இந்திய ராணுவத்தின் சிறு படை பிரிவுகள் கடந்த ஜனவரி மாதம் 16, 17-ந் தேதிகளில் டெல்லி நோக்கி நகர்த்தப்பட்டன. மறுநாள் அந்த படைகள் டெல்லி புறநகரில் நிலை கொண்டீருந்தன. பிறகு அவை தங்கள் முகாமுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியாகும் என்று சமீபத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. பிரதமரின கவனத்துக்கு வராமலேயே டெல்லி அருகே ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.
நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியை பிரதமர் மன்மோகன்சிங் பொய்யானது என்று உடனடியாக மறுத்தார். அதுபோல ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியும் ''ராணுவ புரட்சி முயற்சி தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது'' என்றார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கும் இந்த செய்தியை ஆனித்தரமாக மறுத்தார். இதையடுத்து ராணுவ புரட்சி என்று தகவல் பரப்பியது யார் என்ற விசாரணை நடந்தது. தீவிர விசாரணையில், மத்திய மந்திரிசபையில் உள்ள மூத்த மந்திரி ஒருவர் இதன் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த மூத்த மத்திய மந்திரி தன் நெருங்கிய உறவினர் ஒருவர் மூலம் இந்த தகவலை பரப்பி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்குக்கு கடும் நெருக்கடி கொடுத்து பதவியில் இருந்து விலக செய்யவே அவர் இந்த வதந் தியை கிளப்பி விட்டுள்ளர். ராணுவ தளபதிக்கு எதிராக எல்லா கட்சித் தலைவர்களையும் ஓரணியில் திரட்டவும் அந்த மத்திய மந்திரி நினைத்திருந்தார். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ராணுவ புரட்சி தகவல் பொய்யானது என்று பிரதமர் கூறியதால் அந்த வதந்தி திசை மாறி போய் விட்டது. இதற்கிடையே ராணுவ தளபதியின் விசுவாசத்தை சந்தேகிக்கக் கூடாது என்று பா.ஜ.க.வும் வற்புறுத்தி வருவது அந்த மந்திரிக்கு ஆப்பு அசைத்த குரங்கு கதையாகிவிட்டது.
No comments:
Post a Comment