தென் சீனக் கடல் பகுதி குறித்த சர்ச்சை, கம்போடியா நாட்டில் நடைபெற்று முடிந்த ஏசியன் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதை தடை செய்ய சீனா பலவழிகளிலும் முயன்றது. ஆனால் அதையும் மீறி விவாதிக்கப்பட்டதையடுத்து சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தென் சீனா கடல் பகுதியில் இந்தியா 2 கடல் பகுதிகளை பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியில் எண்ணை வளம் இருக்கிறதா என்பதை அறியும் பொருட்டு, இந்தியாவின் ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம், வியட்நாம் எண்ணை நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஆய்வு மேற்கொண்டது.
அப்பகுதியில் எண்ணை வளம் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. எனினும் இந்த விவகாரத்தை தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன் சிங்குடன் சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ விவாதிக்கவில்லை.
வியட்நாம் கடல் பகுதிகளில் எண்ணை வளம் குறித்து ஆய்வை இந்தியா மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த மார்ச்சி்ல் இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது மீண்டும் ஒரு எச்சரிக்கையை சீனா விடுத்திருக்கிறது.
அதன்படி, தென் சீனக் கடல்பகுதியில் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டாம் என்று சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment