ஒடிசா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். எம்.எல்.ஏ.வை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.
மாவோயிஸ்டுகளில் 4 பேரை தவிர 25 பேரை விடுதலை செய்ய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் தாங்கள் கூறிய 29 பேரையும் இன்று மாலை 5 மணிக்குள் விடுவிக்க வேண்டுமென ஒடிசா அரசுக்கு மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்தனர். தற்போது அவர்கள் விதித்த கெடு முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால், எம்.எல்.ஏ விவகாரத்தில் நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். இதனால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா விவகாரம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவோயிஸ்டுகளில் 4 பேரை தவிர 25 பேரை விடுதலை செய்ய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் தாங்கள் கூறிய 29 பேரையும் இன்று மாலை 5 மணிக்குள் விடுவிக்க வேண்டுமென ஒடிசா அரசுக்கு மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்தனர். தற்போது அவர்கள் விதித்த கெடு முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால், எம்.எல்.ஏ விவகாரத்தில் நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். இதனால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா விவகாரம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment