விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, January 24, 2012

    எவ்வளவு தான் அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் தமிழன்! கண்டுகொள்ளாத மத்தியரசு


    இப்படித்தான் தாக்குவது என்ற வரைமுறையே இல்லாமல் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறது இலங்கைக் கடற்படை. மேலும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து கொண்டு தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் தமிழக மீனவர்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது தமிழக மீனவர்களை குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

    அத்தனை பேரும் ஈழத் தமிழர்களின் அவலம், தவிப்பு குறித்து நிறையப் பேசி விட்டார்கள். ஆனால் தமிழகத்தில், ராமேஸ்வரம் பகுதியிலும், நாகப்பட்டினம் பகுதியிலும் வாழ்ந்து வரும் தமிழர்களின், குறிப்பாக மீனவர்களின் பரிதாப நிலை குறித்து அக்கறை காட்ட யாருமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட தினசரி அடிபட்டு சாகும் நிலையில் உள்ளனர் இந்த மீனவர்கள். இவர்களுக்காக உரத்த குரல் கொடுக்க ஒருவரும் இல்லை என்பதே நிதர்சனம். ஈழத் தமிழர்களுக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். தமிழகத்திலோ போராட்டங்கள் பல வெடித்தன. ஆனால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கோ, மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒரு போராட்டம் கூட நடந்ததில்லை.

    யாராவது ஒரு மீனவர் கொல்லப்பட்டாலோ அல்லது தாக்குதல் நடந்தாலோ அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து கடும் கண்டனம் தெரிவிக்கின்றன, முதல்வராக இருப்பவர் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவார். நிவாரணத் தொகை கொடுப்பார்கள், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிடுவார்கள். அத்தோடு அந்தப் பிரச்சினை முடிந்து போய் விடும்.

    ஆனால் மறு நாளே மீண்டும் இலங்கைக் கடற்படைக் காடையர்கள் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவார்கள், பிடித்துச் செல்வார்கள். இது தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை போல முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான் என்று மீனவர்கள் உறுபதிபடக் கூறுகிறார்கள். நாங்கள் வாழ வேண்டுமானால் கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்று அவர்கள் பரிதாபமாக கூறுகிறார்கள்.

    சமீப காலமாக இலங்கைக் கடற்படையினர் கற்களை வீசியும் கேவலமாக தாக்கி வருகிறார்கள். கச்சத்தீவுதான் என்றில்லாமல் சர்வதேச எல்லைப் பகுதிக்கு அருகில் மீன்பிடித்தாலும் கூட வந்து தாக்குகிறார்கள். இதை இதுவரை ஒருபோதும் இந்தியக் கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ தட்டிக் கேட்டதில்லை, தடுத்ததில்லை. மாறாக, இவர்கள் ஏன் போய் மீன் பிடிக்கிறார்கள் என்று அடிப்படையே இல்லாமல் பேசுகிறார்கள்.

    தமிழக மீனவர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பெரும் கேள்விக்குறியில் தொக்கி நிற்கின்றன. ஆதரவுக்கு யாரும் இல்லாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எத்தனை முறைதான் நாங்களும் ஸ்டிரைக் செய்வது, போராடுவது என்று விரக்தியுடன் கேட்கிறார்கள் இந்த மீனவர்கள்.

    கச்சத்தீவு பகுதி பாரம்பரியமாக தமிழகத்தின் பகுதியாகும், தமிழர்களின் பூமியாகும். இங்கு மீன்பிடிக்காதே என்று கூறினால் எப்படி அதை ஏற்க முடியும் என்பது மீனவர்களின் கேள்வி. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது வரலாற்றுத் தவறு என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இந்தத் தவறை செய்தவர்கள் இப்போதாவது அதற்கு வருந்த வேண்டும், மீண்டும கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும், எங்களை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்று மீனவர்கள் உரத்த குரலில் கோருகின்றனர்.

    சமீப காலமாக தாக்குதல்கள் தொடர்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தாதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறது சிங்களக் கடற்படை. சுட்டால்தானே பிரச்சினை, எனவே அதைத் தவிர வேறு எது செய்தாலும் தவறில்லை என்ற எண்ணத்திற்கு இலங்கைக் கடற்படை வந்து விட்டது போலத் தெரிகிறது.

    கல்வீசித் தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, மீன்பிடி வலைகலை அறுத்தெறிவது, அடிப்பது, சிறை பிடிப்பது என அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. பிடித்த மீன்களையும் கூட திருடிக் கொண்டு போய் விடுகிறது சிங்களக் கூட்டம்.

    கச்சத்தீவில் மீனவர்கள் ஓய்வெடுக்கலாம், மீன் பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்று இந்தியா, இலங்கை இடையிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தாலும் அது இதுவரை ஒருமுறை கூட அமல்படுத்தப்படவில்லை. அந்தப் பக்கம் வந்தாலே கூட இலங்கைப் படை தமிழக மீனவர்களைத் தாக்குகிறது. பிறகு எதற்கு இந்த ஒப்பந்தம் என்ற கேள்வி எழுகிறது.

    இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது உலகமே பார்த்தது. அப்படி இருக்கையில், நமது எல்லைப் பகுதியில், இலங்கைக் கடற்படையும், சிங்கள மீனவர்களும் தொடர்ந்து நமது நாட்டு மீனவர்களைத் தாக்கும்போது அதை ஏன் இந்தியக் கடற்படை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் புரியவில்லை. ஒரு வேளை நாளை தீவிரவாதக் கூட்டம் ஒன்று தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை ரூபத்தில் வந்து தாக்கி ஊடுறுவினாலும் கூட நமது படையினர் வேடிக்கை பார்ப்பார்களா என்று கேட்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

    இலங்கையில் உள்ள தமிழர்களின் மறு வாழ்வுக்காகவும், இலங்கைத் தமிழ்ப் பகுதிகளின் மறு சீரமைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் பணத்தைக் கொட்டுகிறது இந்திய அரசு. இதுதொடர்பாக இந்திய அரசுத் தரப்பில் பலரும் இலங்கைக்குப் படையெடுத்துப் போய் பார்த்து வருகின்றனர். ஆனால் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நலன் குறித்து ஒரு துரும்பைக் கூட மத்திய அரசு எடுத்துப் போட முன்வராதது ஏன் என்பதுதான் புரியவில்லை.

    சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி இலங்கை மிரட்டுகிறதாம், இதற்காக இலங்கையை தாஜா செய்ய அது என்ன செய்தாலும் இந்திய அரசு தட்டிக் கேட்காதாம். இதற்காக நமது நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை படையினர் என்ன செய்தாலும் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோமாம். இந்திய அரசின் இந்த லாஜிக் சற்றும் புரியவில்லை.


    Posted by விழியே பேசு... at 10:23 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. ziawithu.blogspot.comJanuary 24, 2012 at 10:40 PM

      our state and central gov are shameless so v have to fight against the politics

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ▼  January (336)
      • கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்
      • இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்க...
      • கமலுக்கு ஜோடியாக் கேத்ரினா ?!
      • கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ...
      • என்ன இரண்டாவதா? முகம் சிவந்த தமன்னா!
      • ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ர...
      • காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
      • கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில...
      • '1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!
      • ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ...
      • ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்...
      • டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு
      • உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம...
      • கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது
      • தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்'...
      • மைக்கல் ஜாக்சன் வழியில் பிரபுதேவா 'ஆல்பம்' !
      • நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
      • "டாஸ்மாக்கும் கவிஞர் வாலியும்"
      • ஒரு கோடி ரூபாயும் : சிவபதி அமைச்சரான பின்னணியும்
      • பத்தாயிரம் கோடி பட டைரக்டருக்கு மிரட்டல்!
      • சூர்யா ஜோடி ! : ஹன்சிகா குஷி
      • டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கில் திடீர் திருப்பம்
      • காதல் முறிவு: நயன்தாரா, பிரபுதேவா சமரச முயற்சி தோல்வி
      • பாரதிராஜா - அமீர் : மோதல்! மீண்டும் பார்த்திபன்...?
      • அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருதா? அமைச்சர் எதி...
      • சசிகுமாருடன் இணைந்து பாலுமகேந்திரா இயக்கும் புதிய ...
      • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்: உ....
      • ஊழல்வாதிகளை விரட்டுவேன்: ராகுல்
      • தனுஷ், ஸ்ருதி நடிக்கவே இல்லை !
      • ராமேசுவரம் கோர்ட்டில் டைரக்டர்கள் சீமான்-அமீர் ஆஜர்
      • சசிகலாவுக்கு தங்கை கணவர் கைது
      • புயல் நிவாரண நிதிக்கு ஜெ.விடம் ரூ.10 லட்சம் கொடுத்...
      • ஆட்டம் போடும் அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயார...
      • இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்! - கூக...
      • விஜய் கட்சியில் கொள்கைப்பரப்பு செயலாளர் பதவிக்கு ர...
      • 'நண்பன்' உண்மை நிலை பட்ஜெட்டில் பாதியை வசூலித்தாலே...
      • காசு கேட்டால் 'சப்'புன்னு அடிச்சுருங்க...ராமதாஸ் அ...
      • 'வடசென்னை' பயிற்சிப் பட்டறை !
      • ஊழல் செய்பவர்களின் கன்னத்தில் அறைவதற்கு அன்னா ஹசார...
      • சசிகலா ஆதரவாளர்களின் ரகசிய செல்போன் பேச்சு: உளவுத்...
      • 'விஸ்வரூபம்'.. அடுத்து ?
      • ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் சினிமா படங்கள் அறி...
      • நண்பனில் நடிக்காததில் மகிழ்ச்சிதான்! - மாதவன்
      • இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் அற...
      • மீண்டும் சினிமா பிரவேசம்: நயன்தாரா-பிரபுதேவா காதல்...
      • மானமுள்ள தமிழன் எரித்தான் அப்துல் கலாமின் கொடும்பாவி
      • மத்திய அரசை எச்சரிக்கும் கருணாநிதி
      • ரூ. 2 கோடி கூலி...பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட!
      • ஆணை பலவீனமாக இருக்கிறது என்று தான் சொல்லணும் : கேரளா
      • 'அம்மா'வுக்கு இது தெரியுமா?
      • பூமியை தாக்கும் சூரிய புயல்: விஞ்ஞானிகள் தகவல்
      • தமிழக வியாபாரியுடன் நிச்சயம் நடந்ததா...: அசின்
      • ஈகோ இல்லை ! : கமல்
      • தள்ளிப் போகும் பில்லா-2, 3, சகுனி, !
      • இந்தி படத்தில் தனுஷ்
      • 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பில் தகவல்
      • எவ்வளவு தான் அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் தமிழன்! ...
      • ட்விட்டரில் பிரதமர்
      • தமிழக மீனவர்கள் மீது குண்டு வீச்சு இலங்கை அராஜகம்!!
      • நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி பு...
      • 'திஹார் தியாகத்திற்காக' கனிக்குக் கிடைக்குமா 'கனமா...
      • ரஜினி பெயரில் உலகின் முதல் ஆஃப் லைன் இணையதளம்
      • பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு
      • எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?-பிரதமருக்கு அன்ன...
      • விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?
      • காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்...
      • ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்...
      • 70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய ல...
      • கைதாகிறார் சிசிகலாவின் தம்பி திவாகரன்
      • 100 கோடியை நோக்கி !: நண்பன்
      • ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு : ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!
      • இலங்கையில் தமிழர்கள் முகாம்களுக்கு சென்று பார்வையி...
      • திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை து...
      • பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்: நடிகர் விஜய் பேட்டி
      • கோச்சடையானில் ரஜினியுடன் ஷோபனா!
      • மத்திய அரசிடம் இருந்து தப்பித்தது இணையத்தளங்கள் ..!
      • விஜய்யை அடித்ததால் ரசிகர்கள் கோபமா? -ஸ்ரீகாந்த்
      • ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்...
      • கொலவெறி குழுவோடு இணையும் ஆஸ்கர் விருது பெற்றவர் !
      • சூர்யாவால் விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் சண்டை
      • சந்தோஷத்தில் அருள்நிதி !
      • திவாலானது அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம்
      • அஜீத்திற்காக..! : ' போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்
      • ரஜினிக்கு பிறகு விஜய்...
      • ரஜினி அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய ...
      • புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை
      • ஜெ. அரசுக்கு அடி மேல் அடி!
      • இனி என் பெயரில் விருது வழங்க வேண்டாம்! - ரஜினி திட...
      • தனுஷுடன் இணைத்து கிசுகிசு - குமுதம் பத்திரிகைக்கு ...
      • அமெரிக்காவுக்கு யுவன் : பில்லா 2
      • முல்லைப் பெரியாறு:தமிழக இளைஞர் காங். பொறுப்பாளராக ...
      • சிம்பு படத்தில் ஷகீரா !
      • பூக்கடை - இல்லை !
      • விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!
      • துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !
      • நடப்பது திமுக ஆட்சி மாதிரியே இருக்கு-விஜயகாந்த் சாடல்
      • ராஜபக்சே அச்சமின்றி வாழ உதவும் காங்கிரஸ்-திமுக: பழ...
      • இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ...
      • வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ள...
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.