கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் தமிழகத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
பலமாதங்களாக பிரச்சினையில் சிக்கி இருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்தது. அதன் பிறகே மாநில அரசின் உதவியோடு மத்திய அரசு இந்த அணு மின்நிலையத்தை செயல்படுத்தும் திட்டதில் இறங்கியது.
இதனிடையே கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் முழு மின்சாரத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இதே கோரிக்கையை தமிழக காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி இருந்தது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்தபோது ''தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள மின்சார தட்டுபாட்டை பற்றி பிரதமர் அறிந்து உள்ளார். இதில் பிரதமர் நல்ல முடிவு கண்டிப்பாக எடுப்பார்.'' என கூறியிருந்தார்.
இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூடங்குளம் மின்சாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment