இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரதீபா பாட்டீலின் பதவி காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அதே ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது. தற்போது குடியரசு தலைவருக்கான வேட்பாளர்களின் பட்டியலில் துணை குடியரசுத்தலைவர் ஹமீத் அன்சாரி, லோக்சபா தலைவர் மீராகுமார், கரன்சிங் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர்களின் பட்டியலில் சாம் பிட்ரோடாவின் பெயரும் தற்போது தீவிர பரிசீலனையில் இருப்பதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம் பிட்ரோடா தற்போது பிரதமரின் தகவல் தொடர்பு கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஜூலை 24-ம் தேதி குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டீல் பதவியேற்றிருந்தார். இவரது பதவிக்காலம் வரும் ஜூலையோடு முடிவடைய இருப்பதால், இந்தியாவின் 16-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்தியன் இன்னும் இளிச்சவாயனா இருந்தா இத்தாலி சோனியாவோட சொந்த அத்த மவனே ஜனாதிபதியா வருவான்... காங்கிரஸ்காரன் மட்டுமில்ல இந்தியன் (இந்தியாவில வாழுறவன் அத்தனை பேரும் இந்தியன் இல்ல)அத்தனைபேரும் உப்பு போட்டு சோறு திங்கணும்
ReplyDelete