சிக்னல் கிடைத்ததும் போயஸ் கார்டனுக்கு செல்வதற்கு முன்பு, ராம நவமி நாளான ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயிலில் சசிகலா சென்று வழிபட்டார்.
கார்டனுக்கு சென்ற பின்னர் மீண்டும் அதே கோயிலுக்கு பங்குனி உத்திர நாளான ஏப்ரல் 5ஆம் தேதி சென்ற சசிகலா விசேஷ பூஜை செய்தார்.
அடுத்த நாளான புனித வெள்ளி (ஏப்.6) அன்று, முதல்வர் ஜெயலலிதாவுடன் கோட்டூர்புரம் செல்வ விநாயகர் கோவிலுக்கு அதிகாலை சசிகலா சென்று ரகசிய பூஜை ஒன்றை நடத்தியதாகவும், இருவரும் அங்கு சுமார் 30 நிமிடம் பிரார்த்தனை செய்ததாகவும் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
அதிமுக தலைவர்கள் வட்டாரத்திலும் இந்த செய்தி பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
டிசம்பர் 19ஆம் தேதி கார்டனில் இருந்து வெளியேறிய சசிகலா, ஏப்ரல் 2ஆம் தேதி அங்கு திரும்பினார். அதன் பிறகு ஜெ., சசிகலா இணைந்து முதல் முறையாக கோவிலுக்கு சென்றுள்ளனர் என்ற செய்தி பரவியதால், ஜெ. செல்லும் வெளியூர் பயணங்கள், ஆலய தரிசனங்களில் சசிகலா ஆப்செண்ட் ஆக மாட்டார் என்று உறுதியாகி உள்ளது என ர.ர..க்கள் கதிகலங்கி உள்ளனர்.
No comments:
Post a Comment