அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் 7 பேரை காணவில்லை என்று பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. இதில் 5 பேர் இளம் பெண்கள் ஆவர். பள்ளிக்கு சென்ற மாணவிகளும், வேலைக்கு சென்ற பெண்களும் திடீரென மாயமானதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் 17-வது தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகள் லட்சுமி (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த மாதம் 20-ந்தேதி வேலைக்கு சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர் ஏ.கே.ஏ.நகர் அண்ணா தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் சரண்யா (17). 30-ந்தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதேபோல ஞானமூர்த்தி நகர் அண்ணாமலை தெருவில் வசிக்கும் சேகரின் மகள் பிரியாவை (19) கடந்த மாதம் 19-ந்தேதி முதல் காணவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்த பிரியா தாயுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு மருந்து கடையில் மருந்து வாங்கியபோது திடீரென அவர் மாயமாகி விட்டதாக பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
அம்பத்தூர் சிவானந்தா நகர் முதல் தெருவை சேர்ந்த காசி என்பவரின் மகள் பிரியதர்ஷினி (16). இவர் கடந்த மாதம் 16-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் தனலட்சுமி (21). கடந்த மாதம் 14-ந்தேதி கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 இளம்பெண்கள் அம்பத்தூர் பகுதியில் மாயமாகி உள்ளனர். மேலும் சிவானந்தாநகர் முதல் தெருவை சேர்ந்த சித்து (64) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவரையும் காணவில்லை. புதூர் பானுநகர் கட்டையா கவுண்டர் (65) என்பவரையும் திடீரென காணவில்லை. காணாமல் போனவர்கள் குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் 17-வது தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகள் லட்சுமி (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த மாதம் 20-ந்தேதி வேலைக்கு சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர் ஏ.கே.ஏ.நகர் அண்ணா தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் சரண்யா (17). 30-ந்தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதேபோல ஞானமூர்த்தி நகர் அண்ணாமலை தெருவில் வசிக்கும் சேகரின் மகள் பிரியாவை (19) கடந்த மாதம் 19-ந்தேதி முதல் காணவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்த பிரியா தாயுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு மருந்து கடையில் மருந்து வாங்கியபோது திடீரென அவர் மாயமாகி விட்டதாக பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
அம்பத்தூர் சிவானந்தா நகர் முதல் தெருவை சேர்ந்த காசி என்பவரின் மகள் பிரியதர்ஷினி (16). இவர் கடந்த மாதம் 16-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் தனலட்சுமி (21). கடந்த மாதம் 14-ந்தேதி கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 இளம்பெண்கள் அம்பத்தூர் பகுதியில் மாயமாகி உள்ளனர். மேலும் சிவானந்தாநகர் முதல் தெருவை சேர்ந்த சித்து (64) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவரையும் காணவில்லை. புதூர் பானுநகர் கட்டையா கவுண்டர் (65) என்பவரையும் திடீரென காணவில்லை. காணாமல் போனவர்கள் குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment