கோச்சடையான் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. அதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷராப், ஷோபனா ஆகியோர் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்தார்.
கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்தார். அங்கு படப்பிடிப்பு முடிந்ததும், ரஜினிகாந்த் லண்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டார். லண்டன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், இங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்தார்.
கோச்சடையான் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடிக்கிறார். லண்டனில் நடைபெற்ற படப்பிடிப்பில், கதாநாயகி தீபிகா படுகோன் கலந்து கொள்ளவில்லை. திருவனந்தபுரத்தில் நடைபெறும் படப்பிடிப்பில், அவர் கலந்து கொள்கிறார்.
கோச்சடையான் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்காக கே.எஸ்.ரவிகுமார், சவுந்தர்யா, மற்றும் படப்பிடிப்பு குழுவினர் நேற்றே திருவனந்தபுரம் புறப்பட்டு போய்விட்டார்கள்.
ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
No comments:
Post a Comment