வெயில் நேரம் மாணவர்கள் வெயிலில் பள்ளிக்கு வந்தால் மஞ்சள் காமாலை, வியர்வைதொடர்பான நோய்கள் வரலாம் என்று கருதி காலம் காலமாக தமிழ்நாட்டில் மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் 27-ந் தேதியுடன் மூடப்படுகின்றன. அன்று முதல் மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் வேலை நாட்கள் குறைவாக இருந்தால் அந்த பள்ளிகள் ஏப்ரல் 30-ந் தேதி வரை இருக்கும்.
ஜூன் மாதம் 1&ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. இதற்கான சுற்றறிக்கையை பள்ளி கல்வித்துறை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளது. இதுபோல தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 30-ந் தேதி முடிவடைந்து விடுமுறை விடப்படுகின்றன.
விடுமுறைக்குப்பின் ஜூன் மாதம் 1-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. வருகிற கல்வி ஆண்டில் மாணவர்கள் சுமையில்லாத புத்தகப்பையுடன் பள்ளிக்கு செல்ல உள்ளனர். அதாவது வருடத்திற்கு தேவையான புத்தகத்தை பிரித்து காலாண்டுக்கு ஒரு புத்தகம், அரையாண்டுக்கு ஒரு புத்தகம், அதன் பின்னர் உள்ள முழு ஆண்டுக்கு தனிபுத்தகம் என்று 3 வகையாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் மாணவர்கள் புத்தக சுமை குறைந்து எளிதாக தூக்கிச்செல்லலாம்.
No comments:
Post a Comment