விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, April 24, 2012

    சிபி சக்கரவர்த்தி புறாவை ரசம் வைத்து சாப்பிட்டிருந்தால்... பண்ருட்டி ராமச்சந்திரன்


    போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாற்காலியில் உட்கார வைத்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

    சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். இதன் மீது நடந்த விவாதம் விவரம்,

    பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டர் கடத்தல், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ. கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. வறுமை, ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால்தான் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தோன்றுகிறார்கள். தமிழகத்தில் வறுமை, துன்பம் ஒருபுறமும், வசதி வாய்ப்பு அதிகரிப்பது என்கிற நிலை மற்றொரு புறம் ஏற்பட்டு ஒரு ஏற்றத்தாழ்வான நிலை இருப்பதால்தான் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

    முதல்வர் ஜெயலலிதா: தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், வறுமை ஏற்றத்தாழ்வு காரணமாக உருவாகிறார்கள் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறினார். அத்தகைய தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் தமிழ்நாட்டில் இல்லை. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.

    பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் துறையினர் சாதாரண மக்களுக்காக உழைப்பவர்கள். அவர்களுடைய பார்வையில் ஒரு புதிய சமூக கண்ணோட்டம் வேண்டும். சாதாரண மக்கள் காவல் நிலையத்திற்கு செல்வதற்கு அஞ்சும் நிலை வரக் கூடாது. ஏழைகள் காவல் நிலையத்தை கண்டு பயப்படக்கூடாது.

    ஜெயலலிதா: காவல் நிலையங்களை கண்டு அஞ்சுகின்ற நிலைமை கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில்தான் இருந்தது. தற்போது அத்தகைய நிலைமை இல்லை. காவல்துறையை மக்கள் நண்பனாகத்தான் கருதுகிறார்கள். போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் காவல் நிலையம் சென்றால் அவர்கள் நன்றாக கவனிக்கப்படுகின்றனர். புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் செல்லும் பொதுமக்களுக்கு மரியாதை செய்து அவர்களை நாற்காலி போட்டு அமர வைத்து புகார்களை பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு இதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 10 இருக்கைகள் போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காவல் நிலையம் வரும் மக்கள் உபசரிக்கப்பட்டு அவர்களிடம் புகார் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 11 மாத கால இந்த ஆட்சியில் காவல் நிலையம் செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்ற நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

    பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சரின் நல்ல நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும் அதிலுள்ள சில குறைபாடுகளை எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
    உதாரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாத்தியனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற தந்தையும், மகனும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதில் மகன் இறந்து போனதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. எனவே இன்னும் காவல் நிலையத்தை கண்டு பயப்படும் நிலை உள்ளது.

    ஜெயலலிதா: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தியை வாசிக்கிறார். பாலமுருகன் என்ற அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என்று தெரியாது. காவல் துறையினர்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இவரிடம் இல்லை. இது பற்றி முறையாக இவர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அந்த மாவட்ட காவல் துறை அதிகாரி மற்றும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருடன் உரிய முறையில் விசாரித்து அரசு உண்மை நிலை குறித்து அறிக்கை வெளியிடும்.

    பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சருக்கு நன்றி. காவல் நிலையங்களின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றுதான் கூறினேன். சிபி சக்கரவர்த்தி காலத்தில் வல்லூரு ஒன்று புறாவை துரத்த அந்த புறா மன்னன் நமக்கு அடைக்கலம் தருவார் என்ற நம்பிக்கையுடன்தான் அவரிடம் தஞ்சமடைந்தது. அவர் ரசம் வைத்து சாப்பிட்டு விடுவார் என்றால் அங்கு சென்றிருக்குமா?

    ஜெயலலிதா: எதிர்க்கட்சி துணைத் தலைவர் புராண காலத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ராமாயணத்தை பற்றி பேசினார். இப்போது சிபி சக்கரவர்த்தி கதை பற்றி சொல்கிறார். தற்போது நவீன காலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் காவல் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

    பண்ருட்டி ராமச்சந்திரன்: கதையை மட்டும் பார்க்கக் கூடாது. அதன் பின்னால் உள்ள கருத்தையும் பார்க்க வேண்டும். காவல் துறையினரால் பணக்காரர்கள் எவரும் பாதிப்புக்கு ஆளாவதில்லை. சாதாரண ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

    ஜெயலலிதா: பணக்காரர்கள் யாரும் காவல் நிலையத்திற்கே செல்வதில்லை. சாதாரண மக்கள்தான் செல்கின்றனர். சாமானியர்களுக்கு காவல் நிலையம் உறுதுணையாக இருக்கிறது.

    பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே 4 பேர் மரணம் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

    ஜெயலலிதா: நாங்கள் ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் ஒரு சில வழக்கில் சாட்சிகளை விசாரணைக்கு அழைத்து சென்றபோது நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம் 4 பேர் மரணமடைந்ததாகத்தான் அரசு தரப்பில் தகவல் உள்ளது. இவர் 11 பேர் மரணம் என்கிறார். அரசுக்கு வராத தகவல் எப்படி இவருக்கு கிடைத்தது. இதற்கு என்ன ஆதாரம்?

    காவல் துறையினர் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போதும், வழி காவலின் போதும் எதிர்பாராதவிதமாகவும், நோய் காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பும் போதும் திருடர்கள் என நினைத்து மக்கள் சிலரை தாக்கி அவர்கள் காவல் நிலையம் வரும் போதும் காவல் நிலைய விசாரணைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாலோ அதையெல்லாம் காவல் நிலைய மரணம் என்று சொல்லி விடுகிறார்கள்.

    இது தொடர்பாக ஒரு பாரபட்சமற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். அதில் காவல் துறையினர் மீது தவறு இருந்ததாக தெரிய வந்தால் தகுந்த நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. காவல் துறையினரும் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறோம்.

    பண்ருட்டி ராமச்சந்திரன்: சாலை விபத்துகள் தமிழகத்தில் அதிகம் நடைபெறுகிறது. உயிரிழப்பும் இங்கு அதிக அளவில் ஏற்படுகிறது.

    ஜெயலலிதா: தமிழகத்தில் வாகன எண்ணிக்கைகள்தான் அதிகரித்துள்ளது. சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறைந்த அளவில்தான் ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு இந்த விவாதம் நடைபெற்றது.

    மேலும் முதல்வர் கூறுகையில், போலீசார் ஓய்வு பெற்ற பிறகு சொந்த வீட்டில் வசிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தர்மபுரியில் ஆசிரியரை தாக்கிய டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


    Posted by விழியே பேசு... at 4:52 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. thiyagarajan.sApril 25, 2012 at 1:52 PM

      ரசம் இல்ல பண்ருட்டி சுக்கா வருவல்..இதுகூட தெரியாம என்ன ஆளு நீங்க....உடம்புல வியாதி இருக்கிறதால சைவத்துக்கு மாறீட்டீங்களா........??? ஆக்சுவலா நான் சைவந்தேன்

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ▼  April (425)
      • விரைவில் உருவாகிறது நவீன டைட்டானிக் கப்பல்
      • விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' 1st look போட்டோ
      • நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
      • எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!
      • மே 1 - துப்பாக்கி
      • அலெக்ஸ் பால் மேனனை மீட்பதில் புது சிக்கல்: மே 2-ந்...
      • ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாட...
      • நீதிமன்றத்தால் என்னை பதவியில் இருந்து நீக்க முடியா...
      • இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப்...
      • நித்தியானந்தாவை மதுரையை விட்டு வெளியேற்றுக... மதுர...
      • பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கருணாநி...
      • கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ அமைப்பு
      • லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்த ஈழத்தமிழ் மாணவர் தேர்வு
      • விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பேன்...
      • காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு: கிராமங்களில்...
      • குடியரசுத் தலைவர் வேட்பாளர் நானில்லீங்க...: எஸ்கேப...
      • ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மேலும் நெருக...
      • "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி....
      • பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கருணாநிதி ஆதரவு!
      • நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட கிறிஸ் கெய்ல் !!
      • காதல் என்பது மென்னையானது ;அதை கஷ்டப்படுத்துறாங்க :...
      • நண்பன் 100-வது நாள் விழாவில் உறவுகளை கொச்சைப்படுத்...
      • ‘யோஹன்’ தலைப்புக்கு கவுதம் விளக்கம்
      • சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.ம...
      • சச்சினுக்கு எம்.பி. பதவி: காங்கிரஸ் மீது பால் தாக்...
      • மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள்...
      • உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 20 பே...
      • எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?
      • நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!
      • மே தினத்தில் 'பில்லா-2' பாடல், விஸ்வரூபம் 'டிரைலர்...
      • மதுரை ஆதீனம் என்ற ஆலமரத்திற்குக் கீழே முளைத்த காளா...
      • '3'பட ஆடியோ உரிமை விவகாரம்: தனுஷ், ஐஸ்வர்யா மீது ஐ...
      • நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து ...
      • ஊழல், கருப்புப் பணம் குறித்து பேசுவாரா சச்சின்?......
      • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நித்தியானந்தா!
      • மதுரை இளைய ஆதீனமாக ரஞ்சிதாவின் நித்யானந்தா பதவியேற...
      • பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..?
      • நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் வி...
      • ‘பொறுத்திருந்து பாருங்கள்.,பின்னர் கேளுங்கள்’- ஜனா...
      • போபோர்ஸ் ஊழலில் சோனியா பெயர் இடம் பெறாதது வியப்பளி...
      • கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்ன...
      • கார்த்திக்கு பிரியாணி கொடுத்து சூர்யாவை ஏமாற்றிய வ...
      • விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!
      • முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஜாமீனில் ...
      • அபிஷேக்சிங்வி ஆபாச வீடியோ(இணைப்பு): தடை செய்ய காங்...
      • எம்.பி. பதவியை ஏற்க சச்சின் தெண்டுல்கர் கட்டாயப் ப...
      • பிரபு தேவாவின் புது காதலி !
      • சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
      • சிம் கார்டு வழங்க புதிய நடைமுறை: நிபுணர் குழுவை அம...
      • பில்லா-2 பட பாடல்கள்! (promo videos)
      • மே1ம் தேதி 'விஸ்வரூபம்'!
      • சச்சின் தெண்டுல்கரின் எம்பி பதவி குறித்து கருணாநித...
      • திமுகவில் அழகிரி ஆள், ஸ்டாலின் ஆள் என்று யாரும் இல...
      • பில்லா-2 பட பாடல்கள்!
      • ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்...
      • மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!
      • என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை ...
      • அன்புமணி ராமதாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
      • ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு
      • சச்சின் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை......
      • விஜய் கேட்டும் கொடுக்காத படத்தை விஜய்காந்த் மகனுக்...
      • அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயி...
      • ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்...
      • தெண்டுல்கர் அரசியலில் குதிப்பாரா?
      • சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துர...
      • தனி ஈழம் வேண்டும் என்று எந்தத் தமிழரும் கூறவில்லை:...
      • அஜீத் நாயகிக்கு கல்யாணம்!
      • அன்னா ஹசாரே வை சந்திக்க பால் தாக்கரே மறுப்பு
      • மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒடிசா எம்.எல்.ஏ. விடுதலை
      • சிம்பு போஸ்டர் பின்னணி என்ன?
      • அணையை தகர்க்க வெடிமருந்தை ரெடியாக வைத்திருக்கும் க...
      • தமிழர்களை கொல்ல இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்து...
      • புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் ஆண்ட்ரியா கோ...
      • சசிகலா கணவர் நடராஜன் மீது தொடர்ந்த வழக்கு வாபஸ்
      • "என் தோற்றத்தை கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''...
      • புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட...
      • சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களை எம்.பி. பதவி?
      • அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாரா...
      • கேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்!
      • செக்ஸ் மன்னன் அபிஷேக் சிங்வி தொடர்பான பொதுநல மனு த...
      • பெனாசிர் கொலை வழக்கு:முஷாரப்பை ஒப்படைக்க முடியாது ...
      • 'சில்வர் ஜூப்ளி' காணும் இசைஞானியின் 'ஹவ் டூ நேம் இ...
      • 19-வது ஓவரில் சரவெடி நிகழ்த்தி மும்பை இந்தியன்ஸ் ...
      • பிரச்சினைகளை சந்தித்தேன்....கஷ்டங்களை அனுபவித்தேன்...
      • அடுத்த பட ஹீரோ விக்ரம்தான் - முடிவுக்கு வந்தார் ஷங...
      • போபர்ஸ் ஊழலில் ராஜீவ்காந்தி- அமிதாப்பச்சனுக்கு தொட...
      • சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா ஜோடி!
      • மதிய உணவுத் திட்டம்: 'வரலாற்றையே மாற்ற அதிமுக முயற...
      • 'தண்ணி' யடிக்காத இளைஞர்களுக்கு பரிசு: சைதை துரைசாமி
      • தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்: யுவராஜ்சிங்
      • ராஜபக்சேவுக்காக பொய் சொல்கிறாரா சுஷ்மா??
      • கைவிடப்பட்ட அருள்நிதியின் படம்
      • விஜய்காந்த்திடம் சிக்கிய ரேசன் கடை 'பிராடுகள்': அட...
      • விஜய் ரெடின்னா நானும் ரெடி - உதயநிதி ஸ்டாலின்!
      • தமிழ் ஈழம்: டி.கே.ரங்கராஜனுக்கு கருணாநிதி 'குட்டு'!
      • குடியரசுத்தலைவர் தேர்தல் : கருணாநிதியை சந்திக்க சி...
      • அலெக்ஸ் பால் மேனனை மீட்க களமிறங்குகிறார் விஜயக்கும...
      • திக்விஜய் சிங் ஒரு தீவிரவாதி: மத்திய பிரதேச சபாநாயகர்
      • இதுக்கு தான் இவ்ளோ நாடகமா! தேர்தலில் அன்னா ஹசாரே க...
      • 40 வயதை நெருங்குகிறார் சச்சின்-இன்று 39வது பிறந்த ...
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.