விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, July 24, 2011

    தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது; கோவையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு


    தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவையில் அறிஞர் அண்ணா வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எப்படிப்பட்ட முக்கியமான நேரத்திலே நாம் இங்கே கூடியிருக்கின்றோம் என்பதை நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு மாநிலத்தில் பெரிய பொதுத்தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இருந்து,

    நேர்மாறான விளைவுகளின் காரணமாக இன்று நாம், ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம்பெற்றிருக்கின்ற நிலையில், நாம் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கின்றோம்.

     இது யாரால் வந்த நிலை என்று சிந்திப்பதைவிட நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு இது என்று சொன்னால், அது கேள்விக்கு இடமில்லாத ஒரு உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள். நான் உணர்ந்த காரணத்தால்தான் இதைச் சொல்லுகின்றேன். ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தைத் தொட்டுப் பார்த்து, நெஞ்சைத் தடவிப் பார்த்து, தெரிந்து கொண்டிருக்கின்ற அந்த உண்மையை நான் மீண்டும் மீண்டும் இங்கே கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.

    ஏனென்றால், இன்றைக்குக் கழகம் புண்பட்டிருக்கின்றது. கழகம் புண்பட்டிருக்கிறது என்றால், நான் புண்பட்டிருக்கின்றேன். பொதுச்செயலாளர் பேராசிரியர் புண்பட்டிருக்கின்றார். கழகத்தினுடைய தளபதிகள் புண்பட்டிருக்கின்றார்கள். கழகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முன்னணி வீரர்கள் எல்லாம் புண்பட்டிருக்கின்றார்கள் என்பது அதற்கு பொருள்.

    ஆகவே, இந்தப் புண்ணை ஆற்றிக் கொள்ள, மீண்டும் தி.மு.க.வுடைய ஆற்றல் பெருகி, தி.மு.க. அகிலம் பரவ இருவண்ணக் கொடியை ஏற்றுகின்ற அந்தக் காலம் நிச்சயமாக வரும், வரவேண்டும் என்பதற்காகத்தான் நாம் மீண்டும் இன்றைக்கு பூஜ்யத்திலே இருந்து ஆரம்பிக்கின்றோம். இருபது பேரோ, இருபத்திரண்டு பேரோ சட்டசபையிலே இருப்பதாலோ, நாடாளுமன்றத்தில் சிலபேர் கழகத்தின் சார்பில் இடம் பெற்றிருப்பதாலோ நாம் பெரிய அளவிலே மகத்தான மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்ள முடியாது.

    இந்த இயக்கத்தை நடத்துவது, நடத்திக் கொண்டிருப்பது, நடத்தியதெல்லாமே, திராவிட சமுதாயத்திற்கு, திராவிட இனத்திற்கு ஏற்றமும் வெற்றியும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இன்றைக்கு ஒரு கட்சியினுடைய வெற்றி தோல்விகளால் ஒரு கொள்கை நிர்ணயிக்கப்படுகின்றது என்று யாரும் சொல்லமுடியாது. இப்போது வெற்றி பெற்றிருக்கின்ற அ.தி.மு.க. கட்சியின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால், ஆமாம், அந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

    யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, நமக்குக் கிடைத்திருக்கின்ற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, லட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, நம்முடைய சந்ததியினருக்கு, நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கக்கூடிய தோல்வி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.   அதனால்தான், இன்றைக்கு நீட்டி முழங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிட்டோம் என்றெல்லாம் சிலர் நம்மைப் பார்த்து கேலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

     ஆனால், நான் சொல்லுகின்றேன். இதை தோல்வி என்று கருதக்கூடாது. நாம் சந்திக்காத தோல்விகள் இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரையில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, ஒரே ஒரு இடத்திலேதான் நாம் வெற்றிபெற முடிந்தது. சென்னை துறைமுகம் தொகுதியிலே நான் ஒருவன்தான் வெற்றிபெற்று, அதையும் ராஜினாமா செய்துவிட்டு, அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், தனித்து எந்தவிதமான உதவியும் துணையுமின்றி நிற்க நேர்ந்தது. 

    அந்தக்காலத்திலேயேகூட, அந்த ஒரு தொகுதியிலே இருந்து தொடர்ந்து பல தொகுதிகளைப் பெற்று, ஆட்சியை அமைத்தோம் என்றால் மீண்டும் அந்தக் காலம் வராமலேயே போகாது. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற காரணத்தால், நம்முடைய கொள்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள், லட்சியங்கள், குறிக்கோள்கள் இவை எல்லாம் நிறைவேறுவதற்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    அந்த வெற்றி ஏதோ பத்து இடம், பதினைந்து இடம் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கிறோம் என்ற அந்த வெற்றியல்ல. அப்படிப்பட்ட வெற்றிக்காக நாம் பாடுபடவில்லை. நாம், எம்.பிக்கள் - எம்.எல்.ஏ.,க்கள் வரவேண்டுமென்று எண்ணுகிற அதேநேரத்தில், அந்த எண்ணிக்கையின் காரணமாக நம்முடைய கொள்கை வளர வேண்டும், கொள்கை வலுத்திட வேண்டும், லட்சியம் ஈடேற வேண்டும் என்பதை சேர்த்துத்தான் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம்.   இன்று நான், இங்கே எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம் பார்க்கின்றேன்.

    அவர்களைப் பார்த்து, எப்போது வந்தீர்கள் என்று கேட்பதற்குக்கூட என்னுடைய மனம் அவ்வளவு துணிவைப் பெறவில்லை. அந்தளவிற்கு தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் வா என்று அழைக்கப்படுவர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தார் - அண்ணாவின் தம்பிகள் இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியை நான் காணுகின்றேன். அதற்காக நாம், நிலைகுலைந்து போய்விடவில்லை.

    இந்த நிலையிலும்கூட, நம்முடைய செயற்குழுக் கூட்டத்திற்கு, இந்த மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு, இங்கே வந்திருக்கின்றீர்கள் என்றால், தி.மு.க.வை யாரும், எந்த நேரத்திலும் அழித்துவிட முடியாது. "எவரும் அழிக்க முடியாது''   திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எஃகுக் கோட்டை. அது ஊதி, ஊதி அலைக்கழிக்கப்படுகின்ற துரும்பல்ல.

    இது தூண். இந்தத் தூணை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது என்பதை, இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக, பெரியாருடைய காலத்திலிருந்து, அறிஞர் அண்ணாவினுடைய காலத்திலிருந்து, இன்றைக்கு நம்முடைய காலம் வரை, எவ்வளவு அக்கிரமங்களை - போட்டிகளை நாம் சந்தித்து, இந்த தியாக உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நிரூபித்து, நாம் நம்முடைய கொடி நிழலில், கொள்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

    நான் கேட்கின்றேன். நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி, தி.மு.க.வுக்கு புதிய நெருக்கடி அல்ல. இன்றைக்கு வீரபாண்டி ஆறுமுகம் தேடப்படுகிறார் என்பது மாத்திரமல்ல. நானே தேடப்பட்டவன்தான். நம்முடைய கழகத்தின் முன்னணி வீரர்களெல்லாம் தேடப் பட்டவர்கள்தான். அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த திங்களிலேயே என்னை என்ன பாடுபடுத்தி, சிறையிலே அடைத்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

       எமர்ஜென்சியைவிட கொடுமையா இந்தியாவிலே வரப்போகிறது. தமிழ்நாட்டிலே வரப்போகிறது. எமர்ஜென்சியையே ஊதியவர்கள் நாம். இன்றைக்கு யாருக்கும் பயப்படமாட்டோம். அத்தகைய துணிச்சல் உள்ள சிங்கங்களாக, வீரர்களாக, வேங்கைகளாக இருக்கின்றோம். தி.மு.க.வின் தீரர்கள் - செயற்குழு உறுப்பினர்களாக இன்றைக்கு கூடியிருக்கின்றீர்கள். செயற்குழுவில் என்னென்ன திட்டங்களைத் தீட்ட வேண்டும். மேலும், கழக வளர்ச்சிக்கு என்னென்ன காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாளையதினம் பொதுக்குழுவிலே விரிவாக நாம் பேச இருக்கின்றோம்.

    அதற்கான தீர்மானங்கள் என்னென்ன, இருபத்தைந்து, முப்பது தீர்மானங்களுக்கு மேல், நாளைய தினம் (இன்று) நிறைவேற்றப்பட இருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் எப்படி அமையவேண்டும் என்பதற்கான அடித்தளத்தை இன்றைக்கு நீங்கள் அமைத்துத் தரவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். அதற்குத்தான் இந்த செயற்குழு.   இந்தச் செயற்குழுவிலே இன்றைக்கு போடப்படுகின்ற அடித்தளம், நாளைய பொதுக்குழுவின் தீர்மானங்களாக வெளிவரும்.

    "இனி பொறுப்பதில்லை'' என்ற பாரதியினுடைய வாசகத்தை மனதிலே பதிய வைத்துக் கொண்டு, பொறுப்பதில்லை என்று சொல்வதிலிருந்து, அந்த நிலையை அடைய, வென்றிட, வாகை சூடிட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நிர்ணயிக்கின்ற குழுவாகத்தான் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற பொதுக்குழு அமையவிருக்கின்றது. அதற்கேற்ப இந்தச் செயற்குழுவிலே உங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, என்னுடைய முன்னுரையை நிறைவு செய்கின்றேன்.

    இவ்வாறு கருணாநிதி கூறினார்.



    Posted by விழியே பேசு... at 9:56 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ▼  July (498)
      • ராசாத்தி அம்மாளின் கணக்குப் பிள்ளை கைது
      • நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டு வெளியேற்ற கோரி...
      • 2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாத...
      • கருணாநிதியின் இலங்கை 'ஆதரவு'ப் பேச்சு!
      • 'ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர், சோனியா, ...
      • வீரபாண்டியாருக்கு 'ராயல் சல்யூட்'-போலீசார் அதிரடி ...
      • 'நல்ல நேரம்' பார்த்து ராஜினாமா கடிதத்தை கத்காரிக்க...
      • தமிழ் இனத்தை அழித்த பழியை சுமக்கும் இந்தியா-இலங்கை...
      • கேரள மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மேலும் 7 பேர் கைது
      • ஒரு திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்ட...
      • சென்னை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்பட 12 பேர் ம...
      • கேரளாவுக்கு சாதகமான அணை பாதுகாப்பு மசோதா-ஜெ. கடும்...
      • கணவருடன் செல்ல மறுத்த நடிகை: குழந்தைகளை கண்டதும் ம...
      • ஜெயலலிதாவின் குரலுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்ட...
      • அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!
      • நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!
      • உள்ளாட்சித் தேர்தலில் பாமக- விடுதலைச் சிறுத்தைகள் ...
      • மதுரை இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பெண் புரோக்கர் ...
      • அத்துமீறிப் போகிறது அதிமுக அடக்குமுறை: கருணாநிதி
      • ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...
      • என் ரசிகர்களை தாக்கவேண்டாம், என்னை தாக்குங்கள்...!...
      • மு.க. ஸ்டாலின் கைது
      • திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது
      • 'சதமடித்தார்' சச்சின் டெண்டுல்கர்!
      • தான் ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி: பேஷன் ந...
      • நிலத்தை கேட்டு அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த ம...
      • கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
      • 'பிட்' படம் வாங்கல்லியோ பிட் படம் : வாங்க ஆளில்லை...!
      • விஜய்-கவுதம் இணையும் புதிய படம்
      • காலாவதியாகும் பழைய ரேஷன் கார்டுகள்- புது அட்டை தரப...
      • அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்!
      • சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!
      • சினிமாவில் அரசியலை கலக்க கூடாது: அஜீத் பேட்டி
      • அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!
      • இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...
      • தமிழர்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்து எரிந...
      • வேலாயுதம் இசை வெளியீட்டு தேதி!
      • செய்திச் சுருக்கம்: ஜூலை 28, 2011
      • சென்னை மேயரை கண்டதும் தமிழக அமைச்சர் ஓட்டம்
      • தளபதியின் தம்பி திடீர் மரணம் : அஞ்சலி செலுத்த அனு...
      • கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக...
      • கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்
      • லோக்பால் மசோதா: பிரதமர், நீதித்துறைக்கு விலக்கு!
      • ஆக 5-க்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க வேண்டும்- உ...
      • கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட...
      • எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...
      • மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...
      • தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார்-எஸ்.ஏ.சந்திரசேகர்...
      • நான் 'கஜினி' இல்லை- கல்மாடி 'அலேக்' பல்டி!
      • வீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...
      • தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்!
      • வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு
      • அழகிரியின் கூட்டாளி தளபதி மீதும் பாயுமா குண்டர் சட...
      • மாணவச் செல்வங்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிக்க வே...
      • தமிழக அரசு தவறு செய்து விட்டது- அரசு வக்கீலின் 'சே...
      • 2 வருடமாக அறையில் அடைத்து கற்பழிப்பு: முக்கிய புள்...
      • திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க.
      • இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்
      • ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து... 'பசு' நடிகராலும் ...
      • ஆசிரியர் அடித்து மாணவர் மரணம்: சகமாணவர்கள் சாலை மற...
      • சேற்றில் மூழ்கிய தீபிகாபடுகோன் - கே.எஸ்.ரவிகுமார்
      • கொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்!
      • திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்- பாமக பொது...
      • சுக்கல் சுக்கலாக சிதறப் போகிறது அல் கொய்தா!
      • மலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...
      • 2ஜி ஊழலுக்கு அமைச்சரவைதான் பொறுப்பேற்க வேண்டும்: ச...
      • பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த்...
      • விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து...
      • டீன் ஏஜ் பெண்களை கவனமா பார்த்துக்கங்க
      • மங்காத்தா - 19; வேலாயுதம் - 31 ?
      • தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் உருவபொம்மை எர...
      • கட்சி நிர்வாகிகள் பரிசளித்த துணியால் ஷூவை துடைத்த ...
      • ஆபாசம் - வன்முறை படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது:...
      • இலங்கை தமிழர்களுக்காக துப்பாக்கியை தூக்க வேண்டாம்;...
      • முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!
      • சரிந்த செல்வாக்கு, தகர்ந்த கனவுகள்... தவிப்பில் மம...
      • மோட்டார்சைக்கிள் ஓட்டி அசத்திய நடிகை கேத்ரீனா கைப்
      • ஆபாச பாட்டு... அமீர் கானுக்கு நோட்டீஸ்!
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு விஜயலட்சுமி விவகாரம...
      • இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது!: கி.வீரமணி
      • சமச்சீர் கல்வி கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட...
      • இந்தியா வந்தார் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா
      • தலித்களின் வீடுகளை இடித்து, நிலத்தை ஆக்கிரமித்த ரா...
      • ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு
      • ஈவ் டீசிங்: பிளஸ்-2 மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் தலை...
      • போலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்!
      • கருணாநிதியின் முன்னாள் உதவியாளர், ஜாபர்சேட் வீடுகள...
      • முதலில் பிரதமரும், சிதம்பரமும் பதவி விலகட்டும்: எத...
      • கும்பலாக விபச்சாரத்தில் ஈடுபடும் இலங்கை டிவி நடிகை...
      • முதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...
      • 2ஜி: பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை-நீதிமன்றத்தி...
      • கலாநிதி மாறன் இன்று காவல் நிலையத்தில் ஆஜராவாரா?
      • ரவிச்சந்திரன் நடித்த முதல் படத்தில் நான்தான் அவருக...
      • பதவிக்காக மட்டும் வாழக்கூடாது: டி. ராஜேந்தர்
      • குற்றவாளி, தன்னை காத்துக்கொள்ள கூறும் புகார்;ஆ.ராச...
      • நான் இயக்கும் படத்தில் குறளரசன் கதாநாயகனாக நடிக்கி...
      • ராஜபக்சேக்கு எதிராக விஜய் ஏன் கையெழுத்து போட மறுக்...
      • திருச்சி: 50 குழந்தைகள் சிசு கொட்டி கிடக்கும் காட்...
      • வீட்டை ஆக்கிரமித்ததாக புகார்: நடிகர் கைது
      • கலைந்தது விஜயின் வேஷம் : ராஜபக்சேவை தண்டிக்க கோரி ...
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.