இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளானாலும் பிரபாகரன் நாமம் வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிட முடியாது, என இலங்கையின் நவசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.
தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றுக் கொண்டிருந்தார் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளிவாய்க்கால் வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது. வரலாற்றில் அவருக்கு நிகரான ஒருவரைப் பார்ப்பது கடினம்.
பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு எந்த அபாயமுனையிலும் நின்று பாடுபட்டார்.
அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது.
அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட.
தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் மிக அதிக பற்றைக் கொண்டிருந்தார்.
மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப் பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும்.
பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மகிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம் பார்க்கலாம்.
இவ்வாறு விக்கிரமபாகு கருணாரத்ன அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்து இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் உண்மை.அவரது செயல்பாட்டில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தன்னலமில்லாத,தலைவர்,போராளி.இந்தகாலத்தில் ஒரே ஒரு ரயில் (அதுவும் ஓடாத ரயில்) மறியல் பன்னீட்டு அதைக் காட்டியே தன் குடும்பம் முழுவதுக்கும் நூறு தலைமுறைக்கு பல ஆயிரம் கோடி சேர்த்திருக்கின்ற கருணாநிதி, (நம்ம மாமா )நேரு, போன்றவர்களுக்கு மத்தியில்-தப்பிக்க வழியிருந்தும் தப்பி ஓடாமல் தமிழினத்திற்கு,தமிழீழத்திற்காக தன் மொத்தக் குடும்பத்தையும் பலி கொடுத்த மாவீரன்,தியாகத்தின் மொத்த உருவம்.பல்லாயிரம் ஆண்டுகள் அவரது பெயர்,புகழ் நிலைத்திருக்கும்......
ReplyDeleteஆனாலும் ஒரு சிறிய திருத்தம்.3000 ஆண்டுகள் என்பது தவறு. தமிழனின் வரலாற்றில் பதியப்பட்ட தேசியத் தலைவர் பெயர் தமிழன் வாழும் வரை அழிக்கப்பட மாட்டாது. மனிதன் மனத்தால் இயக்கப்படுபவன்.அதனால் இந்த உலகில் தவறு செய்யாதவன் ஒருவர் கூட இல்லை.பிறக்கவும் இல்லை,பிறக்கப் போவதும் இல்லை.தவறு செய்பவன் தான் மனிதன்.அந்த தவறை திருத்திக் கொள்பவன் மனிதன்.
ReplyDelete