா உளறிக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினர்.
இதையடுத்து எழுந்த பிரதமர் மன்மோகன் சிங், டாக்டர் சிஷ்டி, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததும் உள்துறை அமைச்சரிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றேன். அவர் ராஜஸ்தான் அரசுடன் பேசி வருகிறார். மேல் விவரங்களுக்காக காத்திருக்கிறேன் என்று விளக்கினார்.
அதன் பிறகுதான் தான் என்ன பேசினோம் என்பதை உணர்ந்தார் கிருஷ்ணா. இருப்பினும் தான் தவறாகப் பேசியது குறித்து உறுப்பினர்களிடம் அவர் விளக்கவில்லை. மாறாக வழக்கமான புன்னகையுடன் அமர்ந்து கொண்டார்.

No comments:
Post a Comment