விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, August 13, 2011

    மத்திய அரசின் முடிவு இதயத்தை வாள் கொண்டு பிளக்கிறது! - வைகோ

     ராஜீவ் கொலையாளிகள் என்ற பெயரில் மூன்று தமிழ் இளைஞர்களின் உயிரை முடிக்க, அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை இந்திய அரசு உறுதிப்படுத்தியது என்ற செய்தி, இதயத்தை வாள் கொண்டு பிளக்கிறது, என வைகோ கூறியுள்ளார்.

    மேலும் இந்த மூன்று பேரின் தூக்கு தண்டனையைக் குறைக்க வலியுறுத்துமாறு முதல்வருக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
    "இருபது ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடி வதங்கி, வாழ்வின் அற்புதமான வாலிபப் பருவத்தைத் துன்ப இருளில் பறிகொடுத்து விட்ட, மூன்று தமிழ் இளைஞர்களின் உயிரை முடிக்க, அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை இந்திய அரசு உறுதிப்படுத்தியது என்ற செய்தி, இதயத்தை வாள் கொண்டு பிளக்கிறது.

    ஜனநாயக உரிமைகளை அடியோடு பறித்துக் கொண்ட எதேச்சாதிகாரச் சட்டமான, தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, காவல் துறையின் சித்ரவதை மூலமாக, அச்சுறுத்தலால் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், தடா சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டு இருந்த 41 பேரில், 26 பேருக்குத் தூக்குத் தண்டனை என்று தீர்ப்பு அளித்தது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் பெங்களூரில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன் எனும் இம்மூவரும் 'திருபெரும்புதூர் கொலைச் சம்பவத்தில், குற்றவாளிகள் அல்லர் என்பதுதான் உண்மை' ஆகும்.

    எனவே, நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், பழ. நெடுமாறன் உயிர்காப்பு அமைப்பின் தலைவராக, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் நடராசன் மூலமாக வழக்கை நடத்த ஏற்பாடு செய்தார்.

    1999 மே மாதம், உச்சநீதிமன்றம், 19 பேரை விடுதலை செய்தது; மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது.

    அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு தள்ளுபடி செய்தது.

    தமிழக ஆளுநர் பாத்திமா பீவி அவர்களிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர், தமிழக அரசின் கருத்தைப் பெறாமலேயே, தாமாகவே கருணை மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.

    'அரசாங்கத்தின் கருத்தைத்தான் ஆளுநர் பிரதிபலிக்க முடியுமே தவிர, தாமாக முடிவு எடுக்க சட்டத்தில் இடம் இல்லை' என்று, உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் தொடுத்த வழக்கில், வழக்கறிஞர் சந்துரு வாதாடினார்.

    'ஆளுநர் தாமாக முடிவு எடுக்க முடியாது' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதன் பின்னர், நளினியின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் நாராயணனிடம் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது.

    2001 ஆம் ஆண்டு, நான்கு பேரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கும், அவர்களின் கருணை மனுவை ஏற்க வேண்டியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்று, நானும், நெடுமாறனும், பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி ஆகியோரை நேரில் சந்தித்து, முறையீட்டுக் கடிதங்கள் கொடுத்தோம்.

    உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், ‘உலகில் 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது; பேரறிவாளனின் துன்ப நிலையைச் சுட்டிக்காட்டி, மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் டாக்டர் மன்மோகன்சிங் அரசின், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், நளினிக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக, குடியரசுத் தலைவரால் குறைக்கப்பட்டது.

    மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள பேரறிவாளன், இரண்டு பேட்டரி செல்கள் கடையில் வாங்கிக் கொடுத்தார், என்பதுதான் குற்றச்சாட்டு ஆகும். சதியிலும், குற்றத்திலும், அவருக்குப் பங்கு இருப்பதாகச் ஜோடிக்கப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்டு இருக்கிறார். 

    2011 ஆகஸ்ட் 2 ஆம் நாள், டாக்டர் மன்மோகன் சிங்கை நானும், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களும் சந்தித்து, ‘குற்றம் புரியாமலேயே, 19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் இருபது ஆண்டு இளமைக் காலம், சிறை எனும் நரகத்தில் அழிக்கப்பட்டு விட்டதால், கருணை உள்ளத்தோடு, மனிதாபிமானத்தோடு, மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் கடிதத்தை நேரில் சந்தித்துக் கொடுத்தோம்.

    ‘உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைப்பதாக’ பிரதமர் கூறினார். அன்று மாலையிலேயே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைச் சந்தித்து, மரண தண்டனையை ரத்துச் செய்வதற்கான கோரிக்கை மனுவைக் கொடுத்ததோடு, பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் மரண தண்டனையையும் மனிதாபிமானத்தோடு ரத்து செய்ய வேண்டும் என்று அவரிடத்தில் கேட்டுக் கொண்டோம். உள்துறை அமைச்சர் எதுவும் சொல்லவில்லை. 

    எவ்விதத்திலும், மரணக் கொட்டடியில் இருந்து மூவரையும் மீட்டு விட முடியும் என்ற எனது நம்பிக்கையில் இடி விழுந்து விட்டது.

    மரண தண்டனையை உறுதி செய்து உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையின் பேரில், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவருக்கும் தூக்குத் தண்டனையைக் குடியரசுத் தலைவர் உறுதி செய்து விட்டதாக, ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்து, நெஞ்சம் துடிதுடித்துப் போன நான், உள்துறை அமைச்சரைச் சந்திக்க எவ்வளவோ முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

    ஜனநாயக விரோத தடா சட்டத்தின்கீழ், போலீஸ் சித்திரவதை மூலம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதியின்பாற்பட்டதா? என்பது ஒரு கேள்வி.

    மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில், ஒருவருக்கு தண்டனையை ரத்துச் செய்துவிட்டு, மற்ற மூவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு எடுப்பது நியாயம்தானா?

    இந்தியாவில் கடைசியாக, 2004 ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அர்ஜூன் சட்டர்ஜி என்பவர், ஒரு சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் இதுவரை, எவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

    1995 க்குப் பிறகு, கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒருவரும் தூக்கில் இடப்படவில்லை. இந்தப் பின்னணியில், பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும், விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனையை இரத்துச் செய்வதற்கு, இன்றைய நிலையில் கூட மத்திய அரசால் முடியும். கருணை மனுவை நிராகரித்து, ஒருவருக்குக் குடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனையை உறுதி செய்தாலும்கூட, அதற்குப் பின்னரும், மத்திய அரசு, அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்து, ரத்து செய்வதற்கு அதிகாரம் இருக்கின்றது. இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன.

    இந்த மூன்று இளம் தமிழர்களின் உயிரைப் பாதுகாக்க, அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கின்ற தூக்குத்தண்டனையை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை, கருணை உள்ளதோடு மேற்கொள்ள வேண்டுமென, தமிழக முதல்வரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.




    Posted by விழியே பேசு... at 6:35 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ▼  August (478)
      • நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்ச...
      • மங்காத்தா தியேட்டர்களில் சோதனை?
      • விழுப்புரத்தில் மாஜி அமைச்சர் பொன்முடி கைது- ஆயிரக...
      • கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்த வழக்கு- 5 நிறு...
      • ரூ. 6 லட்சம் கொடுத்தால் ஆடலாம், குடிக்கலாம்-செக்ஸு...
      • தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் ...
      • விஸ்வரூபத்தில் அனுஷ்கா இல்லை தடைவிதித்த நாயகன் யார்?
      • மணிரத்னம்-அஜீத் சந்திப்பு புதுப்பட பேச்சு வார்த்தையா?
      • விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்க...
      • பாம்பும் கீரியுமாக இருந்த எடியூரப்பா-குமாரசாமி இடை...
      • ஐகோர்ட்டில் பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு விடை...
      • மங்காத்தா ரிலீஸ்.. அதிரடி வெற்றி!
      • தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்தூக்குத்தண்டனைக்கு எதிர்...
      • ஜெயராமுடன் கமல் இணையும் அன்புள்ள கமல்
      • கிரேசி- கமல் கூட்டணியில் புதிய படம்
      • உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கண...
      • இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதே...
      • வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ பு...
      • கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்
      • குடிபோதையில் கார் ஓட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின்...
      • பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து...
      • விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்...
      • மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் த...
      • ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்ததற்கான ஆதாரம் இல்லை...
      • செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ...
      • ஸ்ருதியின் எக்ஸ்ட்ரா செலவு ஆடிப்போகும் தயாரிப்பாளர...
      • ஒன்று வாங்கினால் ஒன்று வசந்தபாலன் வளைத்த அஞ்சலி
      • கார்த்திக் மகனோடு கமலின் கமலின் 2-வது வாரிசு அக்ஷர...
      • ராஜிவ் உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை குறைக்கலாம்...
      • ஆசிரியர் செக்ஸ் சில்மிஷம்: 5-ம் வகுப்பு மாணவி தீக்...
      • 9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியதாக 7ல் ஒரு அ...
      • இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன்...
      • பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட தடை விதித்த...
      • தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்...
      • பெண் மெய்க்காப்பாளர்களை பலாத்காரம் செய்த கடாபி, மக...
      • 'விஸ்வரூப'த்தில் ஏமி ஜாக்சன் !
      • தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
      • இன்று விசாரணை- தூக்கிலிட தடை விதிக்கப்படுமா?
      • வேலாயுதம் பாடல்கள் டவுன்லோட்
      • மணி இயக்கத்தில் அஜீத் ?!
      • லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ராவின் கண...
      • ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு ...
      • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: வேளாங்கண்ணி ஆர...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆப...
      • திருமண நிச்சயதார்த்தம்... வருவாரா ரஜினி?
      • ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
      • ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் மூவரையும் காப்பாற்...
      • சோனியாவுக்கு முருகன் மகள் கண்ணீர்க் கடிதம்
      • உடல், உயிர் மட்டுமே நினைவுக்கு வந்தது: பணம் புகழ் ...
      • திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான்...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்...
      • மதுரையில் விஜய்: வரவேற்க அனுமதி மறுப்பு: இவ்வளவு ப...
      • விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்...
      • விஜயின் வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா போட்டோ, வீ...
      • நான் எடுத்த முடிவு முடிவுதான்: மதுரையில் நடிகர் வி...
      • எந்த தெய்வமும் கண்ணை குத்தாது: விஜயகாந்த்
      • நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயி...
      • நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வை...
      • தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! ப...
      • கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கி...
      • என் தந்தையைக் காக்க தமிழகம் வந்து போராட விரும்புகி...
      • இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!
      • அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்திருப்பது தோல்விதான்?
      • ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்...
      • மாறிவிட்டது தமிழ் புத்தாண்டு : மாறுமா தமிழ் ஆண்டுகள்?
      • அடுக்கடுக்கான வழக்குகள்: தனிமையில் தி.மு.க.
      • முதலில் யாருக்கு தூக்கு?
      • அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றி :...
      • உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்காதீங்க! : ஹசா...
      • மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன் : நடிகை வனிதா
      • இலவச லேப்டாப்புகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்...
      • சிறை to கோர்ட் செல்லும் வழியில் பொட்டுசுரேஷ் வைத்...
      • வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!
      • ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வ...
      • ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை
      • பேரறிவாளன்- சாந்தன்- முருகனின் கருணை மனு மீது 11 ஆ...
      • ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
      • சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்...
      • இந்தியா முழுவதும் தூக்கு மேடை வரை சென்று 72 பேர் உ...
      • வெளிஉலகை பார்க்க ஆசையாக உள்ளது: முதல்-அமைச்சரின் க...
      • நாளை மதுரையில் விழா: ஏழை பெண்களுக்கு விஜய் பசு தானம்
      • ஹோமோ செக்ஸுக்காக சிறுவன் கொலை: கல்லூரி மாணவர் கைது
      • உடைகிறது 'டீம் அன்னா'... சந்தோஷ் ஹெக்டே, அக்னிவேஷ்...
      • 100 நாட்களில் கொலைகள் 86, கொள்ளைகள் 110, வழிப்பறி ...
      • புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimeste...
      • தூக்குக்கு நாள் குறிப்பு- முருகனை சந்திக்க அனுமதிக...
      • எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை ச...
      • அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு ...
      • மீண்டும் பழைய கணவருடன்... வனிதா விஜயகுமாரின் மாற்றம்
      • சென்னை மேயராகிறாரா நடிகை குஷ்பு?
      • நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற...
      • அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை
      • கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!
      • மங்காத்தா பிரச்சினை: 'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு ...
      • அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு...: நடிகர் விவேக்
      • "வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்': அழகிரி விரக்தி
      • டி.ஆர்.பாலு ஆவேச பேச்சு: அ.தி.மு.க. ஆதரவு
      • விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.