விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, January 20, 2012

    ஜெ. அரசுக்கு அடி மேல் அடி!


    அதிமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து சட்ட ரீதியாக பல்வேறு தோல்விகளை ஜெயலலிதா அரசு சந்தித்து வருகிறது. அதிமுக அரசின் பல முக்கிய முடிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தடைகளைச் சந்தித்துள்ளன.

    மே 16ம் தேதி 3வது மறையாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அதாவது மே 22ம் தேதி திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி அதை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    இதுதொடர்பாக, சமச்சீர் கல்விதிருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்திட்டத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூன் மாதம், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தமிழகஅரசின் சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. ஜூன் 14ம்தேதி இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1 முதல் 6ம் வகுப்பு வரை நடப்பாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர வேண்டும், பிற வகுப்புகளுக்கு இதை விரிவுபடுத்துவது தொடர்பாக 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. பின்னர் நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வி அமலாக்கப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது.

    இதுதான் ஜெயலலிதா அரசுக்கு கிடைத்த முதல் சட்ட அடியாகும்.

    இதைத் தொடர்ந்து நில அபகரிப்பு வழக்குகளில் கைதான பலரையும் அதிமுக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே போட்டது. ஆனால் பொட்டு சுரேஷ் உள்ளிட்ட பலரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று அதிரடி தீர்ப்புகள் வெளியாகின. இதனால் பொட்டு சுரேஷ் உள்ளிட்டோர் வெளியே வந்தனர்.

    அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அதி உயர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த மருத்துவமனை திட்டத்திற்குத்தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இதேபோல, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உயர் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் முடிவுக்குத் தடை விதித்தது. இன்று வரை இந்தத் தடை தொடருகிறது.

    அதேபோல 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும் ஒரே கையெழுத்தில் அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பணி நீக்கம் செய்ததற்கு இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது தமிழக அரசு. ஆனால் அதை சமீபத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டது.

    ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்த பிறகு சட்ட ரீதியாக விழுந்த இன்னொரு மிகப் பெரிய கொட்டு எது என்றால் அது இருளர் சமூகப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்தான்.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே போலீஸாரால் 4 இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அரசு பிரச்சினையை அமுக்கும் வகையில், நான்கு பெண்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அறிவித்தது. அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று இதை வழங்கினார்.

    ஆனால் குற்றம் இழைத்த ஒரு போலீஸ்காரர் கூட கைது செய்யப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாதாரண வழக்குகளிலெல்லாம் உடனடியாக கைது செய்கிறீர்கள். ஆனால் மிகப் பெரிய குற்றத்தை இழைத்துள்ள போலீஸ்காரர்களை இதுவரை கைது செய்யாமல் உள்ளீர்கள் என்று அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த வழக்கில் 2 முறை தமிழக அரசு உயர்நீதி்மன்றத்தில் குட்டு வாங்கியது. இருப்பினும் இதுவரை எந்தக் கைதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் போகும் சூழல்கள் உள்ளது.

    அதேபோல அதிமுக அரசுக்கு கிடைத்த இன்னொரு குட்டு, மதுரையிலிருந்து வந்தது. பரமக்குடியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதுவும் தமிழக அரசுக்கு கிடைத்த அடிதான்.

    இப்படி அடுத்தடுத்து முக்கிய பிரச்சினைகளில் அதிமுக அரசு தொடர்ந்து சட்ட ரீதியான அடி வாங்கி வருவது அதிமுக அரசின் சட்ட ரீதியான கையாளுதல்கள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.


    Posted by விழியே பேசு... at 2:45 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. AnonymousJanuary 20, 2012 at 5:32 PM

      பெண் புத்தி பின் புத்தியா? சோ சொல் கேட்டால் சோடை போவது நிச்சயம்.தமிழர்களுக்கு ஏன் இந்த (துர்)அதிஸ்டம்? நல்லாட்சி வருமா? வரும் ஆனா வராது.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ▼  January (336)
      • கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்
      • இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்க...
      • கமலுக்கு ஜோடியாக் கேத்ரினா ?!
      • கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ...
      • என்ன இரண்டாவதா? முகம் சிவந்த தமன்னா!
      • ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ர...
      • காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
      • கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில...
      • '1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!
      • ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ...
      • ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்...
      • டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு
      • உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம...
      • கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது
      • தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்'...
      • மைக்கல் ஜாக்சன் வழியில் பிரபுதேவா 'ஆல்பம்' !
      • நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
      • "டாஸ்மாக்கும் கவிஞர் வாலியும்"
      • ஒரு கோடி ரூபாயும் : சிவபதி அமைச்சரான பின்னணியும்
      • பத்தாயிரம் கோடி பட டைரக்டருக்கு மிரட்டல்!
      • சூர்யா ஜோடி ! : ஹன்சிகா குஷி
      • டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கில் திடீர் திருப்பம்
      • காதல் முறிவு: நயன்தாரா, பிரபுதேவா சமரச முயற்சி தோல்வி
      • பாரதிராஜா - அமீர் : மோதல்! மீண்டும் பார்த்திபன்...?
      • அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருதா? அமைச்சர் எதி...
      • சசிகுமாருடன் இணைந்து பாலுமகேந்திரா இயக்கும் புதிய ...
      • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்: உ....
      • ஊழல்வாதிகளை விரட்டுவேன்: ராகுல்
      • தனுஷ், ஸ்ருதி நடிக்கவே இல்லை !
      • ராமேசுவரம் கோர்ட்டில் டைரக்டர்கள் சீமான்-அமீர் ஆஜர்
      • சசிகலாவுக்கு தங்கை கணவர் கைது
      • புயல் நிவாரண நிதிக்கு ஜெ.விடம் ரூ.10 லட்சம் கொடுத்...
      • ஆட்டம் போடும் அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயார...
      • இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்! - கூக...
      • விஜய் கட்சியில் கொள்கைப்பரப்பு செயலாளர் பதவிக்கு ர...
      • 'நண்பன்' உண்மை நிலை பட்ஜெட்டில் பாதியை வசூலித்தாலே...
      • காசு கேட்டால் 'சப்'புன்னு அடிச்சுருங்க...ராமதாஸ் அ...
      • 'வடசென்னை' பயிற்சிப் பட்டறை !
      • ஊழல் செய்பவர்களின் கன்னத்தில் அறைவதற்கு அன்னா ஹசார...
      • சசிகலா ஆதரவாளர்களின் ரகசிய செல்போன் பேச்சு: உளவுத்...
      • 'விஸ்வரூபம்'.. அடுத்து ?
      • ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் சினிமா படங்கள் அறி...
      • நண்பனில் நடிக்காததில் மகிழ்ச்சிதான்! - மாதவன்
      • இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் அற...
      • மீண்டும் சினிமா பிரவேசம்: நயன்தாரா-பிரபுதேவா காதல்...
      • மானமுள்ள தமிழன் எரித்தான் அப்துல் கலாமின் கொடும்பாவி
      • மத்திய அரசை எச்சரிக்கும் கருணாநிதி
      • ரூ. 2 கோடி கூலி...பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட!
      • ஆணை பலவீனமாக இருக்கிறது என்று தான் சொல்லணும் : கேரளா
      • 'அம்மா'வுக்கு இது தெரியுமா?
      • பூமியை தாக்கும் சூரிய புயல்: விஞ்ஞானிகள் தகவல்
      • தமிழக வியாபாரியுடன் நிச்சயம் நடந்ததா...: அசின்
      • ஈகோ இல்லை ! : கமல்
      • தள்ளிப் போகும் பில்லா-2, 3, சகுனி, !
      • இந்தி படத்தில் தனுஷ்
      • 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பில் தகவல்
      • எவ்வளவு தான் அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் தமிழன்! ...
      • ட்விட்டரில் பிரதமர்
      • தமிழக மீனவர்கள் மீது குண்டு வீச்சு இலங்கை அராஜகம்!!
      • நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி பு...
      • 'திஹார் தியாகத்திற்காக' கனிக்குக் கிடைக்குமா 'கனமா...
      • ரஜினி பெயரில் உலகின் முதல் ஆஃப் லைன் இணையதளம்
      • பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு
      • எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?-பிரதமருக்கு அன்ன...
      • விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?
      • காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்...
      • ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்...
      • 70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய ல...
      • கைதாகிறார் சிசிகலாவின் தம்பி திவாகரன்
      • 100 கோடியை நோக்கி !: நண்பன்
      • ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு : ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!
      • இலங்கையில் தமிழர்கள் முகாம்களுக்கு சென்று பார்வையி...
      • திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை து...
      • பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்: நடிகர் விஜய் பேட்டி
      • கோச்சடையானில் ரஜினியுடன் ஷோபனா!
      • மத்திய அரசிடம் இருந்து தப்பித்தது இணையத்தளங்கள் ..!
      • விஜய்யை அடித்ததால் ரசிகர்கள் கோபமா? -ஸ்ரீகாந்த்
      • ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்...
      • கொலவெறி குழுவோடு இணையும் ஆஸ்கர் விருது பெற்றவர் !
      • சூர்யாவால் விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் சண்டை
      • சந்தோஷத்தில் அருள்நிதி !
      • திவாலானது அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம்
      • அஜீத்திற்காக..! : ' போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்
      • ரஜினிக்கு பிறகு விஜய்...
      • ரஜினி அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய ...
      • புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை
      • ஜெ. அரசுக்கு அடி மேல் அடி!
      • இனி என் பெயரில் விருது வழங்க வேண்டாம்! - ரஜினி திட...
      • தனுஷுடன் இணைத்து கிசுகிசு - குமுதம் பத்திரிகைக்கு ...
      • அமெரிக்காவுக்கு யுவன் : பில்லா 2
      • முல்லைப் பெரியாறு:தமிழக இளைஞர் காங். பொறுப்பாளராக ...
      • சிம்பு படத்தில் ஷகீரா !
      • பூக்கடை - இல்லை !
      • விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!
      • துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !
      • நடப்பது திமுக ஆட்சி மாதிரியே இருக்கு-விஜயகாந்த் சாடல்
      • ராஜபக்சே அச்சமின்றி வாழ உதவும் காங்கிரஸ்-திமுக: பழ...
      • இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ...
      • வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ள...
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.