சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என அனைத்து நிபந்தனைகளையும் மத்திய அரசு அடுத்த 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். மீறினால் தங்களது பிடியில் இருக்கும் எம்.எல்.ஏ, மற்றும் இத்தாலியப் பயணியை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் அனுப்பிய ஆடியோ டேப் ஒன்றில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பாசுஸ்கோ பவுலோவும், ஒடிசா மாநில ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவும் மாவோயிஸ்டுகளின் பிடியில் பணயக் கைதியாக உள்ளனர்.
இவர்களை உயிருடன் மீட்பதற்காக மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து ஈடுபட்டுள்ளது.
நிலமை இப்படி இருக்க, மாவோயிஸ்டுகளின் இந்த 48 மணி நேர கெடு, அரசுக்கு பிரச்சினையை கொடுத்துள்ளது.
இன்று மதியம் மாவோயிஸ்ட் தலைவரின் மனைவி சுபாஸ்ரீ தாஸ் என்ற மிலி பான்டா, ''இத்தாலிய பயணியை மாவோயிஸ்டுகள் துன்புறுத்தக் கூடாது'' என்று ராயகாடா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் கடத்தப்பட்ட பி.ஜே.டீ எம்.எல்.ஏ ஜினா ஹிகாகா வை விடுவிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சுபாஸ்ரீ தாஸ் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக உயர்நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதும் மாவோயிஸ்ட் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment