அரசால் விதிக்கப்படும் வரியால் எண்ணை நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல் வில்லையை உயர்த்த வேண்டிய நிலைக்கு எண்ணை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டீசல், சமையல் எரிவாயு, மற்றும் மண்எண்ணை போன்ற பொருட்கள்களுக்கு அரசு மானியம் வழங்கி வருவது போல் பெட்ரோலுக்கும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயில் நிறுவனங்கள் ஒரு பேரல் கச்சா எண்ணை 121. 29 டாலர் அளவிற்கு வாங்குவதாகவும், ஆனால் பெட்ரோல் ஒரு பேரல் 109.03 டாலர் அளவிற்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த இழப்பீட்டை சமாளிப்பதற்க்கு அரசு மானியம் வழங்கினால் மட்டுமே இச்சூழலை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இல்லையெனில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8.04 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment