முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட பயாஸ், ஜெயக்குமார் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி பெண்கள் ஜெயிலில் உள்ளார். இதில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் இருவரும் திடீரென சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்கள் மாற்றப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலூர் ஜெயிலில் சென்னையை கலக்கிய பிரபல ரவுடி ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவனிடமிருந்து ஜெயிலுக்குள் பலமுறை செல்போன்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
ஜெயிலுக்குள் இருந்து கொண்டே பல செயல்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றபட்டது. அந்த நேரத்தில் ஜெயக்குமார் ராபர்ட்பயாஸ்க்கும் கைதிகள் கும்பல் ஒன்றுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் இருவருடன் சென்னை ரவுடி மோதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இது சிறைதுறை அதிகாரிகள், காவலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளியில் இருந்து தூண்டுதலின் பேரில் ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் மீது தாக்குதல் நடத்தபடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இதில் வெளிநாட்டு சதி கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து சிறை துறை உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டதாக ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தூக்கு தண்டனை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரிடமிருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் இருவரையும் பிரிப்பதற்காக அவர்கள் புழலுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்ட போது இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேலூர் ஜெயிலில் இருக்க விருப்பம் இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது.
ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் இருவரும் பாதுகாப்பு காரணத்துக்காவே மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. எனவே ஜெயிலில் கைதிகளுடன் மோதல் ஏற்பட்டது ஊர்ஜிதமாகி உள்ளது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது:- சென்னை சிறைதுறை தலைமையகத்தில் இருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை புழலுக்கு மாற்ற உத்தரவு வந்தது. அதன்படி இருவரும் மாற்றபட்டுள்ளனர். வேறு எந்த காரணமும் இல்லை என்றனர்.
No comments:
Post a Comment