இன்றைய தேதியில் தமிழில் அதிக படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவர் இசையமைத்த படங்களில் அனைத்திற்குமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.
முதல் முறையாக 'புன்னகை பூவே' படத்திற்காக ஒரு பாடலுக்கு திரையில் தோன்றி பாடினார் யுவன். பின்னர், 'சரோஜா' படத்திலும் ஒரு பாடலுக்கு தோன்றினார்.
அப்படத்தினை அடுத்து பலர் அழைத்தும் எந்த ஒரு படத்திலும் இவர் தலைகாட்ட வில்லை. இவர் இசையமைத்து இருக்கும் 'பில்லா 2' படத்தின் ஆல்பத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
'பில்லா 2' படத்தில் தன் தோழன் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு பாடலில் தலைக்காட்டி இருக்கிறாராம் யுவன். இத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.
'பில்லா 2' படத்தில் ஒரு பாடலில் கொஞ்சம் காட்சிகள் மட்டும் யுவன் நடனமாடி இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார் ராஜசேகர்.
No comments:
Post a Comment