சரத்குமாரின் மீடியா வாய்ஸ் இதழில் ஒரு பேட்டியளித்திருக்கிறார் டைரக்டர் சேரன். அது வெளியான நாளில் இருந்தே அடுப்பை மூட்டி அதன்மேல் அமர்ந்த கதையாகிவிட்டது அவரது நிலைமை. நாலாபுறத்திலிருந்தும் வீசப்படும் கோபக்கணைகளால் சற்றே தடுமாறிப் போயிருக்கிறாராம் சேரன்.
இலங்கை பிரச்சனை பற்றி எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தவர், சீமானுடைய அணுகுமுறை தாதாவை போல இருக்கிறது. அவர் முதலில் இங்கிருக்கும் தமிழர்களின் நலனை கவனிக்கட்டும். அப்புறம் பேசலாம் இலங்கை தமிழர் நலன் குறித்து என்று கூறியிருந்தார். பொறுப்பார்களா சீமானின் தம்பிகள்?
தினந்தோறும் சேரனுக்கு போன் செய்து தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்களாம். அதிர்ந்து போன சேரன், சீமானை தொடர்பு கொண்டு அவரை சந்திக்க நேரம் கேட்க, உன்னை சந்திக்க விரும்பல. போனை வை என்று கூறிவிட்டாராம் அவர். தற்போது சேரனுக்கு சொல்லப்பட்டிருக்கும் அட்வைஸ், பிரஸ்சை கூட்டி நான் அப்படி சொல்லவே இல்லை என்று பேட்டி கொடுங்க. அப்புறம் பேசலாம் சமாதானத்தை பற்றி என்பதுதான்.
நல்ல படைப்பாளி, நாக்கு மட்டும் கோமாளி...

No comments:
Post a Comment