தேமுதிக ஒரு கறிக்கோழி மாதிரி. நன்றாக தின்று கொழிக்கும். ஆனால் குஞ்சு பொறிக்காது என்று அதிமுக இளம் பெண்கள், இளைஞர்கள் பாசறை மாநிலச் செயலாளர் டாக்டர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் எதிரே முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைகைச்செல்வன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
அ.தி.மு.க.வினரும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினரும் எழுச்சியுடன் உள்ளனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அனுமதியுடன், இளைஞர்களை மேலும் ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். மேலும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமும் நடத்தப்படும்.
தே.மு.தி.க. ஒரு கறிக்கோழி. தின்று கொழுக்கும், ஆனால் குஞ்சு பொறிக்காது. அக்கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்குகிறது. இதை எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. வருகிற இடைத் தேர்தலிலும் இதை நிரூபிப்போம்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு, சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றியே சாட்சி என்றார் வைகைச் செல்வன்.
இரண்டுமே ஒரே சாக்கடையில் பிறந்த காகிதப் கோழிகள்.எப்படி குஞ்சு பொரிக்கும்?
ReplyDelete