விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, August 25, 2011

    ரூ. 5000 கோடியை திமுக வாரியிறைத்தும் மக்கள் மசியவில்லை- ஜெயலலிதா

     சட்டசபைத் தேர்தலில் ரூ. 5000 கோடியை புழக்கத்தில் விட்டிருந்தது திமுக. ஆனால் அந்த 5000 கோடியைக் காட்டியும் மக்கள் மசியவில்லை. அவர்களுடைய பணபலத்திற்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருந்து நல்ல முடிவை எடுத்து அதிமுகவிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அப்படி மாற்றத்தைத் தந்த மக்கள் ஏற்றம் பெறும் வகையில் இந்த அரசு உழைக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    அதிமுக ஆட்சி 100 நாட்களைக் கடந்துள்ளதையடுத்து நேற்று சட்டசபையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வாழ்த்திப் பேசினர். இதற்குப் பதிலளித்து நன்றி கூறி முதல்வர் ஜெசயலலிதா பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைய பெற்ற அதிமுக தலைமையிலான அரசு தன் பணியில் 100 நாட்களை இன்றுடன் நிறைவு செய்கிறது. இதையொட்டி சட்டமன்ற கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தார்கள்.

    இங்கே பேசியவர்கள் பாராட்டு தெரிவித்தபோது அது வெறும் சம்பிரதாய பாராட்டு போல எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொருவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த பாராட்டுக்களை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை விட ஒருவித லேசான அச்ச உணர்வுதான் தோன்றியது.

    100 நாட்கள் முடிந்த பின்னணியில் பேசிய ஒவ்வொருவரும் குறை ஏதும் சொல்லாமல் முழுமனதோடு பாராட்டி இருக்கிறார்கள். இது தொடர்ந்து நீடித்திருக்க வேண்டுமே என்கிற அச்ச உணர்வும் இன்னும் வருகிற, பலப்பல 100 நாட்களுக்கும் ஓராண்டு, இரண்டாண்டு என ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறும் வகையிலும் இந்த 100 நாட்கள் பணிகளை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் இருக்க வேண்டுமே என்ற உணர்வுதான் எழுகிறது.

    தொடர்ந்து உறுப்பினர்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமே, அதுவொரு மிகப் பெரிய சவாலாக அமையுமே என்கிற உணர்வுதான் எனக்குள் எழுகிறது. ஆனாலும் உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களுடனும், ஆதரவுடனும் இதை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் எதை செய்தாலும் உள்ளத் சுத்தியோடு செய்வோம். மக்களை ஏமாற்றுகிற எண்ணம் எங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை.

    கடந்த திமுக ஆட்சி காலத்தில் எங்களுக்கு கேஸ் அடுப்பு வழங்கினார்கள். ஒரு சிலருக்கு வழங்கி விட்டு அதற்கான சிலிண்டர் தரவில்லை. விவசாயிகளுக்கு மின் இணைப்பு தந்தார்கள். ஆனால் மின்சாரம் தரவில்லை. அப்படி நாங்கள் மக்களை ஏமாற்றுகிற எதையும் செய்ய மாட்டோம். அத்தகைய எண்ணம் எங்களிடம் இல்øலை.உள்ள சுத்தியோடும், கர்ம சிரத்தையோடும் செய்வதுதான் எங்கள் ஆட்சியின் நிலை. இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்பொழுது ஒரு உண்மையை நான் உங்களுக்கு சொல்ல இருக்கிறேன். கடந்த திமுக ஆட்சியினர் முழுக்க முழுக்க மலை போல நம்பியது பண பலத்தைதான். ஆள் அதிகார பலத்தை விட அவர்கள் பணத்தைத்தான் நம்பினார்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர்கள் புழக்கத்தில் விட்ட பணம் ரூ. 5,000 கோடி ஆகும்.

    தேர்தல் பிரச்சாரம் நடந்த போது தலைமை தேர்தல் ஆணையம் மிக கடுமையான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக திமுகவினரிடமிருந்து ரூ.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான ஒருவர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தபோது எனக்கு வேண்டிய ஒருவரும் அங்கே இருந்திருக்கிறார்.

    அப்போது தேர்தல் கமிஷன் 50 கோடி ரூபாயை கைப்பற்றியிருக்கிறதே என்று அந்த நபரிடம் ஒருவர் கேட்க, அதற்கு கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான அவர் 50 கோடி ரூபாய் என்பது ஒரு பானை தண்ணீரை கொண்டு செல்லும் போது சிதறி விழுமே அந்த துளிதான் எங்களுக்கு அது ஒன்றும் பொருட்டு அல்ல. எங்கள் அண்ணன் (அஞ்சா நெஞ்சனாக இருந்து இன்று காணாமல் போனாரே அந்த அண்ணன்) ரூ. 5000 கோடியை தேர்தலுக்காக அள்ளி இறைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

    இந்த 5000 கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டு ஆசை காட்டியும் மக்கள் மசியவில்லை. அவர்களுடைய பணபலத்திற்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருந்து நல்ல முடிவை எடுத்துள்ளனர்.

    பணம் மட்டுமல்ல தங்கம், சேலை என எதை கொடுத்தாலும் அதை புறக்கணித்து விட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று உறுதியுடன் இருந்து சாதித்திருக்கிறார்கள். அதனால்தான் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் ஒரு ஆட்சியை திட்டங்களை தந்திருப்பதாக விளம்பரம் செய்துள்ளோம்.

    அந்த மாற்றத்தை தந்த மக்களுக்கு அதிமுக சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்களும் இந்த அரசுக்கு செய்ய வேண்டும் என்கிற மனம் உள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறைதான் அதற்கு தடையாக உள்ளது என்று கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

    இப்போதுள்ள என் நிலைமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஒரு தாய்க்கு 10 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த தாயாரிடம் அந்த வீட்டில் இருப்பது ஒரே தோசைதான். அது ஒரு குழந்தையின் பசியை போக்கக் கூட போதாது. அதனால் ஒரு குழந்தைக்கு ஒரு தோசையை கொடுத்து விட்டு ஒன்பது குழந்தைகளையும் பட்டினி போடலாமா என்று கருதிய தாய் அதனை துண்டு துண்டாக்கி 10 குழந்தைகளுக்கும் பகிர்ந்து தருவாள். அவள்தான் நல்ல தாய்.

    பசியை முழுமையாக போக்க முடியாவிட்டாலும் இருப்பதை பகிர்ந்து தர வேண்டும் என்கிற தாயின் நிலைமையில்தான் நான் இருக்கிறேன். தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்கும், இந்த அரசுக்கும் உள்ளது. பழைய திமுக ஆட்சியினர் மக்களை கடனாளியாக்கி விட்டு சென்றுள்ளனர். மத்திய அரசு எந்த உதவியும் செய்யாமல் பாராமுகமாக உள்ளது. அத்தனையையும் மீறி நாங்கள் சாதிப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    இந்த நேரத்தில் தமிழக மக்களை பார்த்து நான் சொல்ல விரும்புவது, "வருந்தாதே, ஏழை மனமே வருந்தாதே வருங்காலம் நல்ல காலம் அந்த நம்பிக்கையுடன் இருங்கள்'.விலையில்லாத அரிசி, ஏழைகளுக்கு மிக்சி, கிரைண்டர், பேன், ஆடுமாடுகள் வழங்குவதை பாராட்டி இங்கே பேசினார்கள்.

    என்னை பொறுத்தவரை எனக்குள்ள ஆசை என்பது எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வர வேண்டும் என்பதுதான். இனிமேல் தமிழக மக்களுக்கு இலவசம் தர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இனி எப்போதும் யாரிடமும் கைநீட்டி எதையும் பெறுகின்ற நிலை இருக்கக் கூடாது என்கிற நிலையை என் வாழ்நாளில் நான் காண வேண்டும் என்பதே என் ஆசை. அதுதான் என் லட்சியம்.உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும், உறுதுணையுடனும், மக்களின் ஆதரவோடும் என் லட்சியம் நிச்சயம் நிறைவேறும் என்றார் ஜெயலலிதா.




    Posted by விழியே பேசு... at 10:33 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ▼  August (478)
      • நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்ச...
      • மங்காத்தா தியேட்டர்களில் சோதனை?
      • விழுப்புரத்தில் மாஜி அமைச்சர் பொன்முடி கைது- ஆயிரக...
      • கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்த வழக்கு- 5 நிறு...
      • ரூ. 6 லட்சம் கொடுத்தால் ஆடலாம், குடிக்கலாம்-செக்ஸு...
      • தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் ...
      • விஸ்வரூபத்தில் அனுஷ்கா இல்லை தடைவிதித்த நாயகன் யார்?
      • மணிரத்னம்-அஜீத் சந்திப்பு புதுப்பட பேச்சு வார்த்தையா?
      • விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்க...
      • பாம்பும் கீரியுமாக இருந்த எடியூரப்பா-குமாரசாமி இடை...
      • ஐகோர்ட்டில் பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு விடை...
      • மங்காத்தா ரிலீஸ்.. அதிரடி வெற்றி!
      • தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்தூக்குத்தண்டனைக்கு எதிர்...
      • ஜெயராமுடன் கமல் இணையும் அன்புள்ள கமல்
      • கிரேசி- கமல் கூட்டணியில் புதிய படம்
      • உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கண...
      • இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதே...
      • வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ பு...
      • கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்
      • குடிபோதையில் கார் ஓட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின்...
      • பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து...
      • விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்...
      • மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் த...
      • ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்ததற்கான ஆதாரம் இல்லை...
      • செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ...
      • ஸ்ருதியின் எக்ஸ்ட்ரா செலவு ஆடிப்போகும் தயாரிப்பாளர...
      • ஒன்று வாங்கினால் ஒன்று வசந்தபாலன் வளைத்த அஞ்சலி
      • கார்த்திக் மகனோடு கமலின் கமலின் 2-வது வாரிசு அக்ஷர...
      • ராஜிவ் உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை குறைக்கலாம்...
      • ஆசிரியர் செக்ஸ் சில்மிஷம்: 5-ம் வகுப்பு மாணவி தீக்...
      • 9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியதாக 7ல் ஒரு அ...
      • இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன்...
      • பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட தடை விதித்த...
      • தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்...
      • பெண் மெய்க்காப்பாளர்களை பலாத்காரம் செய்த கடாபி, மக...
      • 'விஸ்வரூப'த்தில் ஏமி ஜாக்சன் !
      • தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
      • இன்று விசாரணை- தூக்கிலிட தடை விதிக்கப்படுமா?
      • வேலாயுதம் பாடல்கள் டவுன்லோட்
      • மணி இயக்கத்தில் அஜீத் ?!
      • லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ராவின் கண...
      • ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு ...
      • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: வேளாங்கண்ணி ஆர...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆப...
      • திருமண நிச்சயதார்த்தம்... வருவாரா ரஜினி?
      • ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
      • ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் மூவரையும் காப்பாற்...
      • சோனியாவுக்கு முருகன் மகள் கண்ணீர்க் கடிதம்
      • உடல், உயிர் மட்டுமே நினைவுக்கு வந்தது: பணம் புகழ் ...
      • திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான்...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்...
      • மதுரையில் விஜய்: வரவேற்க அனுமதி மறுப்பு: இவ்வளவு ப...
      • விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்...
      • விஜயின் வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா போட்டோ, வீ...
      • நான் எடுத்த முடிவு முடிவுதான்: மதுரையில் நடிகர் வி...
      • எந்த தெய்வமும் கண்ணை குத்தாது: விஜயகாந்த்
      • நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயி...
      • நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வை...
      • தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! ப...
      • கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கி...
      • என் தந்தையைக் காக்க தமிழகம் வந்து போராட விரும்புகி...
      • இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!
      • அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்திருப்பது தோல்விதான்?
      • ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்...
      • மாறிவிட்டது தமிழ் புத்தாண்டு : மாறுமா தமிழ் ஆண்டுகள்?
      • அடுக்கடுக்கான வழக்குகள்: தனிமையில் தி.மு.க.
      • முதலில் யாருக்கு தூக்கு?
      • அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றி :...
      • உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்காதீங்க! : ஹசா...
      • மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன் : நடிகை வனிதா
      • இலவச லேப்டாப்புகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்...
      • சிறை to கோர்ட் செல்லும் வழியில் பொட்டுசுரேஷ் வைத்...
      • வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!
      • ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வ...
      • ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை
      • பேரறிவாளன்- சாந்தன்- முருகனின் கருணை மனு மீது 11 ஆ...
      • ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
      • சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்...
      • இந்தியா முழுவதும் தூக்கு மேடை வரை சென்று 72 பேர் உ...
      • வெளிஉலகை பார்க்க ஆசையாக உள்ளது: முதல்-அமைச்சரின் க...
      • நாளை மதுரையில் விழா: ஏழை பெண்களுக்கு விஜய் பசு தானம்
      • ஹோமோ செக்ஸுக்காக சிறுவன் கொலை: கல்லூரி மாணவர் கைது
      • உடைகிறது 'டீம் அன்னா'... சந்தோஷ் ஹெக்டே, அக்னிவேஷ்...
      • 100 நாட்களில் கொலைகள் 86, கொள்ளைகள் 110, வழிப்பறி ...
      • புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimeste...
      • தூக்குக்கு நாள் குறிப்பு- முருகனை சந்திக்க அனுமதிக...
      • எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை ச...
      • அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு ...
      • மீண்டும் பழைய கணவருடன்... வனிதா விஜயகுமாரின் மாற்றம்
      • சென்னை மேயராகிறாரா நடிகை குஷ்பு?
      • நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற...
      • அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை
      • கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!
      • மங்காத்தா பிரச்சினை: 'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு ...
      • அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு...: நடிகர் விவேக்
      • "வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்': அழகிரி விரக்தி
      • டி.ஆர்.பாலு ஆவேச பேச்சு: அ.தி.மு.க. ஆதரவு
      • விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.