வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க பிரதமராக ராகுல் வருவார் என்று, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான ரஷீத் ஆல்வி கூறியுள்ளார். பாரதீய ஜனதா சார்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என கூறப்படுகிறது.
இது பற்றி மேலும் பேசியுள்ள ஆல்வி, ‘மோடி மட்டுமல்ல பாரதீய ஜனதாவைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் வரை பிரதமராக வர ஆசைப்படுகிறார்கள். எனினும் எத்தனை முதல்வர்கள் வந்தாலும், ராகுலுக்கு இணையாக வரமுடியாது. மோடியை விட ராகுல் தான் பிரதமர் பதவிக்கு தகுதியானர். அடுத்து வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் இதில் மாற்றமில்லை’ என்றார்.
No comments:
Post a Comment