இலங்கையில் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளைக் குறித்து ஆராயச் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இலங்கையின் வட பகுதியில் இருந்து ராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் அவரிடம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ராஜபக்சே, நாடு முழுவதும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம். வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்றுவது சாத்தியமாகாது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? என்று இந்தியக் குழுவினரைப் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட இடங்களில்தான் படையினர் தளம் அமைத்துள்ளனர். அவர்கள் ஒன்றும் வெளிநாட்டு மண்ணில் நிறுத்தப்படவில்லை. இலங்கையில் தான் நிலைகொண்டுள்ளனர். போர் முடிந்த பின்னர் வடக்கு, கிழக்கில் முன்னர் ராணுவத்தினர் வசம் இருந்த பெருமளவு பகுதிகளை விடுவித்துள்ளோம் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment