இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத அளவுக்கு போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அடுத்து மேற்கொள்ள வேண்டிய அமைதி நடவடிக்கைகள் குறித்தும் ஜெனீவா நகரில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கக் கூடாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே, தனது குழு மூலம் இந்திய அரசிடம் கெஞ்சினார்.
ஆனால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக, தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 24 ஓட்டுக்களும், எதிராக 15 வாக்குகளும் பதிவானதால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்தது.
இலங்கை அதிபர் ராஜபக்சே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேறிய தீர்மானத்தை ஏற்கமாட்டோம் என்று திமிராக சொன்னார். ஆனாலும் அவர் மனதில் பயம் இருப்பது தெரியவந்தது. முகமது கடாபி நிலை எனக்கு வராது. அந்த நிலை வருவதற்கு என் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் புலம்பியிருக்கிறார்.
ஐ.நா.வில் கொண்டு வந்த தீர்மானத்தில் வாக்களித்ததை ஜீரணிக்க முடியாத நிலையில் இருக்கும் ராஜபக்சே, இந்தியா மீது பழிவாங்கும் முயற்சியாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் கார்கள், கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள், பல்வேறு தொழிலுக்கு தேவைப்படும் உபகரணங்களுக்கான வரிவிதிப்பை 40 சதவீதம் வரை அதிகப்படுத்தியுள்ளார் என்று தகவல்கள் வெனியாகி உள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் பொருட்களின் விற்பனைகள் முற்றிலும் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தற்போது, இந்தியா இலங்கைக்கான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம் என்று திட்டமிட்ட ராஜபக்சே, அதற்கான ஆலோசனைகளில் அரசு சட்ட வல்லுநர்களுடன் ஈடுபட்டுள்ளார் என்றும் புதிய தகவல் கசிந்துள்ளது.
No comments:
Post a Comment