இந்தியாவில் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் கிரிக்கெட் போட்டி ஐ.பி.எல். ஆகும். ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை பொறுத்த வரை எல்லா வகையிலும் வருமானம் கொழிக்கிறது. ஐ.பி.எல். போட்டியை வைத்து “பெட்டிங்” நடத்தப்பட்டு வருகிறது.
எந்த அணி வெற்றி பெறுகிறது. யார் எவ்வளவு ரன் எடுப்பார், அதிக விக்கெட் யாருக்கு, யார் எத்தனை பவுண்டரி, சிக்சர் அடிப்பார், அணியில் யாருக்கு வாய்ப்பு என்று பல வகையில் பெட்டிங் நடத்தப்படுகிறது.
முக்கிய நகரங்களில் ரசிகர்கள் “பெட்டிங்” கட்டுகிறார்கள். ஒவ்வொரு போட்டிக்கும் 5 தினங்களுக்கு முன்பே எந்த அணிக்கு வெற்றி என்பதை “பெட்டிங்” செய்ய வேண்டும். 5-வது ஐ.பி.எல். போட்டித் தொடரில் ரூ.75 ஆயிரம் கோடிக்கு “பெட்டிங்” நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சூதாட்ட தரகர் ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியை சேர்ந்த காம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக உள்ளார். ஆனால் டெல்லியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் காம்பீர், காலிசின் ஜோடி ஆட்டத்துக்கு அதிகமாக பெட்டிங் செய்கிறார்கள் என்று அந்த சூதாட்ட தரகர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment