விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, August 10, 2011

    இலங்கையின் அச்சம் கோத்தபய பதில்களில் தெரிகிறது! - சீமான்

    ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய ராஜபக்சே அளித்த பதில்கள், ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான அவருடைய அறியாமையையும், பன்னாட்டு அழுத்தத்தால் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும்தான் காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
    ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி எடுத்த சிறப்பு நேர்காணலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது.

    “தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதிலிருந்து மீனவர் பிரச்சனை தமிழர்களுக்குத் தெரியாது என்று நினைத்துப் பேசியுள்ளார்.

    மீனவர் பிரச்சினை - உண்மை என்ன?
    தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிக்கிறார்கள், அது இலங்கை தமிழ் மீனவர்களைப் பாதிக்கிறது என்கிறார். இதில் உண்மை என்னவெனில், இந்திய கடற்பகுதிக்கு வந்து மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்ட 70க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 

    இவர்கள் யாவரும் சிங்கள மீனவர்களே, ஈழத் தமிழ் மீனவர்கள் அல்லர். அது மட்டுமின்றி, ஏதோ தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதால் ஈழத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது போல் கோத்தபய பேசியுள்ளார். 

    ஆனால், ஈழத் தமிழ் மீனவர்கள் ஆழ் கடலிற்கு வந்து மீன் பிடிக்க முடியாத வகையில் அவர்களை குறைந்த தூரத்திற்கு மட்டுமே கடலில் சென்று மீன் பிடிக்க சிறிலங்க அரசு அனுமதிக்கிறது. அவர்கள் நீண்ட தூரம் சென்று மீன் பிடிக்க முடியாத அளவிற்கே டீசல் வழங்குகிறது. இந்த உண்மையை சாதுரியமாக மறைத்து விட்டு, எல்லைத் தாண்டி மீன் பிடிப்பது பற்றிப் பேசுகிறார். 

    ஈழத்து மீனவர்களும், இந்திய மீனவர்களும் எவ்வித தடையுமின்றி இராமேஸ்வரத்தி்ற்கும், மன்னாருக்கும், வடக்கே யாழ்ப்பாணம் வரையிலும் தொன்றுதொட்டு மீன் பிடித்து வருகிறார்கள் என்பது கோத்தபயவிற்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்களுக்கும் அரசுக்கும் தெரியும்.

    “தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது. அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் சத்தமிடுவது எந்தப் பயனையும் தராது. அந்த மக்கள் குடியேற உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம் பற்றிப் பேசுவது, பன்னாட்டு விசாரணை கோருவது என்பதெல்லாம் வீணானது” என்று கோத்தபய கூறியுள்ளார். 

    முதல்வரின் தீர்மானத்தை சரியாக படிக்காத கோத்தபய
    இவர் தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை சரியாக படிக்கவில்லை என்பது தெரிகிறது. போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னமும் தமிழர்கள் முகாம்களிலேயே உள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உதவிகளையும் இலங்கை அரசு செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வருகிறது. எனவே அந்நாட்டு அரசுக்கு எதிரான, மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது. இத்தீர்மானம் குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் கூட, ‘இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவரவே பொருளாதாரத் தடை அவசியமாகிறது’ என்று கூறினார்.

    அதுமட்டுமல்ல, போர் முடிந்த பிறகும் அங்கு தமிழர்கள் எப்படிப்பட்ட அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் தமிழக முதல்வர் நன்றாகவே அறிந்துள்ளார். அதனால்தான், அங்கு அமைதி திரும்பிவிட்டது என்று பறைசாற்ற விரும்பும் இலங்கை அரசு சூழ்ச்சியுடன் நிறைவேற்ற முற்பட்ட கொழும்பு, தூத்துக்குடி கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று தனது கட்சியின் சார்பாக தீ்ர்மானம் நிறைவேற்றினார்.

    சட்டமன்ற தீர்மானத்தின் விளைவுகள்
    தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை என்று கோத்தபய கூறுகிறார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் விளைவே இலங்கைக்கு எதிராக நிதித் தடை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற அயலுறவுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் ஆகும். 

    அதுமட்டுமின்றி, இலங்கையில் நடந்த போர் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறினால், ஐ.நா.பாதுகாப்புப் பேரவையிலயே இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை தொடங்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரும் நிலை ஏற்படும்.

    இலங்கையின் பாதுகாப்புச் செயலராக இருந்தாலும், அமெரிக்காவின் பிரஜையாகவும் உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு இதுவெல்லாம் நன்றாகத் தெரியும், இருந்தாலும் சாதுரியமாக மறைக்கப் பார்க்கிறார்.

    ஏன் ஓடிவந்தார் காரியவம்சம்?
    தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தமிழக முதல்வரை சந்தித்ததும் ஏற்படுத்திய பீதியினால்தான் டெல்லியில் இருந்து இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் ஓடோடி வந்து தமிழக முதல்வரைச் சந்தித்தார் என்பது கோத்தபயவிற்கும் தெரியும். 

    எனவே இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை மறைக்க கோத்தபய முயற்சித்துள்ளார். அவர் இழுத்து இழுத்து, வார்த்தைகளைத் தேடி பதில் கூறியதில் இருந்தே அந்த அச்சம் வெளிப்படுகிறது. அந்த அச்சம் நிச்சயம் நிஜமாகும். விரைவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை தொடங்கும், அதில் ஈழத் தமிழர்களை ராஜபக்ச கும்பல் இனப்படுகொலை செய்தது உறுதியாகும்.

    இதில் தமிழக மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவும் தங்கள் அரசுக்கு ஆதரவாக இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும் நிற்கின்றன என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். 

    ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது மத்திய காங்கிரஸ் அரசு சாதித்துவரும் மெளனத்தின் பொருளை கோத்தபய தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை அரசுக்கு எதிரான பன்னாட்டு விசாரணையில் மத்திய காங்கிரஸ் அரசின் மற்றொரு முகமும் வெளியாகும் போது உண்மை உலகிற்குத் தெரியவரும். 

    -இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




    Posted by விழியே பேசு... at 2:39 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ▼  August (478)
      • நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்ச...
      • மங்காத்தா தியேட்டர்களில் சோதனை?
      • விழுப்புரத்தில் மாஜி அமைச்சர் பொன்முடி கைது- ஆயிரக...
      • கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்த வழக்கு- 5 நிறு...
      • ரூ. 6 லட்சம் கொடுத்தால் ஆடலாம், குடிக்கலாம்-செக்ஸு...
      • தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் ...
      • விஸ்வரூபத்தில் அனுஷ்கா இல்லை தடைவிதித்த நாயகன் யார்?
      • மணிரத்னம்-அஜீத் சந்திப்பு புதுப்பட பேச்சு வார்த்தையா?
      • விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்க...
      • பாம்பும் கீரியுமாக இருந்த எடியூரப்பா-குமாரசாமி இடை...
      • ஐகோர்ட்டில் பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு விடை...
      • மங்காத்தா ரிலீஸ்.. அதிரடி வெற்றி!
      • தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்தூக்குத்தண்டனைக்கு எதிர்...
      • ஜெயராமுடன் கமல் இணையும் அன்புள்ள கமல்
      • கிரேசி- கமல் கூட்டணியில் புதிய படம்
      • உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கண...
      • இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதே...
      • வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ பு...
      • கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்
      • குடிபோதையில் கார் ஓட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின்...
      • பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து...
      • விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்...
      • மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் த...
      • ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்ததற்கான ஆதாரம் இல்லை...
      • செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ...
      • ஸ்ருதியின் எக்ஸ்ட்ரா செலவு ஆடிப்போகும் தயாரிப்பாளர...
      • ஒன்று வாங்கினால் ஒன்று வசந்தபாலன் வளைத்த அஞ்சலி
      • கார்த்திக் மகனோடு கமலின் கமலின் 2-வது வாரிசு அக்ஷர...
      • ராஜிவ் உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை குறைக்கலாம்...
      • ஆசிரியர் செக்ஸ் சில்மிஷம்: 5-ம் வகுப்பு மாணவி தீக்...
      • 9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியதாக 7ல் ஒரு அ...
      • இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன்...
      • பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட தடை விதித்த...
      • தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்...
      • பெண் மெய்க்காப்பாளர்களை பலாத்காரம் செய்த கடாபி, மக...
      • 'விஸ்வரூப'த்தில் ஏமி ஜாக்சன் !
      • தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
      • இன்று விசாரணை- தூக்கிலிட தடை விதிக்கப்படுமா?
      • வேலாயுதம் பாடல்கள் டவுன்லோட்
      • மணி இயக்கத்தில் அஜீத் ?!
      • லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ராவின் கண...
      • ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு ...
      • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: வேளாங்கண்ணி ஆர...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆப...
      • திருமண நிச்சயதார்த்தம்... வருவாரா ரஜினி?
      • ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
      • ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் மூவரையும் காப்பாற்...
      • சோனியாவுக்கு முருகன் மகள் கண்ணீர்க் கடிதம்
      • உடல், உயிர் மட்டுமே நினைவுக்கு வந்தது: பணம் புகழ் ...
      • திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான்...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்...
      • மதுரையில் விஜய்: வரவேற்க அனுமதி மறுப்பு: இவ்வளவு ப...
      • விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்...
      • விஜயின் வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா போட்டோ, வீ...
      • நான் எடுத்த முடிவு முடிவுதான்: மதுரையில் நடிகர் வி...
      • எந்த தெய்வமும் கண்ணை குத்தாது: விஜயகாந்த்
      • நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயி...
      • நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வை...
      • தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! ப...
      • கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கி...
      • என் தந்தையைக் காக்க தமிழகம் வந்து போராட விரும்புகி...
      • இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!
      • அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்திருப்பது தோல்விதான்?
      • ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்...
      • மாறிவிட்டது தமிழ் புத்தாண்டு : மாறுமா தமிழ் ஆண்டுகள்?
      • அடுக்கடுக்கான வழக்குகள்: தனிமையில் தி.மு.க.
      • முதலில் யாருக்கு தூக்கு?
      • அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றி :...
      • உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்காதீங்க! : ஹசா...
      • மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன் : நடிகை வனிதா
      • இலவச லேப்டாப்புகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்...
      • சிறை to கோர்ட் செல்லும் வழியில் பொட்டுசுரேஷ் வைத்...
      • வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!
      • ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வ...
      • ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை
      • பேரறிவாளன்- சாந்தன்- முருகனின் கருணை மனு மீது 11 ஆ...
      • ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
      • சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்...
      • இந்தியா முழுவதும் தூக்கு மேடை வரை சென்று 72 பேர் உ...
      • வெளிஉலகை பார்க்க ஆசையாக உள்ளது: முதல்-அமைச்சரின் க...
      • நாளை மதுரையில் விழா: ஏழை பெண்களுக்கு விஜய் பசு தானம்
      • ஹோமோ செக்ஸுக்காக சிறுவன் கொலை: கல்லூரி மாணவர் கைது
      • உடைகிறது 'டீம் அன்னா'... சந்தோஷ் ஹெக்டே, அக்னிவேஷ்...
      • 100 நாட்களில் கொலைகள் 86, கொள்ளைகள் 110, வழிப்பறி ...
      • புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimeste...
      • தூக்குக்கு நாள் குறிப்பு- முருகனை சந்திக்க அனுமதிக...
      • எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை ச...
      • அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு ...
      • மீண்டும் பழைய கணவருடன்... வனிதா விஜயகுமாரின் மாற்றம்
      • சென்னை மேயராகிறாரா நடிகை குஷ்பு?
      • நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற...
      • அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை
      • கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!
      • மங்காத்தா பிரச்சினை: 'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு ...
      • அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு...: நடிகர் விவேக்
      • "வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்': அழகிரி விரக்தி
      • டி.ஆர்.பாலு ஆவேச பேச்சு: அ.தி.மு.க. ஆதரவு
      • விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.