தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டு மனுக்கள் பெற்றுக்கொண்டார். பின்னர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
நான் இதுவரை சூலூர், ஈரோடு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு மக்களிடம் நேரில் சந்தித்து குறைகளை கேட்டேன். இதில் குடிநீர், மின்சாரம், பட்டா தொடர்பான பிரச்சினைகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க எனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் கூறியுள்ளேன். அவர்கள் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதியோர் உதவித்தொகை ஆளுங் கட்சியின்ருக்கு மட்டுமே கொடுப்பதாக பல முதியோர்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். சட்டசபைக்கு நான் வருவதில்லை என்று புகார் கூறுகிறார்கள்.
எதிர்கட்சியாக இருக்கும்போது ஜெயலலிதாவும், கருணாநிதியும் சட்ட மன்றத்துக்கு எத்தனை நாள் வந்தார்கள்? சட்ட மன்றத்துக்கு தினமும் வர வேண்டும் என்று சட்டம் ஏதும் உள்ளதா? 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டமன்றத்துக்கு வந்து கையெழுத்து போட்டால் போதும்.
நான் செல்ல வில்லை என்றாலும் எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் செல்கிறார்கள். சரி சட்டமன்றத்துக்கு சென்றாலும் அங்கு மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிப்பதில்லை. எனவே தான் மக்கள் மன்றத்திற்கு வந்து பேசுகிறேன்.
இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு அனுப்பியது ஒரு நாடகம். மக்கள் கேட்டதால் தமிழ் வருடப் பிறப்பை மீண்டும் சித்திரைக்கு மாற்றியதாக சொல்லும் ஜெயலலிதா மக்கள் கேட்டதால் தான் மின்கட்டணத்தை உயர்த்தினாரா? 2023 தொலைநோக்கு திட்டத்தால் எந்த பயனும் இல்லை. நதிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அ.தி.மு.க. அரசு தேவையில்லாதவற்றை எல்லாம் இலவசமாக வழங்குகிறது. நாட்டின் முது கெலும்பாக உள்ள விவசாயத்துக்கு எதுவும் செய்ய வில்லை. தே.மு. தி.க.வுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு நான் மட்டும் அல்ல நாடே வருத்தப்படுகிறது. அந்த அளவுக்கு பால் விலை, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன் பின்னர் போட்டியிடுவது பற்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் இதுவரை சூலூர், ஈரோடு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு மக்களிடம் நேரில் சந்தித்து குறைகளை கேட்டேன். இதில் குடிநீர், மின்சாரம், பட்டா தொடர்பான பிரச்சினைகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க எனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் கூறியுள்ளேன். அவர்கள் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதியோர் உதவித்தொகை ஆளுங் கட்சியின்ருக்கு மட்டுமே கொடுப்பதாக பல முதியோர்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். சட்டசபைக்கு நான் வருவதில்லை என்று புகார் கூறுகிறார்கள்.
எதிர்கட்சியாக இருக்கும்போது ஜெயலலிதாவும், கருணாநிதியும் சட்ட மன்றத்துக்கு எத்தனை நாள் வந்தார்கள்? சட்ட மன்றத்துக்கு தினமும் வர வேண்டும் என்று சட்டம் ஏதும் உள்ளதா? 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டமன்றத்துக்கு வந்து கையெழுத்து போட்டால் போதும்.
நான் செல்ல வில்லை என்றாலும் எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் செல்கிறார்கள். சரி சட்டமன்றத்துக்கு சென்றாலும் அங்கு மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிப்பதில்லை. எனவே தான் மக்கள் மன்றத்திற்கு வந்து பேசுகிறேன்.
இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு அனுப்பியது ஒரு நாடகம். மக்கள் கேட்டதால் தமிழ் வருடப் பிறப்பை மீண்டும் சித்திரைக்கு மாற்றியதாக சொல்லும் ஜெயலலிதா மக்கள் கேட்டதால் தான் மின்கட்டணத்தை உயர்த்தினாரா? 2023 தொலைநோக்கு திட்டத்தால் எந்த பயனும் இல்லை. நதிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அ.தி.மு.க. அரசு தேவையில்லாதவற்றை எல்லாம் இலவசமாக வழங்குகிறது. நாட்டின் முது கெலும்பாக உள்ள விவசாயத்துக்கு எதுவும் செய்ய வில்லை. தே.மு. தி.க.வுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு நான் மட்டும் அல்ல நாடே வருத்தப்படுகிறது. அந்த அளவுக்கு பால் விலை, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன் பின்னர் போட்டியிடுவது பற்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment