ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.
ஐ.பி.எல்., டுவென்டி-20 சீசன் 5 தொடரின் முதல் லீக் போட்டி சென்னையில் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பந்துவீசியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.
இதன்படி களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 36 ரன்களும், பிரேவோ 19 ரன்களும், விஜய் மற்றும் பத்ரிநாத் தலா 10 ரன்களும் எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 113 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.
No comments:
Post a Comment