விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, August 2, 2011

    பெல்லுக்கு உயிர் கொடுத்த டோணி- முடிவு சரியா?

     டிரன்ட் பிரிட்ஜில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன. இங்கிலாந்து வீரர் இயான் பெல் நூதன முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் உள்ளிட்டோர் கெஞ்சிக் கேட்டதால் அந்தக் கோரிக்கையை இந்திய கேப்டன் டோணி திரும்பப் பெற்றார். இதனால் ரன் அவுட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஆடினார் இயான் பெல். அவரது அபார ஆட்டத்தால் தற்போது ஆட்டம் இங்கிலாந்துப் பக்கம் திரும்பி விட்டது. இதனால் டோணியின் முடிவால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்த நீதிமன்றம் இப்படி ஒரு விசித்திரத்தை இதுவரை கண்டதில்லை என்று பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசுவார். அதேபோல ஒரு காட்சி நேற்று நாட்டிங்காமில் நடந்தேறியது.

    இயான் பெல் நேற்று ரன் அவுட் செய்யப்பட்ட விதம், அதை பின்னர் இந்திய அணி திரும்பப் பெற்ற செயல், மீண்டும் இயான் பெல் ஆட வந்த காட்சி ஆகியவை கிரிக்கெட் உலகையே பெரும் சலசலப்புக்குள்ளாக்கி விட்டது.

    நாட்டிங்ஹாம்,ஆக.1:சர்ச்கைக்குரிய முறையில் ரன் அவுட் கொடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் இயான் பெல்லை மீண்டும் இந்திய கேப்டன் டோனி ஆட அழைத்தது விளையாட்டு உணர்வை மேம்படுத்தும் செயல் என்று அனைவரும் பாராட்டி உள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 3வது நாளான நேற்று இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருந்தது. தேநீர் இடைவேளைக்கு முன்பாக கடைசி பந்து வீசப்பட்டது. அப்போது இங்கிலாந்து வீரர் மார்கனுக்கு இஷாந்த் சர்மா பந்து வீசினார். அந்தப் பந்தை அடித்த மார்கன், பந்து வேகமாகப் போனதைப் பார்த்து சரிதான், பவுண்டரிக்குத்தான் போகிறது என நினைத்து விட்டார். அதைப் பார்த்த மறு முனையில் நின்றிருந்த இயான் பெல் பெவிலியனை நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

    ஆனால் பந்தை தடுத்து நிறுத்திய பிரவீன்குமார் அதை பீல்டரிடம் வீச, இயான் பெல் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் நடுவர்கள் என்ன முடிவு சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் 3வது நடுவரின் முடிவை எதிர்நோக்கினர். அவரும் டிவியில் ரீப்ளே பார்தது அவுட் என்று அறிவித்தார். இதனால் இயான் பெல் ரன் அவுட் என அறிவிக்கப்பட்டது.

    பெவிலியனை நோக்கி போய்க் கொண்டிருந்த இயான் பெல் ராட்சத ஸ்கோர்ட் போர்டுக்கு மேல் அவுட் என்று அறிவிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இங்கிலாந்து அணியும் குழப்பமடைந்தது. 

    பார்த்துக் கொண்டிருந்த இங்கிலாந்து ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய வீரர்களைப் பார்த்து ஆவேசமாக குரல் எழுப்பினர். திட்டினர், கிண்டலடித்தனர். தேநீர் இடைவேளைக்காக இரு அணியினரும் பெவிலியன் திரும்பி விட்டனர்.

    கூடிப் பேசிய பயிற்சியாளர்கள்-கேப்டன்கள்
    பெவிலியன் திரும்பிய பின்னர் இந்திய, இங்கிலாந்து அணிகளின் பயிற்சியாளர்களும், கேப்டன்களும் சந்தித்துப் பேசினர். இயான் பெல்லுக்கு கொடுக்கப்பட்ட ரன் அவுட் குறித்து ஏமாற்றம் தெரிவித்த கேப்டன் ஸ்டிராஸ், இந்தியா தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து கேப்டன் டோணி தனது அணியின் மூத்த வீரர்களுடன் ஆலோசித்தார். அதன் பிறகு முடிவை திரும்பப் பெறுவதாக அவர் நடுவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பெல்லுக்குக் கொடுக்கப்பட்ட ரன் அவுட்டும் திரும்பப் பெறப்பட்டது. இதனால் அவர் மீண்டும் ஆட அழைக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை முடிந்து இங்கிலாந்து வீரர்கள் களம் இறங்கியபோது பெல் மீண்டும் ஆட வந்தார். இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர் இங்கிலாந்து ரசிகர்கள். இந்திய வீரர்களைப் பார்த்து திட்டிய வாய்கள், இந்திய வீரர்களை கைதட்டி புகழ்ந்து வரவேற்றனர்.

    மேலும் இங்கிலாந்து வீரர்களும் இந்தியாவின் பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் தங்களது காலரியிலிருந்து எழுந்து நின்று களத்திற்குள் வந்த இந்திய பீல்டர்களை கை தட்டி வரவேற்றனர்.

    டோணி முடிவு சரியா?
    இந்தியாவின் பெருந்தன்மையால் மீண்டும் ஆட வந்த இயான் பெல் அடித்து நொறுக்கி சதத்தைக் கடந்து 159 ரன்களைக் குவித்து இங்கிலாந்துக்கு வலுவான நிலையை ஏற்படுத்தி விட்டார். இதை சலனமில்லாமல் இந்திய வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 374 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றால், இந்தியா தனது முதலிடத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்தியாவின் முடிவு குறித்து இரு விதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. பலர் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர். பலர் விமர்சித்துள்ளனர்.

    இந்தியாவின் முடிவு தவறு-மைக்கேல் ஹோல்டிங்
    முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரை இயான் பெல் ரன் அவுட் ஆகி விட்டார். மீண்டும் அவரை ஆட அழைத்த முடிவு தவறானது. ஏன் டோணி இந்த முடிவை எடுத்தார் என்பது புரியவில்லை என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், இயான் பெல் பந்து பவுண்டரிக்குப் போவதாக நினைத்து நடக்க ஆரம்பித்து விட்டார். அதாவது அவரே நடுவராக மாறி விட்டார். இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு இந்தியா பொறுப்பேற்க முடியாது. உண்மையில் களத்தில் இருந்த நடுவர்கள்தான் இந்தக் குழப்பம் ஏற்படாத வகையில் செயல்பட்டிருக்க வேண்டும். அவர்களே இதை 3வது நடுவரின் முடிவுக்கு விட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றார்.

    டோணி முடிவு பாராட்டுக்குரியது-கவாஸ்கர்
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டோணியைப் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், விளையாட்டுதான் இங்கு முக்கியமானது. அதன் நெறிகள், மதிப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டோணியின் முடிவு பாராட்டுக்குரியதே. 

    அதேசமயம், இந்தியாவின் முடிவை இயான் பெல் வரவேற்றுப் பாராட்டி, நல்லது, அதேசமயம், நான் தவறு செய்து விட்டேன். எனவே நான் விளையாட மாட்டேன் என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது இந்தியாவின் முடிவை விட மிகச் சிறந்ததாக மாறியிருக்கும் என்றார் கவாஸ்கர்.

    வார்ன் பாராட்டு
    டோணியின் முடிவால் கிரிக்கெட் ஆட்டத்தின் பெருமையும், கவுரவமும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக ஷான் வார்ன் கூறியுள்ளார். இது 20 நிமிடத்தில் நடந்த ஒரு நிகழ்வு. இதில் தொடர்புடைய அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். விளையாட்டின் பெருமையை நிலை நிறுத்தியுள்ளனர் என்றார்.

    டோணியின் செயல் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வரும் கசப்புணர்வுகள், பதிலுக்குப் பதில் பேட்டிகள் ஆகியவற்றை அடியோடு தணித்திருப்பதாக பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அணிக்கும் சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய அணியைப் பாராட்டியுள்ளது.

    இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் தலைவர் ஹாரூண் லோர்காட் கூறுகையில், கேப்டன் டோணி மற்றும் அவரது அணியினரின் முடிவு பெரும் பாராட்டுக்குரியது, முதிர்ச்சியானது. கிரிக்கெட்டின் பெருமையை அவர்கள் நிலை நிறுத்தியுள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இது மிகவும் சிறப்பானது என்றார்.

    இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணமான இயான் பெல் இந்த விவகாரம் குறித்து பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பந்து பவுண்டரிக்குப் போவதாக நான் நினைத்து நடக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நான் அவசரப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்கிறேன். இது எனக்கு நல்ல பாடம். எனது பக்கம்தான் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். விதிப்படி நான் அவுட்தான். இருப்பினும் இந்திய வீரர்கள் கிரிக்கெட்டின் பெருமையை நிலை நிறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால்தான் நான் மீண்டும் ஆட முடிந்தது என்றார்.

    பெல்லுக்கு புதுவாழ்வு கொடுத்து விட்டார் டோணி. ஆனால் பெல்லோ, இந்திய அணிக்கு 'மணி' அடித்து விட்டார் தனது அபார ஆட்டத்தால். 

    வாழ்க கிரிக்கெட்!




    Posted by விழியே பேசு... at 8:21 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ▼  August (478)
      • நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்ச...
      • மங்காத்தா தியேட்டர்களில் சோதனை?
      • விழுப்புரத்தில் மாஜி அமைச்சர் பொன்முடி கைது- ஆயிரக...
      • கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்த வழக்கு- 5 நிறு...
      • ரூ. 6 லட்சம் கொடுத்தால் ஆடலாம், குடிக்கலாம்-செக்ஸு...
      • தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் ...
      • விஸ்வரூபத்தில் அனுஷ்கா இல்லை தடைவிதித்த நாயகன் யார்?
      • மணிரத்னம்-அஜீத் சந்திப்பு புதுப்பட பேச்சு வார்த்தையா?
      • விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்க...
      • பாம்பும் கீரியுமாக இருந்த எடியூரப்பா-குமாரசாமி இடை...
      • ஐகோர்ட்டில் பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு விடை...
      • மங்காத்தா ரிலீஸ்.. அதிரடி வெற்றி!
      • தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்தூக்குத்தண்டனைக்கு எதிர்...
      • ஜெயராமுடன் கமல் இணையும் அன்புள்ள கமல்
      • கிரேசி- கமல் கூட்டணியில் புதிய படம்
      • உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கண...
      • இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதே...
      • வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ பு...
      • கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்
      • குடிபோதையில் கார் ஓட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின்...
      • பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து...
      • விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்...
      • மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் த...
      • ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்ததற்கான ஆதாரம் இல்லை...
      • செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ...
      • ஸ்ருதியின் எக்ஸ்ட்ரா செலவு ஆடிப்போகும் தயாரிப்பாளர...
      • ஒன்று வாங்கினால் ஒன்று வசந்தபாலன் வளைத்த அஞ்சலி
      • கார்த்திக் மகனோடு கமலின் கமலின் 2-வது வாரிசு அக்ஷர...
      • ராஜிவ் உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை குறைக்கலாம்...
      • ஆசிரியர் செக்ஸ் சில்மிஷம்: 5-ம் வகுப்பு மாணவி தீக்...
      • 9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியதாக 7ல் ஒரு அ...
      • இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன்...
      • பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட தடை விதித்த...
      • தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்...
      • பெண் மெய்க்காப்பாளர்களை பலாத்காரம் செய்த கடாபி, மக...
      • 'விஸ்வரூப'த்தில் ஏமி ஜாக்சன் !
      • தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
      • இன்று விசாரணை- தூக்கிலிட தடை விதிக்கப்படுமா?
      • வேலாயுதம் பாடல்கள் டவுன்லோட்
      • மணி இயக்கத்தில் அஜீத் ?!
      • லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ராவின் கண...
      • ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு ...
      • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: வேளாங்கண்ணி ஆர...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆப...
      • திருமண நிச்சயதார்த்தம்... வருவாரா ரஜினி?
      • ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
      • ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் மூவரையும் காப்பாற்...
      • சோனியாவுக்கு முருகன் மகள் கண்ணீர்க் கடிதம்
      • உடல், உயிர் மட்டுமே நினைவுக்கு வந்தது: பணம் புகழ் ...
      • திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான்...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்...
      • மதுரையில் விஜய்: வரவேற்க அனுமதி மறுப்பு: இவ்வளவு ப...
      • விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்...
      • விஜயின் வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா போட்டோ, வீ...
      • நான் எடுத்த முடிவு முடிவுதான்: மதுரையில் நடிகர் வி...
      • எந்த தெய்வமும் கண்ணை குத்தாது: விஜயகாந்த்
      • நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயி...
      • நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வை...
      • தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! ப...
      • கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கி...
      • என் தந்தையைக் காக்க தமிழகம் வந்து போராட விரும்புகி...
      • இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!
      • அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்திருப்பது தோல்விதான்?
      • ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்...
      • மாறிவிட்டது தமிழ் புத்தாண்டு : மாறுமா தமிழ் ஆண்டுகள்?
      • அடுக்கடுக்கான வழக்குகள்: தனிமையில் தி.மு.க.
      • முதலில் யாருக்கு தூக்கு?
      • அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றி :...
      • உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்காதீங்க! : ஹசா...
      • மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன் : நடிகை வனிதா
      • இலவச லேப்டாப்புகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்...
      • சிறை to கோர்ட் செல்லும் வழியில் பொட்டுசுரேஷ் வைத்...
      • வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!
      • ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வ...
      • ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை
      • பேரறிவாளன்- சாந்தன்- முருகனின் கருணை மனு மீது 11 ஆ...
      • ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
      • சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்...
      • இந்தியா முழுவதும் தூக்கு மேடை வரை சென்று 72 பேர் உ...
      • வெளிஉலகை பார்க்க ஆசையாக உள்ளது: முதல்-அமைச்சரின் க...
      • நாளை மதுரையில் விழா: ஏழை பெண்களுக்கு விஜய் பசு தானம்
      • ஹோமோ செக்ஸுக்காக சிறுவன் கொலை: கல்லூரி மாணவர் கைது
      • உடைகிறது 'டீம் அன்னா'... சந்தோஷ் ஹெக்டே, அக்னிவேஷ்...
      • 100 நாட்களில் கொலைகள் 86, கொள்ளைகள் 110, வழிப்பறி ...
      • புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimeste...
      • தூக்குக்கு நாள் குறிப்பு- முருகனை சந்திக்க அனுமதிக...
      • எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை ச...
      • அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு ...
      • மீண்டும் பழைய கணவருடன்... வனிதா விஜயகுமாரின் மாற்றம்
      • சென்னை மேயராகிறாரா நடிகை குஷ்பு?
      • நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற...
      • அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை
      • கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!
      • மங்காத்தா பிரச்சினை: 'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு ...
      • அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு...: நடிகர் விவேக்
      • "வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்': அழகிரி விரக்தி
      • டி.ஆர்.பாலு ஆவேச பேச்சு: அ.தி.மு.க. ஆதரவு
      • விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.