விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, July 28, 2011

    மாணவச் செல்வங்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிக்க வேண்டும்- கருணாநிதி

    சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்திநடைபெறவுள்ள வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை மாணவர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை:
    நாங்கள் அவசரப்படவில்லை
    தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது சமச்சீர் கல்வித்திட்டத்தை அவசரமாக கொண்டு வந்து விட்டதை போலவும், அதனால் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களின் தரத்தை உயர்த்தவும், உயர் மட்டக்குழு அமைத்து, அது குறித்து ஆராய அவகாசம் தேவைப்படுவதாலும் இந்த ஆண்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

    தி.மு.க. ஆட்சியிலே சமச்சீர் கல்வித்திட்டம் அவசர அவசரமாக கொண்டுவரப்படவில்லை. 2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று அறிவித்திருந்தோம். அந்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வி திட்டத்தை தனது முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றி அறிவித்து விடவில்லை.

    சமச்சீர் கல்வித்திட்டம் பற்றி அரசுக்கு பரிந்துரைகளை தருவதற்காக 8.9.2006 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் கல்வியாளர்களை கொண்ட ஒரு குழுவினை தமிழக அரசு அமைத்தது. அந்தக்குழு இதைப்பற்றி நன்கு ஆய்வு செய்து தனது ஆய்வறிக்கையை அரசின் பரிசீலனைக்காக அளித்தது. அவ்வாறு அந்த குழு பரிந்துரைகளை அளித்தவுடன் தமிழக அரசு அப்படியே அவற்றை ஏற்றுக்கொண்டு சமச்சீர் கல்வித்திட்டத்திற்காக சட்டம் கொண்டு வந்து விடவில்லை.

    அந்தக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க எம்.பி. விஜயகுமாரை ஒரு நபர் குழுவாக தமிழக அரசு நியமித்தது, எஸ்.முத்துக்குமரன் ஆய்வறிக்கையினை அந்த ஒரு நபர் குழு பரிசீலனை செய்து-சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியது. அதன்பின்னரும் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பரிசீலிக்க, பிற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டங்கள் தேர்வுமுறைகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அதிகாரிகளை கொண்ட கல்வியாளர்கள் குழு ஒன்று அரசினால் 30.10.2008-ன் படி, அமைக்கப்பட்டது.

    குஜராத், கேரளா, கர்நாடகா போய் ஆய்வு
    அந்த கல்வியாளர்கள் குழு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையினை அரசுக்கு வழங்கியது. இந்த குழுக்களையெல்லாம் அமைத்து அவர்கள் பல மாதங்கள் ஆய்வு செய்து பரிந்துரைகளையெல்லாம் அளித்த பிறகு தான், அதாவது சுமார் 4 ஆண்டுகள் பரிசீலனை செய்த பின்னர் தான் 2010-ம் ஆண்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான சட்டம் 1.2.2010 அன்று தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.

    சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகும், அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் 1.3.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கல்வியாளர்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு சமச்சீர் கல்விச்சட்டத்தின் படி, 2010-2011-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டன. சமச்சீர் கல்வி முறையை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தலாம் என்றும், முதற்கட்டமாக 2010-2011 கல்வி ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், அதனை தொடர்ந்து 2011-12 கல்வி ஆண்டில் பிற எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும், நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

    சமச்சீர் கல்விக்கு சாதகமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணைக்கு இடைக்காலத்தடை வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. முதற்கட்டமாக 2010-2011 கல்வியாண்டில் முதல் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் முதலாம் வகுப்பு தேவையான 61 லட்சம் பாடப்புத்தகங்களும் 6-ம் வகுப்புக்கு தேவையான 84 லட்சம் பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களைப்படித்து முடித்துள்ளார்கள்.

    அரசின் கொள்கை முடிவின்படி 2011-2012 கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன. இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

    பிடித்த முயலுக்கு மூனே கால்
    எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் - அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் - என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்தக் காலக் கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான். தி.மு.க.வின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை. அதனை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான், எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித்தனமாக அதனை அறிவித்துவிடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து, அந்தக் குழுக்களை கொண்டு வெளி மாநிலங்களுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் செய்ய செய்து, அதன் பிறகுதான் படிப்படியாக சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, அது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

    பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் ஆகியும் இந்த ஆண்டு தாங்கள் என்ன பாடப்புத்தகங்களை படிக்க விரும்புகிறோம் என்பதே தெரியாத நிலையில் மாணவ செல்வங்களும், அவர்களின் பெற்றோர்களும் தவித்துப் போய் இருப்பதைப் பற்றி தமிழக அரசு கவலையேபடாமல் இதனை கவுரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்டு நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மதிக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்தையும் கேட்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

    அதனால்தான் தி.மு.க. சார்பில் 29-7-2011 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை மாணவ செல்வங்கள் புறக்கணித்து, தங்களுக்குள்ள எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். மாணவர்கள் நினைத்தால் எதிலும் வெற்றிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அறப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைதி வழி - அறவழி, அதுவே அண்ணா வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.






    Posted by விழியே பேசு... at 9:49 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. SURYAJEEVAJuly 28, 2011 at 5:53 PM

      போராட்டம் நியாயமாக இருந்தால் யார் நடத்துவது என்று யோசிக்காமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் பொது உடமை கட்சிகாரர்கள் [cpi,cpi(m)]என்னப்பா சொல்றீங்க? சத்தத்தையே காணோம்...

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ▼  July (498)
      • ராசாத்தி அம்மாளின் கணக்குப் பிள்ளை கைது
      • நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டு வெளியேற்ற கோரி...
      • 2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாத...
      • கருணாநிதியின் இலங்கை 'ஆதரவு'ப் பேச்சு!
      • 'ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர், சோனியா, ...
      • வீரபாண்டியாருக்கு 'ராயல் சல்யூட்'-போலீசார் அதிரடி ...
      • 'நல்ல நேரம்' பார்த்து ராஜினாமா கடிதத்தை கத்காரிக்க...
      • தமிழ் இனத்தை அழித்த பழியை சுமக்கும் இந்தியா-இலங்கை...
      • கேரள மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மேலும் 7 பேர் கைது
      • ஒரு திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்ட...
      • சென்னை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்பட 12 பேர் ம...
      • கேரளாவுக்கு சாதகமான அணை பாதுகாப்பு மசோதா-ஜெ. கடும்...
      • கணவருடன் செல்ல மறுத்த நடிகை: குழந்தைகளை கண்டதும் ம...
      • ஜெயலலிதாவின் குரலுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்ட...
      • அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!
      • நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!
      • உள்ளாட்சித் தேர்தலில் பாமக- விடுதலைச் சிறுத்தைகள் ...
      • மதுரை இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பெண் புரோக்கர் ...
      • அத்துமீறிப் போகிறது அதிமுக அடக்குமுறை: கருணாநிதி
      • ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...
      • என் ரசிகர்களை தாக்கவேண்டாம், என்னை தாக்குங்கள்...!...
      • மு.க. ஸ்டாலின் கைது
      • திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது
      • 'சதமடித்தார்' சச்சின் டெண்டுல்கர்!
      • தான் ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி: பேஷன் ந...
      • நிலத்தை கேட்டு அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த ம...
      • கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
      • 'பிட்' படம் வாங்கல்லியோ பிட் படம் : வாங்க ஆளில்லை...!
      • விஜய்-கவுதம் இணையும் புதிய படம்
      • காலாவதியாகும் பழைய ரேஷன் கார்டுகள்- புது அட்டை தரப...
      • அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!
      • சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!
      • சினிமாவில் அரசியலை கலக்க கூடாது: அஜீத் பேட்டி
      • அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!
      • இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...
      • தமிழர்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்து எரிந...
      • வேலாயுதம் இசை வெளியீட்டு தேதி!
      • செய்திச் சுருக்கம்: ஜூலை 28, 2011
      • சென்னை மேயரை கண்டதும் தமிழக அமைச்சர் ஓட்டம்
      • தளபதியின் தம்பி திடீர் மரணம் : அஞ்சலி செலுத்த அனு...
      • கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக...
      • கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்
      • லோக்பால் மசோதா: பிரதமர், நீதித்துறைக்கு விலக்கு!
      • ஆக 5-க்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க வேண்டும்- உ...
      • கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட...
      • எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...
      • மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...
      • தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார்-எஸ்.ஏ.சந்திரசேகர்...
      • நான் 'கஜினி' இல்லை- கல்மாடி 'அலேக்' பல்டி!
      • வீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...
      • தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்!
      • வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு
      • அழகிரியின் கூட்டாளி தளபதி மீதும் பாயுமா குண்டர் சட...
      • மாணவச் செல்வங்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிக்க வே...
      • தமிழக அரசு தவறு செய்து விட்டது- அரசு வக்கீலின் 'சே...
      • 2 வருடமாக அறையில் அடைத்து கற்பழிப்பு: முக்கிய புள்...
      • திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க.
      • இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்
      • ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து... 'பசு' நடிகராலும் ...
      • ஆசிரியர் அடித்து மாணவர் மரணம்: சகமாணவர்கள் சாலை மற...
      • சேற்றில் மூழ்கிய தீபிகாபடுகோன் - கே.எஸ்.ரவிகுமார்
      • கொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்!
      • திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்- பாமக பொது...
      • சுக்கல் சுக்கலாக சிதறப் போகிறது அல் கொய்தா!
      • மலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...
      • 2ஜி ஊழலுக்கு அமைச்சரவைதான் பொறுப்பேற்க வேண்டும்: ச...
      • பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த்...
      • விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து...
      • டீன் ஏஜ் பெண்களை கவனமா பார்த்துக்கங்க
      • மங்காத்தா - 19; வேலாயுதம் - 31 ?
      • தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் உருவபொம்மை எர...
      • கட்சி நிர்வாகிகள் பரிசளித்த துணியால் ஷூவை துடைத்த ...
      • ஆபாசம் - வன்முறை படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது:...
      • இலங்கை தமிழர்களுக்காக துப்பாக்கியை தூக்க வேண்டாம்;...
      • முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!
      • சரிந்த செல்வாக்கு, தகர்ந்த கனவுகள்... தவிப்பில் மம...
      • மோட்டார்சைக்கிள் ஓட்டி அசத்திய நடிகை கேத்ரீனா கைப்
      • ஆபாச பாட்டு... அமீர் கானுக்கு நோட்டீஸ்!
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு விஜயலட்சுமி விவகாரம...
      • இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது!: கி.வீரமணி
      • சமச்சீர் கல்வி கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட...
      • இந்தியா வந்தார் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா
      • தலித்களின் வீடுகளை இடித்து, நிலத்தை ஆக்கிரமித்த ரா...
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு
      • ஈவ் டீசிங்: பிளஸ்-2 மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் தலை...
      • போலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்!
      • கருணாநிதியின் முன்னாள் உதவியாளர், ஜாபர்சேட் வீடுகள...
      • முதலில் பிரதமரும், சிதம்பரமும் பதவி விலகட்டும்: எத...
      • கும்பலாக விபச்சாரத்தில் ஈடுபடும் இலங்கை டிவி நடிகை...
      • முதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...
      • 2ஜி: பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை-நீதிமன்றத்தி...
      • கலாநிதி மாறன் இன்று காவல் நிலையத்தில் ஆஜராவாரா?
      • ரவிச்சந்திரன் நடித்த முதல் படத்தில் நான்தான் அவருக...
      • பதவிக்காக மட்டும் வாழக்கூடாது: டி. ராஜேந்தர்
      • குற்றவாளி, தன்னை காத்துக்கொள்ள கூறும் புகார்;ஆ.ராச...
      • நான் இயக்கும் படத்தில் குறளரசன் கதாநாயகனாக நடிக்கி...
      • ராஜபக்சேக்கு எதிராக விஜய் ஏன் கையெழுத்து போட மறுக்...
      • திருச்சி: 50 குழந்தைகள் சிசு கொட்டி கிடக்கும் காட்...
      • வீட்டை ஆக்கிரமித்ததாக புகார்: நடிகர் கைது
      • கலைந்தது விஜயின் வேஷம் : ராஜபக்சேவை தண்டிக்க கோரி ...
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.