டெல்லி மாநகராட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் 120 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் 49 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
டெல்லி தெற்கு, டெல்லி வடக்கு, டெல்லி கிழக்கு ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. 3 மாநகராட்சிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றியது.
தன்னார்வ அமைப்பு ஒன்று 272 கவுன்சிலர்களில் 236 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 120 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் இதில் 68 பேர் பா.ஜ.க.வினர்,, 30 பேர் காங்கிரசார் என்று கூறப்பட்டுள்ளது. சுயேச்சை கவுன்சிலர்களில் 22 பேரும் கோடீஸ்வரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
பாரதிய ஜனதாவின் கவுர் சிர்சாவுக்கு ரூ.112 கோடிக்கும், சுயேச்சை கவுன்சிலர் நரேஷ் பல்யானுக்கு ரூ.57 கோடியே 23 லட்சத்துக்கும் சொத்து உள்ளது.
மேலும் 29 பாஜக கவுன்சிலர்கள், 14 காங்கிரஸ் கவுன்சிலர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் கணிசமாக பெண்களும் அடங்குவது என்பது வியப்புக்குரியது.
No comments:
Post a Comment